Tuesday, April 23, 2024

காரைக்கிணறு கழிச்சேன்

சித்திரை உற்சவம் பற்றி எழுதுவதை பலரும் படிப்பதில் மகிழ்ச்சிசிலர் எந்தப் புத்தகம் என்று கேட்கிறார்கள்குறிப்பிட்ட புத்தகம் என்று இல்லைபல இடங்களில் (புத்தகம்கல்வெட்டுதரவுகள்ஆராய்ந்து எழுதுகிறேன்நன்றி.. 🙏


இன்று எதிர்சேவை பற்றி.. 



நேற்று நாயக்கர் மாசி திருநாளை சித்திரைத் திருநாளா மாற்றியது பற்றி பார்க்கும் போதே அழகர் வந்ததுனாலஅவரை நேர்ல போய் பார்க்கலாம்னு போனாஎப்பவும் சொல்ற அதே டயலாக் தான் 'போனவருஷத்த விடகூட்டம் அதிகம்எமைக்க முடியலசாமி அதுக்குள்ள அம்பலகாரர் மண்டகப்படி வந்திருச்சுஎன்று கூடநடந்து வந்தவர்கள் சொன்னார்கள்.


எதிர் சேவை - அதாவது எதிர் கொண்டு சேவை சாதிப்பதுசேவை தருவது/பெறுவதுமுன்னரே சொன்னதுபோல் இப்போது நடத்தப்படும் உற்ஸவங்கள் பெரும்பாலும் நாயக்கரின் வருகைக்குப் பின் வந்திருக்கலாம்நேற்றுஉண்மையில் எதிர் சேவை தான்நாங்க அவரை நோக்கிப் போக அவர் என்னை நோக்கி வர நம்மாழ்வார்சொன்ன மாதிரி 'என்னில் முன்னம் பாரித்து'ன்னு அவர் வேக வேகமா நம்ப கிட்ட ஓடிவந்தாருதூரத்தில்அனுமாரின் பச்சைக் கொடி தெரிந்தது,சரி அப்போ அவரு அங்க தான் இருக்காருன்னு போனேன்.. 


அம்பலகாரர் மண்டகப்படி - விசாலமான கல்மண்டபம்தற்போது பாலம்கட்டியதால் அதன் அழகுகுறைந்திருந்தது.சில வருடம் முன்பு வரை இருட்டற நேரத்துல அதன் வாசலில் நடக்கும் வான வேடிக்கைபார்க்கவே கூட்டம் வரும்.இப்போ வெயிலோடு முடிகிறது


அழகர் வெளியே வந்து கொண்டிருந்தார்.. டன் டன் என்ற மணி சப்தத்தோடு 'வாராரு வாராரு அழகர் வாராருபாடல் விண்ணைப் பிளக்கஇளசுகள் எல்லாம் குத்தாட்டம் போட்டார்கள்..நவவித பக்தில இதுவும் ஒன்னுதான்எங்க அழகருக்கு அது தான் பிடிச்சிருக்கு.. கள்ளர் திருக்கோலம்.. ஏன் மதுரைக்குள்ள வரும் போதுஇப்படிவிழா நடத்தியது நாயக்கர் தானகொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போகலாமா?.. 


இப்போ நிக்கிற இடத்திலிருந்தே போகலாம்.. அம்பலகாரர்கள் - நாட்டுத் தலைவர்கள்ன்னு சொல்லலாம்ஒருகுறிப்பிட்ட ஜாதி/இனக் குழுவிற்குத் தலைவர்கள்.அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளைத்தீர்த்துவைப்பவர்கள்சமயங்களில் நாட்டளவில்..முதத்தரையர்கள்கள்ளர் பிரிவில் இவ்வாறுஇருந்திருக்கிறார்கள்.அதாவது பெரிய வீட்டுக்காரரு..


