Wednesday, December 25, 2013

செய்வன திருத்திச் செய்

நான் காணும் IT (1):

         "தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
         ஈரத்திலே உப காரத்திலே
         சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
         தருவதிலேஉயர் நாடு" (பாரதியார்)

                      '7 வருட வேலை' பத்தி இதே blogல் எழுதினபோது கொஞ்சம் நம்ப வேல அனுபவம் பத்தி எழுதலாம்ன்னு ஒரு எண்ணம்.. பல ரசனையான கதைகளும் இருக்கு.. நேரம் கிடைக்கும் போது update பண்ணலாம்னு பார்த்தேன். 12 நாள் விடுமுறை நல்ல வாய்ப்பு..
                     அரசாங்க உத்தியோகத்தில் வேல எப்படி செய்வார்கள் என்று அவ்வளவு தெரியாது. ஆனால் அனைவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செய்வதால் தான் இன்றுவரை  அரசாங்கம் ஓடுகிறது. ஒரு சில முறை அரசாங்க அலுவலம் சென்றுள்ளேன். sslc, +2 certificates attestation வாங்கப் போனது. கொஞ்சம் பரிதாபகரமான காட்சி தான் அது. இப்போது நான் வேலை செய்யும் இந்த Corporate  Office சூழ்நிலைகளை நினைத்தால் மிக உரிய இடத்தை அந்த அரசாங்க ஊழியர்களுக்குத் தர நாம் மறந்துவிட்டோம்.(ஆனால் என்னைப் பொருத்தவரை நான் இருப்பது ஒரு உயரிய இடமே அல்ல.சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்ன்னு நினைக்கறேன்) மக்கள் தொகையில் <2% மட்டுமே இருந்தாலும் இந்த மக்களைத் தாங்குபவர்கள் அவர்கள் தான்.
                     அலுவலகத்தில் அடுக்கிவைக்கப்பட்ட கோப்புக்குவியலில், ஒரு பழைய wire chair, wooden table, காலை 8 மணிக்கு சரியாக வந்துவிடுவர். ஒரு பெரிய ஹால், 10-12 பேர் ஒரு sectionக்கு. 4-5 பழைய fan, நல்ல காற்றோட்டம், வெள்ளிச்சம் வர அனைத்து கதவுகளும், ஜன்னலும் திறந்திருக்கும். பெரும்பாலும் 2-3 Tube light தான் இருக்கும், பெரும்பாலும் அதுவும் அனைந்திற்க்கும். இயற்கையாக வரும் காற்று, வெளிச்சம் அவற்றோடு இயந்த வாழ்வு. அவர்களும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்து பார்த்திருக்கிறேன். முக்கியமாக நாட்டுப்பற்றோடு ஆக்-15 Office செல்வார்கள். 6 மணி ஆனா வீட்டிற்க்கு வரலாம், வீட்டிலிருந்து Connect பண்ண வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தோடு செலவிட நேரம் நிறைய இருந்தாலும் செலவிட பணம் Coorporate கலாச்சாரம் அளவிற்கு இருக்காது, அவை இல்லாததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.  பல குற்றங்களுக்குக் காரணம் இந்த அளவுக்கு அதிகமா பணமும், வித்யாசமான கலச்சரமும்ன்னு நினைக்கறேன்.
                 



இத மனசுல வச்சு நம்ப ஆபீஸ்ல நான் படிச்சது, பார்த்தது சேர்த்து Corporate/Software கம்பெனில என்ன எல்லாம் செய்யறோம்ன்னு பார்த்தா சில விஷயம் தெளிவா தெரியறது.. நாட்டையும், வீட்டையும் பார்த்துக் கொள்ள நேரம் இல்லை; இயற்கையை விட்டு விலகியே போகிறேன்; ஒரே இடத்தில உக்கார்ந்து வேல செய்யறதால உடல் சார்ந்த வேலைகள் இல்லை; எப்போதும் ஒருவித tension;புத்தகங்கள்/சொற்ப்பொழிவுகளுக்கு நேரமின்மை இத்யாதி.. சரி அத விடலாம்.. நம்ம Officeல என்ன தான் பண்றோம்ன்னு பாக்கலாம்.. சிலது ஏற்கனவே எங்கோ படித்தது., பலனில்லாமல் தான் பல நேரங்களை வீணடிக்கறோம். பணம் மட்டுமே குறிகோளாகத் தெரிவதால் , திருத்திக்கொள்ள நிறைய இருக்கிறது.

காற்றுக் கூட 'Access card' இல்லாமல் உள்ளே புகமுடியாத படி, பகலிலும் நல்ல வெளிச்சமிகும் விளக்குகளும், எப்போதும் AC குளிருடன் அமைந்த கட்டடங்கள்.  மகேந்திர வர்மனும், மாமல்லனும், சோழர்களும் கட்டிடக்கலை வளர்த்த நம் நாட்டில் இப்படியுமொரு இயற்கையை விலக்கிவைக்கும் அபத்தம்!


சத்தியமா எந்த  IT Companyயும் விதிவிலக்கில்லை.. கொஞ்சம் extra points வேணா add ஆகலாம்..எந்த  point delete பண்ண முடியாது

