'Long Week end (Memorial day)' -3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்தது. நாளை முதல் அலுவலக வேலை. (விடுமுறையிலும் அலுவலக வேலை தான் செய்தேன்:) ). பலவற்றைப் பட்டியலிட்டு வைத்தேன் வெளிக்கிழமை இரவே., ஒரு நாள் நம்மாழ்வார் உற்சவத்தில் சென்றது. இரண்டு நாளாவது எதாவது படிக்கலாம் என்றிருந்தேன். வழக்கம் போல் வீணாகவே சென்றது. நண்பர்களிடம் முத்துக்கள் பற்றி ஏதோ பேச்சு வந்த போது, பின்வரும் பாடல்/நிகழ்வு பற்றிக் காண வேண்டும் என்று தோன்றியது. கம்பராமாயணத்திலிருந்து இப்போது வில்லிபாரதத்தைப் புரட்டினேன்.
குந்தியிடம், அவளுடைய மூத்த மகன் 'கர்ணன்' தான் என்று சொல்லிய கிருஷ்ணன், அவனிடமிருந்து 2 வரங்களை வாங்கி வருமாறு கூறுகிறான்.துரியோதனனிடமிருந்து
எதற்கு எங்கு தேடியும் சரியான விளக்கம் எனக்குக் கிடைக்கவில்லை. நெல்லை கண்ணன் சார் கூறியது தான் சரியாய்ப்பட்டது. முத்துக்களை எடுத்துக் கோர்க்கும் வகையில் தான் உள்ளதாகவும், தன் மனது சஞ்சலப்படவில்லை என்பதைக் காட்டவே 'எடுக்கவோ? கோர்க்கவோ?' என்றான், துரியோதனன். மிகச் சரி தான்!
'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!' என்றான். (வில்லிபாரதம்)