இங்க நாயக்கருக்கு போர் சமயங்களில் இவர்கள் மிகவும் உதவியிருக்கிறார்கள்.அந்த வகையறாவில் ஒருவர்மண்டபத்திற்குத் தான் அழகர் நுழைகிறார் மதுரையில்அப்படி வர அழகர் கள்ளர்கள் (மேலை நாடுமேலூர்பகுதிகீழை நாடு - சிவகங்கை பகுதிஅணியும் அணிகலன்களை அணிந்தே வருகிறார்அப்படி என்ன? - வண்டிக்கடுக்கன்,வளரித்தடிகம்புமறக்கொண்டைதண்டை.. 


அது எப்படி இருக்கும் - வண்டிக்கடுக்கன் காது மடலோடு ஒட்டியதில்லைமிகப் பெரிய காது வளையம்,  அடிப்புறத்தில் கல்வைத்துக் கட்டப்படுகிறதுவளரித்தடி(Vellari Thade/ Boomrang) ஆங்கிலேயர்கள் வியந்தஒருவகை ஆயுதம்தடி போன்ற கம்புகீழ் நாட்டுக் கள்ளர் ஆண்கள் இடுகின்ற கொண்டைதலையில் உருமால்/தலைப்பாகை - இவையே கள்ளர் வேடத்தின் தோற்றமாகும்அழகரும் அந்தக்கால கள்ளர் மரபின்தோற்றத்தையே புனைந்து வரும் செய்தி உறுதிப்படுகிறதுஅதாவது 'பெரியாம்பளஎன்று சொல்லும் மூத்தவர்போல..


'செயி வளரி தன்னைத் திருமால் முதலையின் மேல் பேசிவிட்ட சக்கரம் போல்..என்ற அம்மானைப் பாடல்ஒன்று சொல்கிறதுஇங்க அழகரும் சக்கரத்திற்குப் பதிலா வளரி கொண்டுவந்தார் போல..இரண்டும் போனாதிரும்ப எய்தவரிடமே வரும்.. 


சரிஅழகர் ஏன் அப்படி வரணும்?.. இது திருமலை நாயக்கருக்கு சிறிது காலம் கழித்து வந்திருக்கலாம் என்றுயூகிக்கமுடிகிறது.கல்வெட்டுக்களிலோ,ஆழ்வார் பாசுரங்களிலோ இந்த அணிகலன்கள் பற்றிய செய்திகள்இல்லை.அழகர் கிள்ளை விடு தூது கூட இவை பற்றிச் சொல்லவில்லைஇந்த கள்ள வேடம் 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதாய் இருக்கலாம்இது தொடர்பான செய்தி நாட்டுப்புற அழகர் வர்ணிப்புப் பாடல்கள்மூலம் கிடைக்கிறது


முன் காலத்தில் அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் அழகர் ஊர்வலம் கள்ளர்களால்வழிமறிக்கப்படுகிறது.அழகர் நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.எங்கும் ஒரே கலவரம்சற்று நேரத்தில்கொள்ளை கூட்டத்தலைவனுக்கு இரு கண்களும் பார்வை இழந்துவிடுகிறது.அவர்கள் நிலையை உணர்ந்துஅழகரிடம் வேண்டுகின்றனர்.


அழகர் அவர்களை மன்னித்துஅங்கே பிரசன்னமாகி 'மலை திரும்பும் வரை கோவில் உண்டியல்களை காக்கும்பொறுப்பை/மிகப்பெரிய கைங்கர்யத்தைக் கொடுக்கிறார்'. தலைவனுக்கும் கண்பார்வைவருகிறது..அவர்களும் தங்களின் அணிகலன்களைத் தந்து அவற்றை அழகர் அணிந்து அறுவென்றும் என, "தமர்உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானேஎன்று ஆழ்வார் சொன்னது போல் அவர்கள் சொல்வதை அழகரும்ஏற்றுக்கொண்டு அவர்களின் உருவத்தைத் தானும் பூண்டு கள்ளழகராகவே மதுரை வருகிறார்


இது தொடர்பாக ஒரு சிறு சடங்கு மட்டுமே இப்பொழுதுநடைபெறுகிறதுஇது 17ம் நூற்றாண்டின்பிற்பகுதியில் நடந்திருக்கலாம்இது நடந்தது கள்ளந்திரி மண்டபம் அல்லது காரைக்கிணறு என இருகருத்துக்கள் உள்ளன.