நான் கண்ட IT இதுவரை :
1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக வடை கடை , சிகரட் விற்கும் பொட்டி கடை இருக்கும்
2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .
3) பிரதமர் அலுவலகம்/தலைமைச் செயலகம் மாதிரி ஒரு 10 -15 security சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
4) வரும் அனைத்து கார்களின் (Trunck/dicky)கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை எனக்குத் தெரியாது .
5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை Securityயிடம் காட்ட வேண்டும். மாலை மட்டும் மிகச் சரியான நேரத்திற்குக் கிளம்பிவிடும்.
6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும். Metal Detector சோதனை உண்டு. 
7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . Appraisal/Bonus கொடுக்கவில்லை என்று குண்டு ஏதாவது  வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை போல. 
8 ) நாட்டுல எவ்வளவு மின்சார வெட்டு இருந்தாலும் reception, Workplace, canteen, rest room இப்படி எல்லா இடத்திலையும் பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும். 
9) Canteenல் இருக்கும் டிவியில் CNBC/NDTV  மாதிரி ஏதாவது ஓடும். யாரும் அதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள். 
10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .
11)  Lunch தவிர மற்ற நேரங்களில் இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும். 2008 க்கு முன்னால் Boost, Horlicks எல்லாம் தாராளமாகக் கிடைத்தது. 
12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.
13) சில பல உண்மை உழைப்பு உயர்வு பற்றி வெளி நாட்டு மேதாவிகளின் வாசகங்கள் ஆங்காங்கே ஒட்டிருக்கும்.
13) Canteen - Cafeteria, Toilet - Rest room என்று மாற்றப்பட்டிருக்கும்.
14) Rest Room hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .
15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா Canteenல் இடம் பிடிக்க வேண்டும் . சாப்பாடு எப்படி இருந்தாலும் ஆஹா-ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு சாப்பிடும் கூட்டம் கண்டிப்பாக இருக்கும். கடைக்காரர் 30 ரூபாய் மீதி தராமல் நம்மை நாளை அதே கடையில் வாங்க வைப்பார். சாயந்தரம் இதே போல் வடை-பஜ்ஜி ஸ்நாக்ஸ் இத்யாதி கிடைக்கும். 
16) யாரும் கையால் சாப்பிட மாட்டார்கள். பல நூறு கொடுத்து 'Tupperware'  Box தான் உணவு கொண்டுவரும் பாத்திரம். யாரும் கையையும், சாப்பிட்ட Plateம்/Box அலம்புவதில்லை.
17) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண Oven அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.
18) வேலை செய்யும் ODC உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . AccessCard வேறு எந்த ODC உள்ளும் செல்ல அனுமதி இல்லை .
18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி,தோட்டம்,அழுகு செடிகள் இருக்கும். மாலை 4-5 மணியளவில் College மாதிரி ஜோடி-ஜோடியாக நடப்பார்கள். நன்றாக அமர்ந்து பேச வசதி இருக்கும்.  இந்த வகையில் 6 மணி Onsite கால் வரதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாம். 
19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .
20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் . நான் பார்த்தவரை பெரும்பாலும் தெலுங்கர்கள் தான் அதிகம். ஏமி என்று ODCயில் கத்தினால் min 10 பேர் திரும்புவார்கள்.. கிட்டத்தட்ட தசாவதாரம் படம் மாதிரி இருக்கும்.
21) உடற்பயிற்சி கூடம் ஒன்று இருக்கும். ஏதோ நாங்களும் உடற்ப்பயிற்சி செய்வதாகக் கூறி 2 வாரம் ஆர்வமோடு செல்வார்கள்.அந்த வகையில் 1-2 மணி நேரம் ஓட்டலாம்.
22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி, பூங்காக்கள் இருக்கும். பூங்கா பராமரிக்க தனியாக 2-3 பேர் இருப்பார்கள். அதற்கும் பெரும் செலவு செய்வார்கள்.
23) Security நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”
24) ஒரு ATM இருக்கும். சம்பளம் வந்து முதல் 2 நாள் மட்டும் வீடு வாடகை கொடுக்க கொஞ்ச பேர் எடுப்பார்கள். 
25) ஒய்வு எடுக்க (தூங்க) தனி அறை கண்டிப்பா உண்டு .எப்போதும் 5-6 பேர் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். Registerல் கையொப்பமிட்டு தூங்க வேண்டும்.
26) பெரும்பாலானவர்களின் Computerலையும் Dinamalar.com, Irctc.co.in, ஏதாவது ஒரு சினிமா theater booking link openல இருக்கும்.
27) கண்டிப்பா வாரம் ஒரு Treat, மாதம்  ஒரு முறை கொஞ்சம் பெரிய Treat, Quarter ஒரு முறை Project Get together. அந்த வகையில் 1 நாள் முழுக்க ஓட்டலாம். நான் Non-Veg Hotel/Restaurant போகாததால இது வரை எந்த Treatம் கொடுத்ததுமில்லை, போனதுமில்லை.
28) பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பேரில் கேக் பூசும் நிகழ்ச்சி. மாதம்/வாரம் 1 முறை. உணவை waste செய்யும் வகையில் ஒரு 1 மணி நேரம் போகும். இதுக்கும், நமக்கும் ரொம்ப தூரம். Cakeல முட்டை (!) இருக்கும் அப்பறம் நம்ப கலாச்சாரத்துக்கு நேர் எதிரானதுன்னு என் வாதம். 
29) 20% TASMAC Account holders தான். உள்ளே 'Smoking Prohibited' என்றும் , 'Smoking Zone' என்றும் ஒரு பகுதி இருக்கும். நமக்கு சம்மந்தமில்லாத பகுதி. கேள்வி ஞானம் தான்.
30) Independence day, Republic day, Gandhi Jeyanthi  இது எல்லாம் கொண்டாட மாட்டார்கள். இவை வெள்ளி/திங்கள் கிழமைகளில் வந்தால் மட்டும் மகிழ்ச்சி. நாமே போகம்ன்னு நினைத்தாலும், எந்தவித விழாவும் நடத்தற மாதிரி தெரியல.
31) ஓட்டுப் போட கண்டிப்பாக லீவ் இருக்காது. ஏன்னா, Clientக்கு இத inform பண்ண முடியாது.
32) 300-400 KM தொலைவில் இருக்கும் ஊருக்குப் போக 'Onsite Manager' approval கண்டிப்பாக வேண்டும். 2 மாதம் முன்னாடியே பிளான் பண்ணிச் சொல்ல வேண்டும். 
33) Onsite/Client மீட்டிங் பெரும்பாலும் 'Mute'லயே attend பண்ணலாம். 
34) 20*9 என்று சாதாரண Monthly billing amount கணக்கிடக்கூட கண்டிப்பாக Calculator/Excel formula பயன்படுத்த வேண்டும்.
35) Mother's day, Women's day கண்டிப்பாகக் கொண்டாடப்படும் 
36) Christmas வாரத்தில்  ODC முழுமைக்கும் பெரும் பொருட்செலவில் decoration செய்யப்படும். இதில் பல குழுக்கள் இருக்கும். இதில் இருப்பதாகக் கூறி  Dec மாதம் முழுதும் மந்தமாகவே வேலை நடக்கும். பொங்கல், தீபாவளி கண்டுகொள்ளப்படுவதில்லை
37) Cultural day கொண்டாட ஒரு குழு. நடனப்பயிற்சி எடுக்கரதுலயே 2-3 மாதம்/வாரம் தள்ளப்படும்.எல்லாம் பெரும்பாலும் வேலை நேரத்தில் தான்.அது என்ன 'Cultural'ன்னு இது வரை தெரியல
38) LKG, UKG படிக்கும் குழந்தைக்கு Print out எடுக்கும் ஆசாமி ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.
39) Water filterல் தண்ணீர் cane மாற்றிவிட Security Officeக்கு போன் செய்து யாராவது வரும் வரை காத்திருக்கும் கூட்டம் இருக்கும். 
40) Dress Code பற்றி சொல்லத் தேவையில்லை.. அதுவும் வெள்ளிக்கிழமையானா போதும்!:)

(P.S: இந்த photoக்கும், pointsக்கும் சம்பந்தமில்லை.. ஏதோ googleல randomமா செலக்ட் பண்ணினது! :) )

Monday, December 23, 2013

நியூயார்க்கில் சனாதன தர்மம்!

நியூயார்க்கில் சனாதன தர்மம்:

                          'அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்' என்பது போல, அகத்தாலும், புறத்தாலும்  Clientக்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டதால், அவனுடைய பண்டிகைகளைக் கொண்டாடவிட்டலும், சம்பளமில்லா கட்டாய விடுப்பு எடுக்கவேண்டியாகியது.. இந்தமுறை கிட்டத்தட்ட 12 நாட்கள் விடுமுறை... வெள்ளை மழை (snow) - வேற்று நீர் (மழை) -கொஞ்சம் வெயில் என்று மாறி மாறி நிலையில்லாமல் இருப்பதால் நீண்ட நெடுந்தூரப் பயணமே 12 நாட்களைக் கழிக்க வழி.. தீபாவளி-பொங்கல் Ticket book பண்ற மாதிரி சுமார் 4 மாதம் முன்பே Airடிக்கெட் விற்பனை தொடங்கி 'நல்லா' Plan பண்ணி கிளம்புபவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிட்டார்கள்.. இப்படி போகக்கூடிய இடம் பெரும்பாலும் 2-3 தான்- Florida, Grand canyon, எதாவது Cruise பயணம்..

                            நம்ப பழக்க வழக்கத்திற்கு Long Drive கொஞ்சம் கஷ்டம் தான்.. சென்ற முறை Florida போனபோது இருந்த அனுபவமே சாட்சி; (தூய தமிழில் பேசாவிட்டாலும்) தமிழ் தெரிந்தவர்களின் மத்தியில் தமிழைத் தேடுவது போல, நானும் போகும் இடமெல்லாம் Pure-Veg உணவு தேடி இரண்டுமே கிடைக்காமல் போவதே வாடிக்கை.. 'இது தனி, அது தனியாகச் சமைப்பார்கள்' என்று Veg- NonVegக்கு நண்பர்கள் விளக்கம் கொடுத்தாலும் இன்னும் மனம் ஏற்காமல் 2 நாட்கள் ஆனாலும் உண்ணாமல் கழித்திருக்கிறேன்.. இம்முறை அது சாத்தியப்படாததால் Long Drive தவிர்த்தேன்.. கடந்த 1  வாரமா, Client தங்களுடைய பண்டிகைகளுக்கு (Chritmas, NewYear) என்னிடமும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.. அது பரவாயில்லை.. இங்கு வந்து நம் மதத்தை, திருவிழாக்களை மறந்து இந்தப் பண்டிகைகளை போலியாகக் கொண்டாடும் நம்மவர்கள் அலட்டல் தான் அதிகம்.. இதிகாச, புராணங்களையும், கீதையும் தந்த நம் மண்..ஆனால் நம்மவர்களும் என்னிடம் வாழ்த்து பரிமாறியதால் கொஞ்சம் அதிகமான மனச் சோர்வோடு தான் இருந்தேன்.. Offshore Team, HR, Admin அனைவரிடமிருந்தும் வாழ்த்துக்கள்.. வெட்கம் கேட்ட பிழைப்பு.. சிலருக்கு 'New Yr celebrations பற்றி விளக்கமும் கொடுத்தேன்.. அவர்கள் கேட்காமல் போனாலும் பரவாயில்லை!