இது சம்பத்தப்பட்ட அழகர் வர்ணிப்புப் பாடல் வரிகள்.. (காயாம்பு என்றே அழகரை நாடார் அழைப்பது இங்குவழக்கம்.. 'காயாமலர் வண்ணன்என்றே ஆழ்வாரும் சொல்கிறார்)


கள்ளர் வழி மறித்து - காயாம்புமேனியை கலகமிகச்செய்தார்கள் வள்ளலாரப் போது ... 

நரசிங்க மூர்த்தி இப்போது கள்ளருக்கு கண்ணு தெரியாமலப்போ - என் செய்வோமென்று கள்ளர் மயங்கிநின்றார் ** புண்ணாகி நொந்து கள்ளர்காயாம்பூ மேனியிடம் புலம்பியேயெல்லாரும் வழிவம்சமாய்நீலமேகத்திற்கு வந்தடிமை செய்யுகிறோம் ஒளிவு தெரியும் படி திறக்க” என வேண்ட  


உடனே அழகர் "நான் வண்டியூர் சென்று மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை என் உண்டியலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டார்


"காரைக்கிணர் கடந்தார் - என்னையன் கள்ளர் பயமே தீர்ந்தார்"; "காரைக்கிணறு கழிச்சேன் - கள்ளர் வேஷம்போட்டேன் போட்டேன்என்ற வரிகள் மற்றோர் பாடலில் வருவதால்இந்நிகழ்வு காரைக்கிணறு பகுதியில்நடந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதுகாரைக்கிணறு என்ற சிற்றூர் அருகில் உள்ளது. 


அழகரின் இந்த கள்ளர் வேடத்திற்கு நாயக்கர் கால அரசியல் ரீதியாக பல காரணங்கள் சொன்னாலும்அழகர்நம்மாழ்வார் சொன்ன '..திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து..என்றவரிகளை மெய்ப்பிப்பதாகவே தெரிகிறது


கள்ளழகர் அம்பலகாரர் மண்டகப்படியிலிருந்து மற்ற மண்டபடிகளுக்கு வரஅனுமார் பச்சைக்கொடியோடுநாங்களும் ஓடிக்கொண்டிருந்தோம்.அங்கே வாசலில் பெரியவர் ஒருவர் அழகரின் அருள் வேண்டி தள்ளாதவயதிலும் தடியோடு நின்று கொண்டிருந்தார்அவரைச் சூழ்ந்து போட்டோ கிராஃபர்கள் அழகரைப் படம்எடுத்துக் கொண்டிருந்தார்கள்


சுருக்க எழுதியே மற்றதை கவர் செய்ய முடியவில்லை... 


அடுத்து - (திருமாலைஆண்டான்ஆயிரம் பொன் சப்பரம்பேசும் பெருமாள்-தீர்த்தவாரி.. 

-- கிரி 04/23, குதிரை வாகனம்வண்டியூர்


வளரித்தடி 



வண்டிக்கடுக்கன், கொண்டை 






தண்டை 


  






Monday, April 22, 2024

சித்திரை திருத்தேர் மாசி வீதிகளில்

 04/22 - மீனாட்சி திருத்தேர் - சித்திரை மாசம் ஏன் மாசி வீதியில் தேர்??


பொ.யு.1630-லிருந்து மதுரையில் தங்கி நாயக்கர் நிறைய கோவில் திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.
மதுரையில் இன்னொரு சிறப்பு என்னன்னா, கோவிலைச் சுற்றி இருக்கற வீதிகள் எல்லாம் தமிழ் மாதத்தின் பேர்ல இருக்கும். ஆடி வீதி,சித்திரை வீதி,ஆவணி மூல வீதி, மாசி வீதின்னு தான் இருக்கும். இது அந்தந்த மாதங்களில் நடக்கும் மீனாட்சி கோவில் திருவிழாவோட சம்பந்தபட்டதா இருக்கும்.உதாரணமா ஆவணி மூல திருவிழா ஆவணி மூல வீதிகளில் தான் நடக்கும்.

சரி, இப்போ பேக் டு நாயக்கர் காலம்.. அப்போ மீனாட்சி கோவில் தேர் சரியா இல்லாததால புதுசா தேர் செஞ்சாரு. மதுரைல எப்பவுமே மீனாட்சி-சொக்கநாதர், பிரியாவிடைன்னு வாகன புறப்பாடும் தனியா தான் நடக்கும். அதனால நாயக்கர், தேர்கள் முழுதும் திருவிளையாடல் புராணம் இருக்கற மாதிரி 2 பெரிய தேர்கள் செய்யறாரு. மாசி வீதி பெரியது. அதுல தேரோட்டம் நடக்கற மாதிரி தேர் செஞ்சாச்சு.மாசி மாதம் திருக்கல்யாணம் நடக்கும்.அதோட சேர்த்து திக் விஜயம், செங்கோல் வாங்கறது எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. தண்டோரா வெச்சு பக்கத்து கிராம ஊர்களில் எல்லாம் மக்களை அழைத்து மாசி மாசம் தேர் இழுக்க ஏற்பாடு செஞ்சா, தேர் வடம் பிடிக்க குறைஞ்ச மக்களே வராங்க.மாசி மாசம் சில ஊர்கள்ல அறுவடை முடியலன்னு தெரிஞ்சு, தேர் திருவிழாவை சித்திரைக்கு மத்தினாரு நாயக்கர்..

அப்போவாவது மக்கள் வந்திருவாங்கன்னு பார்த்தா, பக்தர்கள் எல்லாம் தேனூர் போறாங்க. அங்க தான் நம்ப அழகர் சித்திரை உற்ஸவத்திற்கு போறாரு. ஆமாம், அந்த நாட்களில், அழகர் கோவிலிருந்து கிளம்பி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, கொண்டமாரி, பரவை, சமயநல்லூர் வழியா தேனூர் வைகைக்கரை மண்டபத்துல இருந்து சைத்திர உற்ஸவம் கண்டருள்வார். அதனால அந்த கிராமம் மக்கள் எல்லாரும் மதுரை வர முடியல. வேற வழி இல்லைன்னு நினைச்சு நாயக்கர் அழகரை மதுரைக்கு எழுந்தருளப்பண்ண வழி செய்யறாரு.. ஆனா பழைய வழில இருக்கற மக்கள் உடன்படணுமே.

அதுக்கும் நாயக்கர் கிட்ட ஒரு சொலுஷன் இருந்தது. மதுரை வைகை மையத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதை தேனூர் மக்களுக்குக் கொடுக்கணும். அதுல அழகர் எப்படி தேனூர்ல இருப்பாரோ அது போல இருக்கட்டும்.மற்ற கிராம மக்களுக்கு மதுரை வைகையை ஒட்டி அவங்க ஊர்கள்ல இருக்கற மாதிரி மண்டகப்படி/திருக்கண் அமைக்க இடம் தர, மக்களுக்கும் ஏக சந்தோஷம். நாயக்கரே சொன்ன அப்பறம் வேற என்ன..

 இன்றும் அந்த வைகை மைய மண்டபம் உள்ளது, 21 தூண்களுடன், 10அடி உயரத்தில்..இன்றும் அந்த இடத்தின் பெயர் "ஆழ்வார் குளம் ".. ஆமாம் நாயக்கர் வைணவர். ஆனா அழகர் மட்டும் அங்க வரதில்ல.. மேலும் ஒரு நாயக்கரின் வருகைக்காக அந்த மண்டபம் காத்துக்கொண்டிருக்கிறது.ஆனா இன்னிக்கு  வைகையில் ஒரு கொட்டகையில் அழகர் எழுந்தருளும் ண்டபத்தின் பெயர் ‘தேனூர்மண்டபம்’ என்றே ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அப்படித் தான் மீனாட்சியின் மாசி விழா சித்திரைக்கு மாற, அழகர் விழா மதுரைக்கு மாறி, அழகரும் மதுரைக்கு விஜயம் செய்யறாரு. சைவ-வைணவ ஒற்றுமை, தங்கைக்கு கல்யாணம் பாக்க வாராருன்னு சொல்லறது எல்லாம் ~250 வருசமா வந்திருக்கும்.எது எப்படியோ வஞ்சக் கள்வன் மதுரைக்கு வந்தா போதும்..