                      அப்போது தான் எதேர்ச்சையாக நியூயார்க் பயணம்..எல்லாம் சுற்றி முடித்து, Pure Veg கிடைக்காததால் சற்று பசியுடன் வீடு நோக்கி வர Penn station நெருங்கிக் கொண்டிருந்தேன்.. 34th Street -6 th Avenue அருகில், மாலை 6 மணி இருக்கும், Signal Cross செய்து கொண்டிருந்தேன்..அன்று நல்ல Climate.. இந்த Winterரிலும் வியர்வை.. அதனால் தான் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள்,அலை அலையாய் வீதிகளில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.. திடீரென்று மத்தளச் ஓசையுடன், 'ஹரி போல்,ஹரி போல்' என்ற ஹரி நாம சங்கீர்த்தனம்.. அதில் பாடிய 5 பேரும் இந்தியர்கள் அல்லர்.. ISKCON சேர்ந்தவர்கள்.. முக்கியமாக இந்த ஊர் மக்கள்...பிரம்மித்துப் போனேன்.. நிஜமாகவே வியர்த்தது.. 3-4 நாட்களாக மனதிலிருந்த சோர்வு வறண்டது நிமிஷத்தில்!.. ஏற்கனவே எடிசனில் பலமுறை இது போன்ற வீதி பஜனைகளைக் கண்டிருக்கிறேன்.. அவை எல்லாம் இந்தியர்கள் அதிகமுள்ள இடம்.. ஆனால் இது பலதரப் பட்ட மக்கள் உலவும் இடம்..

                        என் நெற்றியில் இருந்த குறிகளைக் (திருநாமம்) கண்டதும் அவர்கள் மகிழ்ச்சியில் குதித்தே பாடினார்கள்.. மகிழ்ச்சி. (எங்கு சென்றாலும் திருநாமத்தோடு செல்வது தான், Client meeting போனாலும்., அது பற்றி பல சுவையான அனுபவம் உள்ளது.. மற்றொரு முறை எழுதுறேன்) ! யாருக்கும் எந்த இடையூறும் இன்றி அவர்கள் பாடிக்கொண்டிர்ந்தார்கள்.. சனாதன தர்மம் என்றும், எங்கும் தழைக்கும் என்பதில் எனக்கு மற்றுமொரு ஆதாரம்.. நம்மவர்களே பிற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இங்குள்ளவர்கள் சேர்ந்து ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தது ஒப்பற்ற மகிழ்ச்சி, என் பசியும் மறந்தது.. இது ஏதோ எதேர்ச்சையாக நடந்தது அல்ல எனக்கு... அவர்களின் பக்தியை ரசித்துவிட்டு சற்று தள்ளி வந்தேன்.. Penn Station வாசலில் ஒரு பெரிய கூட்டம் Bible வாசித்துக் கொண்டிருந்தது.. இங்குள்ள பூர்வக்குடி மக்கள் தான்.. முன்னர் சொன்னதிற்கும், இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு..

                  இந்த நம்மாழ்வார் பாடலும், விளக்கமும் தான் இன்று வரை மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.. நம்மவர்கள் தொலைத்துவிட்டார்கள், அதை அவர்கள் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சனாதன தர்மத்தை, ஹரி பக்தியை.. நம்மவர்கள் திருந்தும் நாள் எந்நாளோ?

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.

***அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்களுடைய ஞானத்தாலே அறியப்படுகிற பலபல மார்க்கங்களில் அந்தந்த தெய்வங்களை ஸ்வாமிகளென்றெண்ணி வணங்குவார்கள்; அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள் அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; எதனாலே என்னில், அந்தந்த அதிகாரிகள் தங்கள் தங்கள் விதி வழி பலன்பெறும்படியாக அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளியுள்ளான் ஸர்வஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்! அத்தெய்வங்கள் தாமாகவே பலனளிப்பதில்லை; எம்பெருமான் தங்களிடத்தில் அந்தர்யாமியாக இருப்பதால் தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்களென்கிறார் ***

மத மாற்றம் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன்.. காஞ்சி பெரியவரின் 'தெய்வத்தின் குரலில்' இது பற்றி மிக அழகாகக், நயமுடன் கூறியிருக்கிறார்  அனைவரும் ஒரு முறை படித்தாலே போதும்., யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது..

தெய்வத்தின் குரல் - மதங்களின் ஒற்றுமை:

"எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

'தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை காட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். "இது ஒன்றே மோட்ச மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரு பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் 'ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்' என்கிறது. கீதையில் பகவான், 'எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்' என்கிறார். ஆழ்வார் 'அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்' என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிற்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.

என் அபிப்ராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரீகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது 'கன்வெர்ட்' செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்தானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; 'யூனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யூனிடி' இருப்பதே அவசியம்."






Tuesday, December 10, 2013

சக்கரவர்த்தித் திருமகன்

'ஆச்சார்யா' இராஜாஜி - பாரத ரத்னாவின் பிறந்தநாள்.

                            இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் நிறைந்திருப்பவர். சாதி-மதம் என்று வெற்று அரசியல் பேசும் இன்றைய அரசியலார் முன், இரண்டையும் ஒழித்து வாழ்ந்து காட்டியவர். 'கலப்பு மனம்'  என்று மேடையில் மட்டும் பேசாமல், தன் வீட்டிலேயே அதைத் தொடங்கியவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், ஆலயப் பிரவேசம், கள்ளுக்கடை எதிர்ப்பு இன்னும் பல, நமக்காகவே!. 'அவா' என்று தூற்றியவர்க்கும் அரசியல் அடையாளம் கொடுத்தவர்! அவரின் 'குலக் கல்வி', ஹிந்தி ஆதரவு இது போன்றவற்றை நாம் மதிக்காததால் தான் இன்றும் பின்தங்கி உள்ளோம் என்பது என் அனுபவப்பூர்வ உண்மை! மற்ற தலைவர்களின் சிலைகளைச் சாதிச் சங்கங்களும், கொள்கைகளை அரசியல் கட்சிகள் வெற்றுக் கோஷங்களுக்காகப் பராமரித்தாலும், இவரின் கொள்கைகளையும்-சிலைகளும் யாராலும் பேணப்படாமல் உள்ளது..காங்கிரசே மறந்தாலும், பிஜேபி இன்று நினைத்தது கொஞ்சம் மகிழ்ச்சி!

                             வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் என்ற இரண்டு புத்தக இரத்தினங்களைக் கொடுத்தவர்.  "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக 1958ம் ஆண்டு "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது. இராகமாலிகை, MS குரலில் அவரின் 'குறை ஒன்றும் இல்லை' அவரின் மற்றுமொரு இரத்தினம்! இவர் கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். பிறந்த நாள் கொண்டாடும் நடிகரை போற்றும்  அனைவரும் நமக்காகவே வாழ்ந்த இந்த மாமனிதர் (இன்று 10/12), நாளை மற்றுமொரு யுக புருஷரையும் (12/11)  கொஞ்சமாவது நினைக்க வேண்டும் என்று கூறும் நிலையில் தான் உள்ளோம்!

(தொண்டர்களோடு ஒருவராக, காலில் காயத்திற்கான கட்டுடன்-மக்கள் சேவையில்)



குமரி மாவட்டம் விடுதலை போரில் இராஜாஜியின் பங்கு (Tamil Wikipedia):

தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில் சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”.திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.



கள்ளுக்கடை எதிர்ப்பு:
             சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி இருந்த போது மது கடைகளை மூடும் சட்டத்தை கொண்டு வந்தார்,  அதை பெரியார் மிக கடுமையாக எதிர்த்தார் ராஜாஜி மேல் ஜாதிக்காரர், கீழ்ஜாதிகாரர்களின் கஷ்டமும்  தொழிலாளர்களின் சிரமமும் அவருக்கு தெரியவே தெரியாது, உழைத்து உடல் வலியில் இருப்பவன் ஒரு கிளாஸ் தண்ணி போட்டால் தான் அசைந்து உறங்க முடியும், எனவே உடனடியாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றார் பெரியார்.
    அதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? மது விலக்கு சட்டத்தை அமலபடுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்குமோ? பெருவாரியான மக்கள் அதை ஏற்க மாட்டார்களோ? என்று எல்லாம் எண்ணி பயப்பட்டேன், ஆனால் நண்பர் ஈ.வெ,ரா இந்த சட்டத்தை எதிர்ப்பதிலிருந்தே இதை  மிக சுலபமாக அமுல் செய்துவிட முடியும், எல்லா மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதை புரிந்து கொண்டேன், ஏன்என்றால் பத்து பேர் ஏற்று கொள்வதை, பத்து பேருக்கு சரியெனப் பட்டதை பெரியார் தவறு என்பார், ஏற்று கொள்ளவும் மாட்டார் என்பது தான் ராஜாஜியின் பதில்.
    உண்மையில் பெரியார் ராஜாஜியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்தார்.ஆனால் பெரியாரின் வாரிசுகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் கழக கண்மணிகள் தான் 1967-ல் மதுகடைகளை திறந்து வைத்தார்கள்.