இப்போ தெரியுதா - மாசி வீதியில் சித்திரைத் தேர் விழா ஏன்னு..

அடுத்து - எதிர் சேவை, ஆண்டாள் மாலை, ஆயிரம் பொன் சப்பரம், சாதிகளின் பங்களிப்பு, மானாமதுரையில் அழகர்.. . தொடரும்..  --கிரி (04/22), தேர்-எதிர்சேவை நாள்

Madurai_map_1.jpg


Madurai_map.jpg



image.png

Friday, November 24, 2023

ஏகாதசியும் ஏஎஸ்ஐயும்

ஏகாதசியும் ஏஎஸ்ஐயும்

நேற்று (11/23) கைசிக ஏகாதசி. மதுரையில் இந்தவாரம் ASI-யால் நடத்தப்படும் தொல்லியல் (குடைவரைக் கோவில் சம்பந்தமான) கண்காட்சிக்குப் போகலாம் என்றிருந்தேன். துவக்க நிகழ்ச்சி நடப்பது அவ்வளவு விவரமாய்த் தெரியாது.மறுநாள் தினமலர், ஸ்ரீ.கிருஷ்ணன் அவர்களின் ட்விட்டர் பக்கம், மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களின் உரை எல்லாம் பார்த்த போது தான், ச்ச மதுரையில இருந்தும் போகலையே என்று தோன்றியது. 

கைசிக ஏகாதசி என்பதால் வீட்டில் பெருமானுக்கு திருவாராதனம் முதலியன முடித்து கிளம்பினேன். ஆம், கோவிலுக்கு போவது போல, சுத்தமாய், ஏகாதசி விரதமிருந்து.. போற இடம் புனிதமானது, பாக்க போற விஷயமும் உன்னதமானது. ஆண்டாள் முதல் பாசுரத்தில் சொன்னது சொல் 'மதி' நிறைந்த நன்னாளாகப் பெற்றேன். 

இந்த கைசிக ஏகாதசிக்கு நிறைய சிறப்புகள் இருக்கு. திருக்குறுங்குடி நம்பி சன்னதியில், கைசிக பண்ணில் நம்பியைப் பாடி பாணன் ஒருவர் மோக்ஷம் பெற்றார், 'பாடிப் பறை' கொண்டு என்பது போல. 

12ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த பாரசர் பட்டர், கைசிக புராணம் வாசித்து பெருவீடு பெற்றார். இதை குருபரம்பரை இவ்வாறு சொல்கிறது - "ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து.....திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து....."

16ம் நூற்றாண்டு ஸ்ரீரங்கம் கல்வெட்டு ஒன்று, ஹாரீத கோத்திரத்து வேத வியாஸ பட்டர் வம்சத்தார் தந்த கொடை பற்றிச் சொல்கிறது. அன்று நம்பெருமாள் சித்திர மண்டபம் எழுந்தருளி 360 போர்வைகள் சாற்றிக்கொண்டு இருப்பார். இந்த போர்வை சாற்றுதல் அனைத்து வைணவ கோவில்களிலும் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நிறைய கொடைகள் தந்ததாக topographigal list/கோவிலொழுகு சொல்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளில் ASI கண்காட்சி செல்வது 'யாம் பெறும் சன்மானம்'. வீட்டிலிருந்து ~40 கி.மீ தூரம். இரண்டு பேருந்துகள் பயணம். தெப்பக்குளத்திற்கு 4ம் நம்பர் போகும். அந்த காலத்துல.. என்று அம்மா சொன்னதும், எனக்கும் அதே குழப்பம், இப்போது என்ன பேருந்தோ என்று. அங்கிருந்தே நடத்துனரிடம் விசாரிக்க '4ம், 32ம் போகும் தம்பி..இங்க தான் வரும்'. அவர்காட்டிய இடத்தில் இருந்தேன், நிமிர்த்தேன்.பச்சை நிற சிக்னலுக்கு நடுவே கூடல் அழகர் கோவில் 'அஷ்டாங்க விமானம்' தெரிந்தது. ஸம்ப்ரோக்ஷணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. பச்சை திரைச்சீலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தது. நம்ப தான் நுரைக்கே திரை கட்டிய ஊராச்சே.