வியாசர் விருந்து (எங்கோ படித்த நிகழ்ச்சி):
வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அவருக்கு உரிய பாணியில் 'வியாசர் விருந்து' பற்றிப் பேசினார். சில வரிகள் -  ' இந்தக் கண்ணுக்குப் பார்வை கிடையாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது சொப்பனத்தில் பார்வைகள் நடைபெறுகின்றன என்றால் அதைப் பார்ப்பதுதான் அகக்கண். அதைப் பார்ப்பதுதான் மனக்கண் என்பதை யோகிகளும் ஞானிகளும் கண்டார்கள். இதைக் கருமிகள் நித்திரையிலே அனுபவிக்கிறார்கள். அந்தக் கண் கிடைத்தது வியாசருக்கு. அதைக் கொண்டு எழுதினார் இந்த புத்தகத்தை என்பதுதான் அடியேன் இன்றைக்குச் சொல்ல வேண்டுவதாகும். அந்த நிலைமையில் அந்தத் தன்மையில் உயர்ந்து நின்றதுதான் இந்த பாரதம். அப்பாரதத்துக்குள்ளே பெருமணியாகக் கிடைத்ததுதான் இந்த பகவத் கீதை. எனவே வியாசர் முனிவர் எழுதிய மகாபாரதம் என்பதை ‘வியாசர் விருந்து’ என்பதன் பெயரால் ராஜாஜி அவர்கள் எழுதி வழங்கி உள்ளார்கள். அதனை வாங்கிப் படித்து பயனடைவது நமது கடமை'

                                  சாதிகளைக் கடந்து நிற்கும் தலைவர்களையும் சாதி பெயர் வைத்துத்தான் இன்று பார்க்கிறது சமூகம். இதற்கு இராஜாஜியும் விதிவிலக்கில்லை!. நாட்டிற்காக எதுவுமே செய்யாத நடிகரின் பதாகைக்கு பால்-பன்னீர் அபிஷேகம் பண்ணும் சமூகம், இன்று நலிந்த நிலையில் இருக்கும் எங்கள் ஊரில் (மதுரை-திருமங்கலம்) இராஜாஜியின் சிலை இது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டி உள்ளது. ஊருக்குப் புதியவர்களுக்கு இது ஒரு அடையாளமே தவிர, யாரும் கவனித்து நான் பார்த்ததில்லை.
                              AIRல்.,

மூதறிஞர் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை!தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர்.

ஆம்! அவர் சாதித் தலைவரில்லை; சாதித்த தலைவர்! 

வெகு சில இடங்களில் மட்டுமே அவர்க்குச் சிலை இருக்கும், அதில் ஒன்று எங்கள் ஊர் - திருமங்கலம், மதுரை. இன்றும் கேட்பாரற்று இருக்கும் சிலை.


இராஜாஜி பற்றி சில தலைவர்கள் சொன்னது.. 'இராஜாஜி' புத்தகத்திலிருந்து.. (source: FB)
                           When Rajaji was to take oath of office as the First Governor General major presses carried cartoons how Rajaji will be dressed up for the occassion. But to everyone's surprise he came in his usual PANCHAKACHAM, shirt and Uthriyam. 

“….. When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom. When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakti (devotion). Knowledge, when it becomes fully mature is bhakti. If it does not get transformed into bhakti, such knowledge is useless tinsel. To believe that gynana and bhakthi, knowledge and devotion are different from each other is ignorance…” -- Rajaji


'He is an acknowledged leader of our country and a great and a wise statesman. It is our Good fortune that, in a period of crisis, we have one on whom we can rely for advice and counsel" so said the Iron man of India Sardar Patel.


'He thinks at least six months ahead of me; Keeper of my conscience' expressed Mahatma Gandhi


'His faith in Mahatma was tremondous but he never allowed his mind to slip away. whatever happened he came to his own conclusion.that is the type of keen mind, the mind of a person of highest integrity and self sacrifice, that I say, is an invaluable asset to a nation' exclaims Nehru


'His impact on me has been one of the civilising influence since I became President' adorned Kennady. 


Mr. Rajagopalachari was one of the makers of new India, a sincere patriot, a man whose penetrating intellect and moral sense added depth to national affairs. His analysis, his anticipation, his administrative acumen and his courage to steer an unpopular course if he felt the need, marked him as a statesman and made an impact on the national history at several crucial junctures. He had held the highest positions and lent distinction to every office. - Indira Gandhi.
















****வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!!****

Friday, October 4, 2013

பக்தி-காதல்-மடல்

மடல் இலக்கியம் 

             பெருந்தெருவெ*ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்*
              வாரார் பூம் பெண்ணை மடல்! (சிறிய திருமடல்)

**பெரிய தெருவழியே என்னை ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும் நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மடலூர்வதை நிறுத்தமாட்டேன்-மடலூர்ந்தே தீர்வேன்.**

             மற்றிவைதான்*உன்னியுலவா வுலகறிய வூர்வன்நான்,
             முன்னிமுளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,*
              மன்னியம்பூம் பெண்ணை மடல்* (பெரிய திருமடல்)

**இப்படியாகவுள்ள மற்றும் பல செய்கைகளும் நினைத்து முடிய மாட்டா, அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு பரகால நாயகியாகிய நான், முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக் கொண்டு மடலூரக்கடவேன்.**

             மடல் இலக்கியம் பற்றிக் கேள்விப் பட்டதுண்டு. ஆனால், மடலூர்தல் எதற்க்காக, ஏன் தலைவன் மட்டும் மடலூர வேண்டும், அதனால் என்ன விளைவு வரும் இது போல படித்ததில்லை. நவராத்திரி தொடங்குவதால், திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல் சேவிக்கலாம் என்று எடுக்கும் போது மடல் பற்றி சற்றே படிக்கலாம் என்ற எண்ணம். மடல் பற்றிப் படித்த பிறகு தான் திருமங்கை மன்னனின் பக்தியின் வெறி/ஆழம் கொஞ்சம் யூகிக்க முடிகிறது. மேற்ச்சொன்ன இரண்டும் அவரின் சிறிய திருமடல் - பெரிய திருமடல் வரிகள் தான்.

          மடலூர்தல் சங்க கால வழக்கம். தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். பெற்றோர்கள் எதிர்ப்பு திருமணத்திற்கு. அடுத்து இந்தக் காலம் போல் வீட்டிற்க்குத் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு , தொலைபேசியில் தகவல் சொல்லாமல், ஊராரின் உதவியை நாடுகிறான் தலைவன் 'மடலூர்தல்/மடலேறுதல்' என்னும் வழியில்!. இதில் இன்னொரு வகையும் உண்டு - தன்னை விரும்பாத காதலியை நினைத்து, தலைவியின் தோழியிடம் அச்சுறுத்தி மடலேறுதல். இதற்க்கு கைக்கிளை ஒழுக்கம். முன்னர் சொன்னபடி மடலூர்ந்து மணமுடித்தால் -  பெருந்திணை ஒழுக்கம்.


               சரி. அப்படி  'மடலூர்தல்/மடலேறுதல்' என்றால்? நம்ப ஊரு பக்கம் நொங்கு வண்டி கட்டி அத இழுத்து ஓடியது தான் எனக்குத் தெரியும். ஆனா இந்த முறைப் படி பனை மரத்து மட்டைல ஒரு குதிரை வண்டி கட்டி, அதுல உக்காந்து போகணும். யூகிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு- இது வரை பார்த்ததில்லை. இன்னும் கொஞ்சம் விவரமா -

            "பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

               பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் சாம்பல் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் (ஓவியம் வரையப்பட்ட துணி) பிடித்திருப்பான். ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார்/நண்பர்கள் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்."

                இது நடந்ததென்னா, ஊரார் எல்லாம் வந்து தலைவி வீட்டில் பேசி மனமுடிப்பர்! இது ஒரு முறை - பெற்றோர் எதிர்த்தாலும் பின்னர் இவ்வாறு செய்து திருமணம் செய்வது. மற்றொரு முறையில், தலைவியை மடலூருவேன் என்று மிரட்டி சம்மதம் வாங்குவது.  இப்போதுள்ள நிலைக்கு முன்னோடிகள் எனலாம். இரண்டுமே காதலில் முதிர்ந்து வேறு வழியில்லாமல் செய்வது. ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

             மடலேறுதலைப் பாடும் நூல் மடல் எனப்படுகிறது. இன்று படித்த திருமங்கை மன்னனின் மடல், தமிழ்மொழியில் முதன் முதலில் தோன்றிய மடல் இலக்கியங்கள் - சிறிய திருமடல், பெரிய திருமடல். பல ஸ்வரஸ்ய விஷயங்கள்.

**பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாக அமைத்தது -- சிறிய திருமடல், பெரிய திருமடல்.

**இறைவன் மீது எல்லை இல்லாத காதல் கொண்டுள்ளாள் தலைவி. தலைவனாகிய இறைவனை அடைவதற்குரிய முயற்சியாகத் தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றாள்.

**இங்கு பாடப்படுவது உலகியல் காதல் அல்ல. காமம் காரணமாகிய காதலும் அல்ல. இது பேரின்பக் காதல் ஆகும்.

**அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளை அறியலாம்.

**இரு மடல்களிலும் தலைவனாகிய இறைவனின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.

**ஒரு பாடல் முழுதும் ஒரே எதுகையோடு பாடுவது மிகக்கடினம். திருமங்கை ஆழ்வார் பாடிய சிறிய திருமடல் 'ர'கர வரிசை எதுகையோடு பாடியுள்ளார்.  'நாராயண' சப்தத்தின் இரண்டாம் எழுத்தை (ர) சிறிய திருமடலில் கையாண்டிருப்பது மடலின் உச்சம்.

**சிறிய திருமடல் பாடல் முழுதும் பின்வரும் எதுகையோடு இருக்கும்
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை
ரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் !

**மடலின் உயர்ந்த அர்த்தங்களை அறிய நிறைய படித்திருக்க வேண்டும்.  'மடலின் அர்த்தங்கள் புரிய சொல்பவர் 80 வயதும், கேட்பவர் 60 வயதும் கடந்திருக்க வேண்டும்' என்று சிறிய திருமடலின் சிறப்பை வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி சொல்லியிருக்கிறார்.

**நடந்ததை, வருங்காலத்தில் நடக்கயிருப்பதை நெல் மணிகள் வைத்து குறித்துக் கூறுவது போல் அமைத்திருப்பது சிறியதிருமடலின் சிறப்பு. இது இன்று வரை எங்கள் ஊர் பக்கங்களில் காண்கிறேன்.

**சங்க இலக்கியங்களில், அக இலக்கியங்களில் மடல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கலித்தொகை என்ற நூலில் மடலூர்தல் பற்றிய செய்தி இடம் பெறுகிறது. ஆனாலும், திருமங்கை ஆழ்வார் தான் இந்த முறையில் இரு இலக்கியங்கள் படைத்திருக்கிறார்.

**இலக்கண வரை மாறாமல் இயற்றப்பட்ட இலக்கியம். ஆழ்வாரின் பக்தியின் முதிர்ந்த நிலை, வேறு வழியில்லாமல் செய்யப்படும் மடலூர்தலைக் கையாண்டிருப்பது அவரின் பக்தியின் உச்சத்தை ஒரு முனையிலும், தலைவனாகிய இறைவனை மிரட்டுவதாகவும்(!) உள்ளது.

                    3-4 நாட்களாக இனம் புரியாத பாதிப்பு/வெறுமை, இதைக் கொஞ்சம் படித்ததில் சற்றே பக்குவப்பட்டுவிட்டது. வரும் வாரத்தில், இங்குள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து அழைத்துள்ளதால் அங்கு சென்று வந்து மேலும் பல எழுதலாம் என்றிருக்கிறேன்.!

Sunday, September 1, 2013

நிலவிலே மலர்ந்த முல்லை - நம்மாழ்வார் & உ.வே.சா

'நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,
அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப!' (முல்லைப் பாட்டு)

                இன்று நம்மாழ்வார் அவதார நன்னாள். அவரே 'வேதம் தமிழ் செய்த மாறன்'; செந்தமிழால் வேதத்தை விரித்துரைத்தான். ஆழ்வாரை உருக்கியே பாசுரங்களை எம்பெருமான் வளர்க்கிறான். 6ம் பத்தில் திருமலையில் சரண் அடைந்து, மேலும் பல எம்பெருமான்களுக்கு மங்களாசாசனம் செய்து, கடைசிப் பத்தில் எம்பெருமான் ஆழ்வார் விருப்பத்தை தலைக்கட்டுகிறார். 'யானாய்த் தன்னைத் தான் பாடி', 'தன்னைத் தானே துதித்து' என்று தன்னுளே புகுந்து எம்பெருமானே தன்னைப் பாடுவதாகவும். 'என்னைமுற்றுமுயிருண்டு', 'தீரஇரும்புண்ட நீரது போல என்னாருயிரை ஆரப்பருக' என்று எம்பெருமான் தன்னை உருக்கியதாகவும் ஆழ்வார் கூறுகிறார். இன்று பௌர்ணமி வேறு. மிகச்சிறப்பாக ஆழ்வார் நிலவொளியில் எழுந்தருளினார். எனக்குத் தோன்றியது உ.வே. சா. வாழ்வில் நடந்த ஆழ்வார் நிகழ்த்திய அற்புத அனுக்ரஹம் தான். இப்படி ஒரு பௌர்ணமி நன்னாளில் தான் உ.வே.சா ஐயருக்கும் அனுக்ரஹம் கிடைத்திருக்கிறது. வைகாசி விசாகத்தில் வந்துதித்த சடகோபன் மாறன் வேதம் மட்டும் தமிழ் செய்யவில்லை, இந்தத் தமிழையும் காத்தருளியிருக்கிறார். வழக்கம் போல் எனக்கு பிடித்தது எங்க ஊரு திருமாலிருஞ்சோலைப் பாசுரங்கள் தான்.. 'திருமலிருஞ்சோலை மலை என்றேன் என்ன, திருமால் வந்து என்நெஞ்சு நிறையப் புகுந்தான்'.

                சில நாட்களாக திருவாய்மொழி பற்றி ஏதாவது ஒரு 10 வரிகளாவது எழுதன்னு ஒரு எண்ணம். அந்த அளவுக்கு ஒண்ணும் பாண்டித்தயம் பெறவில்லை.  அவ்வாறு எழுதத்தொடங்கினாலும் கம்பன் , இராமகாதை எழுதும் முன் சொன்ன பூனைக் கதை உவமை மாதிரி கூட இருக்காது. (பாற்கடல் முழுதும் ஒரு பூனை குடிக்க முயன்றதைப் போல , கம்பன் தாம் ராமகாதை எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார்).

ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ.

             இதுக்கு முன்னாடி, ஏதோ படிக்கப் போக கடைசில உ.வே.சா.வின் 'என் சரிதம்' என்ற நூல் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ச்சே!. எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் தமிழ் நூல் எல்லாம் சேகரித்து, வசதிகளே இல்லாத காலங்களில் எல்லா ஊர்களுக்கும் நடந்தே சென்று, பலரிடமும் கஷ்டப்பட்டு ஓலைச் சுவடிகளை வாங்கி, அச்சுக் கோர்த்து, பிழை திருத்தி, சரியாய் ஓலைகளில் தெரியாத பல பாடல்களைச் சரியாக்கி,  பதிப்புகள் செய்து, தானே பலவற்றிக்கும் பொருள் செலவழித்து , புத்தகமாக இன்றும் நாம் படிக்கும் வண்ணம் தந்திருக்கிறார். அப்பப்பா! இதை சொல்ரதற்க்கே மூச்சு முட்டறது. அவர் பண்ணின சேவைகளைக் கொஞ்சம் படிக்கும் போதே என் கண்களில் நீர் ததும்பியது. அவர் வேலைகளை எல்லாம் கொஞ்சம் இன்று மறந்து விட்டோம். பள்ளிகளில் கூட முதல்வர்களும், மந்திரிகளும், ஆதரவு பெற்றத் திரைப்படக் கவிஞர்களின் பாடல்களும், கட்டுரைகளும் தான் இருக்கின்றன. இந்தத் தமிழைப் பெற்றுத்தந்த மகாமகோபாத்யாய உ.வே.சா பற்றியும், அவருக்கு அருளிய 'வேதம் தமிழ் செய்த' மாறன் பற்றியும் ஒரு வரி கூடச் சொல்லித்தருவதில்லை.