சரி,இந்த அஷ்டாங்க அமைப்பு விமானத்தில் 8 உறுப்புகள் கொண்டதாய் அமையும். 6 உறுப்புகள் கொண்டது ஷடங்கம்.  "6 அங்கங்களுடன் உபபீடம், உபகிரீவம் சேர்ந்தது அஷ்டாங்கம்"என்கிறார் நாகஸ்வாமி அவர்கள். மதுரையில் கருவறை ஒன்றன் மீது ஒன்றாக 3 இருக்கும். குப்தர்கள் கோவிலில் இது போல் இருப்பதாய் படித்திருக்கிறேன்.  மஹாபலிபுரம் தர்மராஜா கோவில்,காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் இது போல் ஒன்றன் மேல் ஒன்றாக கருவறைகள் உள்ளது. அஷ்டாங்கம் ஆகம அடிப்படையில் இல்லை, கட்டிட அமைப்பில் தான் இந்த வேறுபாடு என்றும் கூறுவதுண்டு. முடிந்தால் ஸம்ப்ரோக்ஷணத்திற்குச் செல்லவேண்டுமென்று, நீண்ட காத்திருப்பிற்கு  பின் தெப்பக்குளம் நோக்கிக் கிளம்பினேன், கட்டபொம்மனைப் பார்த்துக் கொண்டே. 

கொஞ்சம் டெக்னாலஜியும் யூஸ் பண்ணலாம் என்று கூகிள் மேப் ஆன் செய்தேன். அது சைக்கிள் போகும் பாதை போல் மதுரையின் சந்துகளில் வழி காட்டியது. பேருந்து கியர் சிமெண்ட் சாக்கால் உரையிடப்பட்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் நடப்பவர்கள், ட்ரை சைக்கிள் ஓட்டுபவர்கள் எல்லாம் பேருந்து ஓட்டுனரின் கோவத்திற்கு ஆளானார்கள். நடத்துனர் 'மஹால், நாயக்கர் மஹால்..' என்று ஒரு சப்தம் போட்டார். திருமலை நாயக்கர் கையில் வாளோடு, நெற்றில் வைணவச் சின்னத்தோடு ஜன்னல் வழியே காட்சி தந்தார். மஹாலுக்கும் பழம் பெருமை உள்ளது. 'ஒரு பஸ் நடுவுல இல்லை. பூராம் இந்த 2 வீலர்.. எவ்வளவு நேரம் பாருங்க சார் இங்க வரதுக்கு..' என்று இறங்கப்போகும் என்னிடம் ஓட்டுநர் சொன்னது அந்த கூகுள் மேப் அம்மணியின் குரலுக்குப் பதிலாக. 


அலைகடலென இருக்கும் குளம். நாயக்கரால் கட்டப்பட்டது. பசேல் என்று மைய மண்டபம். இராணி மங்கம்மாள் கண்ட கனவும், சிறுவயதில் தண்ணீர் இல்லாத குளத்தில் நடந்து மைய மண்டபம் சென்று, பாட்டி, அம்மா என எல்லாருடன் நாங்களும் அமர்ந்து சாப்பிட்டதும் தான் என் நினைவுக்கு வந்தது. 'நேரா போய் லெப்ட்..' என்று சென்ட்ரல் நடத்தும் கண்காட்சிக்கு வழி சொன்ன செக்யூரிட்டி காட்டிய திசையில் பழைய ஞாபகத்தில் ரைட்ல் நடந்தேன். என்னை வளர்த்த தியாகராஜர் பொறியியல் கல்லூரி போன்றே அமைப்பு. தனியாக ஒரு அரங்கம். 