             உ.வே.சா-'என் சரிதம்' எல்லாரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டியது. Online PDF version கூட இருக்கறது மகிழ்ச்சியாகத்தான் இருக்கு. அந்த நூலில் நான் படித்தது - நம்மாழ்வார் , உ.வே.சா விற்கு அருளியது என்னை நெகிழச் செய்தது. உ.வே.சா பத்துப் பாட்டு கிடைக்காமல் கலங்கினார் ஆழ்வார் திருநகரியில். பின்னர், 'அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று சரணாகதி பற்றிப் பாடிய நம்மாழ்வாரைச் சரணடைந்ததும், வேதம் தமிழ் செய்த மாறனும் அவருக்கு 'முல்லைப் பாட்டை' வழங்கி பத்துப் பாட்டை உ.வே.சா மூலம் உலகுக்குக் கொடுத்தார். இவை எல்லாம் நம் காலத்தில் , <100 வருஷம் முன்னர் நடந்தது தான். இது பற்றி உ.வே.சா ஒரு கட்டுரையில் சொல்லிருக்கிறார்.
                   மேலே சொன்ன முல்லைப் பாட்டு, முல்லை நிலத் தலைவானான 'திருமால்' பற்றியது தான். அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்துச் சக்கரமும் சங்குமாகிய குறிகளையுடையனவும் திருமகளை அணைத்தனவுமாகிய வலிய கையினையுடையவனும், மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றவளவிலே விண்ணிடத்தே வளர்ந்தவனுமாகிய திருமால் போல, மேகத்தை/முகிலைப் பற்றித் தலைவி சொல்வதாக அந்தப் பாடல். 'கண்ணன் கழலினை , நண்ணும் மனமுடையீர்' என்று பாடிய நம்மாழ்வார் முல்லை நிலத் தலைவனின் பாடலைத் தந்தது வியப்பில்லை. நமக்குத் தெரியாத காலத்தில் நாதமுனிக்கு அருளி தமிழ் மறை என்ற திவ்ய ப்ரபந்தங்களைக் தந்தருளினார் நம்மாழ்வார். நாம் கண்ட இந்தக்காலத்திலேயே பத்துப்பாட்டும் உ.வே.சா-விற்கு தந்தருளிருக்கிறார்.வேதத்தைத் செந்தமிழால் சொன்ன மாறன் இன்றும் இருக்கிறார்.



உ.வே.சா சொல்வது:

               "நான் முதலில் லக்ஷ்மண கவிராயரென்ற ஒருவருடைய வீட்டிற்குப் போனேன். அவர் மிகவும் சிறந்த வித்துவானாகிய தீராத வினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடி கள் இருந்தன. பல பழைய நூல்களும், இலக்கணங்களும், பிரபந்தங்களும், புராணங்களும் இருந்தன. எல்லா வற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்த்து வந்தேன். நான் தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை, ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களின் "ஜாப்தா' இருந்தது.
                அதிற் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழு பாடல்களுள்ள பிரதியின் பெயர் ஒன்று. ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தி யொன்றையும் பெறாமல் தளர்ச்சியடைந்திருந்த என் மனத்தில் அப்பொழுது சிறிய ஊக்கம் பிறந்தது. அந்தச் சுவடிக் குவியல்களிலே பத்துப்பாட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.
                 மூன்று நாட்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். வந்த முதல்நாள் ஆவணியவிட்டம். ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த பள்ளிக்கூடப் பரிசோதகரும் என் நண்பருமாகிய சிவ ராமையரென்பவருடைய வீட்டில் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாளும் லக்ஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையிலே சில சமயங்களில் தாயவலந் தீர்த்த கவிராயர், அமிர்த கவிராயர் முதலிய வேறு கவி ராயர்கள் வீடுகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீடு களில் தேடினேன். லக்ஷ்மண கவிராயர் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்பட வில்லை. இது நான் புறப்பட்ட காலத்து ஏற்பட்ட சகுனங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்; என் உள்ளம் சோர்ந்தது.
அப்பொழுது லக்ஷ்மண கவிராயர், "எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர். தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்ச நல்லூர் சென்று விட்டார்கள். போகும்போது இங்கிருந்த சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்'' என்றார். "பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்ச நல்லூருக்குப் போயிருக்க வேண்டும். சரி; இவ்வளவு சிரமப்பட்டும் பயனில்லாமற் போயிற்றே!'' என்று வருந்தி நான் கூறினேன்.
                   அவர் திடீரென்று எதையே நினைத்துக் கொண்டு, "ஒரு விஷயம் மறந்து விட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். தேவபிரான் பிள்ளையென்பது அவர் பெயர். அவருக்கும் எனக்கும் இப்பொழுது மனக் கலப்பில்லை. என்னுடைய வீட்டிலிருந்த வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்தி விட்டேன்'' என்றார்.
"அவற்றையும் பார்ப்போம். தாங்கள் மட்டும் தயை செய்ய வேண்டும். எனக் காகவும், தமிழுக்காகவும் மனஸ்தாபத்தை மறந்து தாங்களே அவர் வீட்டில் இருப்ப வற்றை வாங்கித் தர வேண்டும்; என்னை வரச் சொன்னாலும் உடன் வருவேன்'' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்; அருகிலுள்ளவர்களும் சொன்னார்கள். கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டார்.
                  ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மனமும் சோர்ந்து, அவ்வூரில் ஸப்ரிஜிஸ்திராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன். இரவு அவர் வீட்டில் போஜனம் செய்து விட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் சிலர் நான் விரும்பியபடி திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பாசுரங்களின் பழைய வ்யாக்கியானங் களைச் சொல்லிக் கொண்டி ருந்தனர். நான் மிக்க விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்தேன். இயல்பாகவே அவ்வியாக்கியானங்களைக் கேட்டு அடையும் முழு மகிழ்ச்சியும் எனக்கு அப் பொழுது உண்டாக வில்லை. அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர் களது குறையன்று; என் உள்ளத்துக்குள்ளேயிருந்த, "பத்துப்பாட்டு அகப்பட வில்லையே!' என்ற கவலையே.
                         இப்படி இருக்கையில், அன்று ஏதோ விசேஷமாதலின், திருவீதியில் பெருமாளும், சடகோபராழ்வாரும் எழுந் தருளினார்கள். ஆழ்வார் அவதரித்த திவ்ய தேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம். நான் வணங்கினேன். பட்டர்கள் சந்தனம் புஷ்பமாலை முதலிய வற்றை அளித்தார்கள்.
எல்லோருடைய அன்பும் ஒருமுகப் பட்டு அத்தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது.
                             அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்தேன்; அவரைப் பார்த்து, "ஸ்வாமி! தமிழ் வேதம் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றைத் தேடி வந்திருக்கிறேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு, நான் படும் சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா!'' என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், "இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை' என்ற முடிவிற்கு வந்தமை யினால் இங்ஙனம் பிரார்த்தனை செய்தேன்.
                          பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத் தைக் கடந்து அப்பால் எழுந்தருளி னார்கள். உடனே நாங்கள் திண்ணையில் வந்து அமர்ந்தோம். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக் கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். திருக்கோயிலில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக் கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன்.
வந்தவர், "இந்த புஸ்தகத்தைப் பாருங்கள்; இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்து விட்டுத் திருப்பி அனுப்பி விடுவதாகச் சொல்லி வாங்கி வந்தேன்'' என்று கூறி மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார். அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்; மேலே கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன். சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் என் கண்ணிற்பட்டது.
                          நிலவில் மலர்ந்த அம் முல்லையினால் என் உள்ளம் மலர்ந்தது. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை யில்லை. மிகவும் விரைவாக முதலி லிருந்து திருப்பித் திருப்பிப் பார்த்தேன். ஆரம்பத்தில் திருமுருகாற்றுப் படை, அப்பால் பொருநராற்றுப்படை, அதன் பின் சிறுபாணாற்றுப்படை இப்படி நெடுநெல்வாடை முடிய ஏழு பாட்டுக்கள் இருந்தன. ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன். சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள்பட்டிரா.
அந்தச் சமயத்தில் மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே கருதியிருப்பார்; என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாகயிருந்தது. ஆழ்வாரை ப்ரார்த்தித்தது வீண் போகவில்லை. அவர் கண்கண்ட தெய்மென்பது ஐயமேயில்லை என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினேன்.
                         அன்று இரவு முழுவதும் ஸந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் திருக் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து, இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலம் செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டு வந்தேன்."

            இவை தாம் உ.வே.சா சொன்னது. உ.வே.சா எவ்வாறு மகிழ்ச்சியில் குதித்திருப்பார் என்று கண் முன்னே காண்கிறேன். (கிட்டதட்ட நானும் அப்படித்தான் இருக்கிறேன்). நிறைந்த மகிழ்ச்சியோடு அந்தக் கட்டுரையை முடித்தேன். மற்றொரு முறை திருவாய்மொழி - வள்ளுவர் பற்றி வேறொரு தகவலுடன் update பண்றேன்.சேரி., அந்த முல்லைப் பாட்டுல எதப் பத்தி சொல்லப்பட்டதுன்னு ஒரு சிறு குறிப்பு

           ஒரு சிறு அறிமுகம் - முல்லைப் பாட்டு -  நப்பூதனார் என்னும் புலவர் அகப்பொருள் பற்றி எழுதியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

Tuesday, August 27, 2013

முல்லை நிலத்தில் காயா மலர்

காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே. (ஐங்குறுநூறு-412)

                  இயற்கையை விட்டு நாமும் தள்ளி வந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் என்னென்ன பூக்கள் இருந்தன என்று சங்ககாலப் பாடல்கள் மூலம் தான் அறியலாம். கடைகளில் காண்பது கொஞ்சம் சிரமம் தான்.