வழக்கமான அரசு கண்காட்சியில் இருக்கும் பெரியவர்களின் படங்கள் நம்மை வரவேற்கவில்லை. மாறாக 1000 வருடங்கள் பின்னால் சென்றது போன்று இருந்தது. துவார பாலகர்களின் சிற்பங்களோடு நுழைவு தூண்கள். உள்ளே, கையில் கரும்போடு மகிபாலன்பட்டி பிள்ளையார், அவர் பற்றிய குறிப்பு. பின், இந்திய குடவரை, தமிழக குடவரை, தென் தமிழக குடவரை என்று பகுத்து சிறப்பான விளக்கத்தோடு படித்துக் கொண்டே தொடர்ந்தேன். 

ASI ஆய்வாளர் திரு.முத்து அவர்கள் வந்து சிலவற்றை விவரித்தார். யாரோ ஒருவர் என்னுடைய கிராமம் நக்கீரர் பிறந்த ஊர் என்று தவறாய் போர்டு வைக்க, அதற்க்கு என்னுடைய RTIக்கு ASI விளக்கம் தந்ததும் பற்றிச் சொன்னேன். அதற்குள் நாயக்கர் கட்டிடக்கலை, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியிலுள்ள மண்டபங்கள், என் கிராமத்தில் உள்ள மங்கம்மாள் சாலை, பெரிய மேடு இத்யாதி என்று பேச்சு நீண்டது.கல்லூரியில் பயிலும் மேலும் இருவர் வர, நான் நகர்ந்தேன். 

குடுமியான் மலை., ஆஹா. அமைச்சர் சொன்ன அந்த இசைக்கல்வெட்டு பற்றி படத்தோடு, 'எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய' என்று கடைசி வரி, அதற்குரிய விளக்கம். வீர வைணவன் அல்ல, இருந்தாலும் எனக்கு என்னமோ 'அஷ்டாசரம் ஏழு உலகத்திற்கும் உரியது' என்றே தோன்றியது :).



தொடர்ந்து கீழ குடைவரைக்கோயில் (திருச்சி), மலையக்கோயில் (புதுக்கோட்டை), பிள்ளையார்பட்டி, திருவெள்ளறை, திருப்பைஞ்ஞீலி (திருச்சி), தான்தோன்றிமலை, மலையடிப்பட்டி கோவில்கள், குண்ணாண்டார் கோவில், நார்த்தாமலை, அரிட்டாபட்டி, மாங்குடி, திருக்கோகர்ணம் என்று போய்க்கொண்டிருந்தேன். என்னையும் மறந்து அந்த இடங்களுக்கே சென்றது போல் இருந்தது. திடீரென்று ஒரு பறவை தூது சென்றது போல் இருந்தது.. அட ஆமாம், 'மெய்யானை மெய்ய மலையானை, சங்குஏந்தும் கையானை ' என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த 'திருமெய்யம் குடவரை'."விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே" என்று ஆழ்வார் சொல்கிறார். அதாவது 'இப்பாலையான பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கினபடியாலே பாலைநிலமான ஸம்ஸாரத்துக்குத் தலைவனானவனை' என்று பெரியவாச்சான் பிள்ளை வியக்காயனம் செய்கிறார். இவற்றை மனதில் அசைபோட்டுக்கொண்டு நகர்ந்தேன். அப்போதே நேரம் 5யை நெருங்கிக்கொண்டிருந்தது. பாறைக்குளம், அயன்குடி, தேவர்மலை, பிரான்மலை, திருக்கோளக்குடி,குன்றக்குடி, மாங்குளம், குன்னத்தூர்,  திருப்பரங்குன்றம், ஆனைமலை, செவல்பட்டி என்று வேகமாக நடந்தேன். 





அதற்குள் பள்ளி மாணவர்கள் இருவர் வர, அவர்களுக்கு சில குடவரை பற்றி விளக்கினேன். விஷ்ணு அருகில் கருடன் நின்று வணங்குவது போன்ற சிற்பம், அதற்கான மாதிரி இவற்றைக் காட்டி சொன்ன போது அவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆழ்வாரின் (தலைவி) தூதுவனாக தலைவனிடம் கருடன் வந்தது போலவே எனக்குத் தெரிந்தது. கருடன் முகத்தில் அவ்வளவு பவ்யம். எனக்கு ''பொன்னுலகாளீரோ.." (6-8-1) என்ற திருவாய்மொழியில்  'நன்னலப் புள்ளினங்காள்..' என்ற சொல் தான் நினைவிற்கு வந்தது. புள்ளினங்காள் என்று ஆழ்வார் பொதுவாகச் சொன்னாலும் நன்னலம் என்பதால் ஞான-அனுஷ்டானம் நிரம்பப்பெற்ற (ஆசார்யன்) என்று சொல்லலாம். அது இந்த கருடனுக்குப் பொருந்தும். இந்த குடவரை ஆழ்வாரின் வாக்கின் படியே 'கருடன் விடு தூதாய்' அமைந்தது போலும். (புள் - கருடன் -புள்ளரையன் கோவில்) 