          Onsite வந்ததிலிருந்து கோஷ்டி - திவ்யப்ரபந்தம் எல்லாம் கொஞ்சம் குறைந்துவிட்டது.சேரி., நம்ப ஆத்துல இருக்கற கிருஷ்ணன் ஒம்மாசிக்காவது ஏதாவது பண்ணலாம்ன்னு 5 நாள் உற்சவம் ஆரம்பித்தோம். தினமும் 100 பெரியாழ்வார் திருமொழி. இன்றோடு 3 நாள், 3ம் பத்துடன் முடிந்தது. தினமும் பெரியாழ்வார் என்னை அழவைக்காமல் விடுவதில்லை என்று பாட்டு எழுதியிருக்கிறார்.  'வெண்ணை அளைந்த குணுங்கும்' என்று வெண்ணைப் பிரசாதம், பூச்சூட்டல், காப்பிடல்.. அப்பப்பா!. ஆத்தில் பிறந்தக் குழந்தைக்குக் கூட இப்படிப் பார்த்து பார்த்துப் பண்ணுவோமான்னு தெரியல. அதனால தான் 'பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்'.

           நான் சிறுவயதில், திருமங்கலத்தில் இருந்தபோது ஆழ்வார்கள் பன்னிருவர் என்று மட்டும் தெரியும். திருப்பாவை-பல்லாண்டு (2 பாட்டு மட்டும்) தெரியும். அப்போது local கோவில்ல 'கிஷ்டு கானம்' கேசட் போட்டு speakerல connect பண்ணுவா. அதுல வர - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, கோகுலத்தில் ஒரு நாள் ராதை, ஆயர்பாடி மாளிகையில் இவை எல்லாம் தான் எனக்குத் தெரிந்த பெருமாள் பாடல்கள் (கிட்டத்தட்ட ஆழ்வார்க்கு ஒப்பாகா நினைத்திருக்கிறேன்).

           பின்னர் ஒரு நாள், திரளி கோவில் திருவோண உற்சவத்தில் ஏதோ ஈர்ப்பு ஏற்ப்பட்டு திருவாய்மொழி புஸ்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கொஞ்சம் முன்னேற்றம். ஏதோ அவர் பக்கம் கொஞ்சம் என்னை இழுத்திருக்கிறார். (காந்தம் போல). 2 வாரமா நம்ப ஸ்ரீகுமார், ரங்கா ஸ்ரீநிவாசன் (http://rangasrinivasan.blogspot.com), புருஷோத்தமன் எல்லாம் தினமும் 10 mail .ஒரே சத் விஷயங்கள் தான். இங்க இருக்கப்போற கொஞ்ச நாட்களுக்கு நல்ல சத்-சங்கம் கிடைத்தது மகிழ்ச்சி. விஷயத்துக்கு வரேன்.

           பெரியாழ்வார் புஷ்பக் கைங்கர்ய செய்ததால் தானோ அவரின் பாடல்களில் நிறைய பூக்கள் பற்றிய செய்திகளைக் காணலாம். யாராவது மலர்கள் பற்றி Phd பண்ணனும்னா இந்தத் திருமொழில வர பாடல்களைக் கொஞ்சம் படித்தால் போதும். இன்று படித்த பாடல்களில் 'காயா மலர்' என்று அறிமுகம் செய்கிறார். நீல நிற மலர். ஆதலால் அதை கண்ணனின் நிறத்திற்கு ஒப்பிடுகிறார். மற்ற ஆழ்வார்களின் பாடல்களில் காயா மலர் பற்றிக் கூறப் படவில்லை (நம்மாழ்வார் மட்டும் சொன்னதாக ஞாபகம்).




             இந்தப் பாடலைப் படிக்கும் போது 'அழகர் கோவில் -அழகர் வர்ணிப்பு பாடல்கள்' நினைவுக்கு வந்தது. நான் சிறுவயதில் கேட்ட அந்தப் பாடல்களில் 'காயாம்பூ வண்ணா' என்று வரும். இறைவனைத் தங்களுக்குள் இருத்தும் ஒருவகை நாட்டுப் புறப் பாடல். அழகர் கோவில் பிராகாரங்களில் கிராமத்து மக்கள் கூட்டாக அமர்ந்து இதைப் பாடிக் கேட்டிருக்கிறேன். பாடும் சிறிது நேரத்தில் அருள் வந்து , குறி கூறுவார் பாடுபவர்!.


         காயா மரம் முல்லை நிலத்தில் வளரும். முல்லை நிலத் தலைவன் திருமால்.அந்த மலர் நிறத்தில் கண்ணன் இருப்பது வியப்பில்லை. 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்' என்று சொல்லும் பெரியாழ்வார் அப்படி உவமைப்படுத்திச் சொன்னதும் வியப்பில்லை.

    அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு
    நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்
    என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை
    கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.                                                                                                               (பெரியாழ்வார் 3-3-6)

ஆரம்பத்தில் சொன்ன, ஐங்குறுநூறு என்ற எட்டுத் தொகை நூலில் முல்லை திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது போல ஒரு பாடல். அதிலும் இந்த காயா மலர் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் பல பூக்களை பற்றிச் சொல்லிருக்கிறார். விரிவாக எழுத வேண்டும்.

"அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி
செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே." (3-6-7).
               வள்ளுவரின் 'சிறிது வயிற்றிக்கும் ஈய்யப்படும்' என்பது கூட இதிலிருந்து வந்திருக்கலாம்.

             அவரின் பிள்ளைத் தமிழும் அபாரம். அவர் தான் முதலில் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுளைத் தொடங்கினார். இன்னும் பல உருக்கமான பாடல்களோடு இன்றைய 3ம் திருமொழியை முடித்தேன்.

Thursday, August 22, 2013

கோபிகா ஜீவன ஸ்மரனம்! கிருஷ்ணன் வந்தே ஜகத்குரும்!

                      "புளி புளிப்பாக இருந்தாலும் பாத்திரம் துலக்க உபயோகமாகிறது. ஆனால் வேறு கசப்போ, இனிப்போ, உப்போ பாத்திரத்தைத் துலக்க உபயோகப்படுவதில்லை. அதுபோல் புராணங்களிலுள்ள ஸம்பவங்கள் தற்போது நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மையான் ஆத்மசுத்தியைத் தருகிறது. மற்ற சுவைகளை சுத்தம் செய்வதற்கு உதவாததுபோல் வேறு உலகப் புத்தகங்கள் ஆத்மசுத்தியைத் தராது." --அண்ணா

                          ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி அண்ணாவின் 83 நாள் தொடர் 'மஹா பாரத' உபன்யாசம் இன்றோடு முடிந்தது.  வியக்கத்தக்க உபன்யாசம். சனாதன தர்மம், இராஜ தர்மம், ரிஷி தர்மம், பிராமண தர்மம், ஷத்ரிய தர்மம், பாரதத்தின் சிறப்பு-தர்மம், கிருஷ்ண லீலை ., வேதம், உபநிஷத் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்கள்.  ஆஹா. அவருக்கு இணை அவர் தான்!




                           பரிஷித் பட்டாபிஷேகத்தோடு முடித்தார். திருவல்லிக்கேணி பாசுரம், அதன் விளக்கம் அருமை. துவாரகையில் மறைந்த கண்ணன், திருவல்லிக்கேணியில் தோன்றினார். பாபு இராஜேந்திர பிரசாத் திருவல்லிக்கேணி கோவில் வீதியில் காரில் செல்ல மறுத்து நடந்து சென்றதாகவும், காரணம் கேட்டதற்கு 'நான் இந்தியாவிற்கு இராஜாவாக இருந்தாலும், உலகத்திற்கு இராஜா கிருஷ்ணன் தான். அவர் முன்னாடி காரில் அமர்ந்து 'ஜம்முனு' போகக்கூடாது. அவர்வந்து ஓட்டினா நான் உக்கார்ந்து போறேன்'  என்று நகைச்சுவையோடு சொன்னாலும் நடந்தே சென்றாராம். (இன்றைய நிலை சற்றே கண் முன்னாடி வந்து போனது:(). விவேகானந்தர் , பார்த்தாவுக்கு எழுதிய கடிதமும் இன்றைய உபன்யாசத்தில்!. இவை எல்லாம் 'குவலையத்தோர் தொழுதேத்தும்' வரிகளுக்கு! தினமும் அசத்தாலான நேரடி ஒளிபரப்பு (Live Streaming).