நடுவில் கல்வெட்டில் படி எடுப்பது பற்றிய விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் திரு.பழனிகுமார் அவர்கள்.பள்ளி மாணவர்கள் தானும் செய்ய வேண்டும் என்று ஆர்வமாய் கை நீட்டினர். 3D ஹோலோகிராம் மூலம் சித்தன்ன வாசலுக்கே அழைத்துச் சென்றனர் ASI குழுவினர். நானும் உணர்ச்சி வசப்பட்டு சித்தன்ன வாசல் தூணை தொடச் சென்றேன், அது அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியர் என்று குரல் வந்தது. சில மாணவர்கள் அங்கு நடந்த கட்டுரைப்போட்டி முடித்துக்கொண்டு வந்தனர். 



விட்ட இடத்திருந்து மீண்டும் தொடர்ந்தேன்.என் தோற்றத்தைப் பார்த்து வெளிநாட்டவர் என்று நினைத்தார் போல ஒரு மாணவன். என்னருகில் ஓடி வந்து ' திஸ் ஸ் அவர் தமிழ் கல்ச்சர்' என்று ஆங்கிலத்தில் அந்த குடைவரை படங்களைக் காட்டி உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார்.'தம்பி நானும் தமிழ் தான்பா..' என்று சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே நகர்ந்தோம். 

அனைத்து குடவரை படங்களிலும் அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று structure, க்யூஆர் கோட், அந்த இடத்தை பற்றிய மேப், தேவையான இடங்களில் சங்ககாலப் பாடல், அந்த கோவிலில் சிறப்பு அம்சம் பொருந்திய ஒன்று என்று பெரிய விளக்கங்கள், அந்த குடவரை போலவே மாதிரிகள் எல்லாம் கண்டிப்பாக பொறுமையாகப் பார்க்க வேண்டியது. அவசரத்தில் புகைப்படம் எடுத்து வந்தேன், மெல்ல அசை போட. கொஞ்சம் archeology படித்தும் மதுரையில் இது பற்றி விவாதிக்க நண்பர்கள் இல்லை என்று நினைத்தேன். அங்கிருந்தவரிடம் கூறிய போது சில குழுக்கள் பற்றிச் சொன்னார். எனக்கு அது சரியான குழுவா என்று கணிக்க முடியவில்லை. ASI இது போன்றவற்றில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தி,மாவட்டம் தோறும் சில 'நல்ல' குழுக்களை உருவாக்கலாம். 






வெளியில் 'சார் டீடைல் பீட் பேக் வேணும்' என்று தெலுங்கிலும், மலையாளத்திலும் கலந்த ஆங்கிலத்தில் ASI நண்பர்கள் சொன்னார்கள். எழுதிக் கொடுத்து வெளியே வந்தேன். வாசல் தெப்பக்குளத்தில் சிரசு வெட்டப்பட்ட நந்தி சிலை இருந்தது. காதலர்கள் அமரும் வகையில் அருகில் இரும்பு நாற்காலிகள். முகத்தை மூடியபடி இருவர். 

பேருந்தில் ஏறினேன். ' திஸ் ஸ் அவர் தமிழ் கல்ச்சர்' என்று குடைவரைக் கோவில்களைக் காட்டி அந்த மாணவன் சொன்னதே என் காதுகளில் ஒலித்தது. அவ்வாறு சொல்ல வைத்த ASI, மத்திய அரசு, மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், TS.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள். ஊர்கள் தோறும் இது போல் நடத்த வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்.