                      நடுநடுவே விசாகா ஹரி காலக்ஷேபம். A Grade Singer என்ன; A+++ கூடச் சொல்லலாம். அண்ணன்வின் சாயல் அப்படியே உபன்யாசத்தில்.
கண்டிப்பாக நாளையும் 9:30 AM EST க்கு srisrianna.com link click செய்து காத்திருப்பேன்.  அத்யயன உத்சவம் முடிந்தாலும் 21ம் நாள் காலையிலேயே கோவிலுக்குப் போறமாதிரி.:)

Wednesday, August 21, 2013

ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதக்கண்டே!

             ஒரு சில பண்டிகைகள் குடும்பத்தோடு, இல்ல ஊர்ல இருக்கற நிறையாப் பேரோடு கொண்டாடினாத் தான் நல்லா இருக்கும். அந்த வகையாரா தான் உபகர்மா (ஆவணி அவிட்டம்). வருடத்திற்கு ஒரு முறை வருவதால், பல இடங்களில் செய்த அனுபவம்.
             ஆறு, குளம் இந்தமாதிரி நீர் நிலைகளுக்கு காலையிலேயே சென்று சென்றுவிடுவர். 'batch by batch' நடக்கும் . கிட்டத்தட்ட 10-11 வரை கூட நடக்கும். 'எல்லாரும் வந்துட்டா. தலை ஆவணி அவிட்ட பசங்க எல்லாம் அரசக் குச்சியோட வாரா. ஆலாத்தி கரைச்சு வைக்கணும்'  என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி கரைத்து வைத்து நாங்கள்  வந்ததுடன் எடுத்து வாசலில் கோலத்தின் நடுவே சேர்ப்பர்.
             வைகைக் கரையில் முதல் உபகர்மா செய்த அனுபவம் இன்னும் கண்களின் முன்னால். வைகை நிறைய தண்ணீர். அப்போது நான் முடிக்க மட்டும் 10 மணி ஆகிவிட்டது. சூரியன் உதயமாகி 1.5 நாழிகை ஆனா பிறகு தான் துவங்க வேண்டுமென்று அப்போது படித்ததை பள்ளியில் அடுத்த வருடம் லீவ் வாங்கும் போது பயன் படுத்த வேண்டியதாகிவிட்டது. இன்று (2 நாளும்) யாரும் அந்த வைகை பக்கம் கூட போகல. வைகையிலும் தண்ணீர் இல்லை, யாருக்கும் அவ்வளவு நேரம் இல்லை.:(.



                1-2 முறை குளக்கரையில் செய்த அனுபவம். USல் 2 ஆவணி அவிட்டம் செய்தாகிவிட்டது. சென்னைக்கும் இதற்கும் ஒரு வேறுபாடுமில்லை. Batch ஆகா யாரும் காத்திருக்கப் போவதில்லை, வாசலில் ஆரத்தி சேர்க்கப் போவதில்லை. நான் பயன்படுத்திய புத்தகத்தில் நீர் நிலைகளில் நீராடி என்று அடிக்கடி இருந்தது. கொஞ்சம் பழைய புத்தகம் தான். அந்தக் காலத்தில் (10-15 வருஷம்) இது எல்லாம் இருந்திருக்கும். இயற்கையைத் தொலைத்து வாழக்கையைச் செயற்கையாய் மாற்றி வருகிறோம். பொறுமை, அனுசரித்துப் போறது இது மாதிரி பல விஷயங்கள் இது போல ஊர் கூடி கொண்டாரதல விஷேசங்களில் கத்துக்கலாம். நாம் தான் பக்கத்து வீட்டில் இருப்பவரைக் கூட அறியாமல் இருக்கிறோம். சரி.

              முன்னோர்கள் வேதத்தில் கண்டுபிக்காதது எதுவும் இல்லை. இன்றைய அறிவியலின் மூலம். சின்ன sample - இன்று செய்த சங்கல்பத்தில். பூமியில் எத்தனை கண்டங்கள் இருந்தன என்ற பலவற்றைப் பின்வரும் வேத வரிகள் கூறுகின்றன.

"அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே,ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்,ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே  விஜய நாம ஸம்வத்ஸரே..."

சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம் என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
 இந்த உலகை ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் இருப்பவர் ப்ரஹ்மா. தற்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில் என்பது அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே.

ஸ்வேத வராஹ கல்பே - க்ருஷ்ண வராஹ கல்பம், ஸ்வேத வராஹ கல்பம் இரண்டில் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம்.

வைவஸ்வதமன்வந்தரே - இப்போது ஆட்சி செய்யும் 7வது மனு வைவஸ்வத மனு (ஸ்வாயம்புவர்,ஸ்வாரோசிஷர்,உத்தமர்,தாமஸர், ரைவதர் ,சாக்ஷஷர், வைவஸ்வதர், ஸாவர்ணி ,தக்ஷஸாவர்ணி, ப்ரஹ்மஸாவர்ணி,   தர்மஸாவர்ணி, ருத்ரஸாவர்ணி,  ரௌச்யர் ,பௌத்யர் முதலிய 14 மனுக்கள்)

(அஷ்டாவிம்ʼஸ²திதமே) கலியுகே³ ப்ரத²மே பாதே³ - 28வது கலியுகத்தின் முதல் கால் பகுதி

ஜம்பூ த்வீபே - பூலோகம் ஏழு த்வீபங்கள் கொண்டது. ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் த்வீபத்தில் இருக்கிறோம்.(ஜம்பூ, ப்ளக்ஷ, புஷ்கர, குஸ, க்ரௌஞ்ச, சக, ஸால்மல)

பாரத வர்ஷே - ஜம்பூத்வீபம் 9 தீவுகளால் ஆனது -பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் (இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்றும் கூறுவார்)

பரதக்கண்டே மேரோஹோ, - பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.

இவைதாம் அந்த சங்கல்பத்தில் சொல்வது. துல்லியமாக நாம் எங்கு இருக்கிறோம், எந்த காலத்தில் இருக்கிறோம் என்று satellite உதவியே இல்லாமல் , பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டே வேதத்தில் சொல்லிவிட்டனர்.

இந்த பூமி முழுதும் பாரதத்தின் ஒரு பகுதி தான். ஆதனால் USலும் - பாரத வர்ஷே பரதக்கண்டே தான்!. இது பற்றி விஷ்ணு புராணம்

उत्तरं यत्समुद्रस्य हिमाद्रेश्चैव दक्षिणम् ।
वर्षं तद् भारतं नाम भारती यत्र संततिः ।।
uttaraṃ yatsamudrasya himādreścaiva dakṣiṇam
varṣaṃ tadbhārataṃ nāma bhāratī yatra santatiḥ
"The country (varṣam) that lies north of the ocean and south of the snowy mountains is called Bhāratam; there dwell the descendants of Bharata." (Thanks to Srinivasan Ramasubramanian for sharing VishnuPuranam quotes)

நிறைவோடு உபகர்மா, ஜெபம் முடித்தேன். வாசலில் நின்னு ஆரத்தி எடுத்துக்கோடான்னு அம்மா phoneல் சொன்னார். சிரித்துக்கொண்டே சரி என்றேன்.

Sunday, August 18, 2013

கடலைச் சேராத வைகை நதி

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து,  நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் (1 – 5)
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாள் அணிக் கூட்டும்
வகை சாலும், வையை வரவு.  (11-13)


வைகையில் வரும் வெள்ளம் பற்றிப் பரிபாடல் என்ற சங்க நூல் கூறுவது.

              "பிள்ளையார் மேடு ஆத்தங்கரைல குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா? தளிகையாக இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். பெருமாள் சேவிசிட்டு வாங்கடா. செல்லம்மாகிட்ட தயிர் வாங்கி வச்சிருக்கேன். கொஞ்சம் பழேதும் , மலை வடு, நார்த்தங்கா போடறேன். இப்போதைக்கு சாப்பிடுங்கோ. மத்யானம் தளிகை சாப்டலாம்" - இது எங்களுடைய சிறு வயதில் மதுரை-துவரிமானுக்கு விடுமுறைக்கு செல்லும் போது என் பாட்டியிடமிருந்து சொல்லும் வசனங்கள். அப்போது எல்லாம் (வெறும் 10-15 வருஷம் முன்னாடி தான் :( ). நாங்க வைகைல போய் தான் குளிப்போம்.
ஆண்-பெண் என்று தனியாக ஆற்றங்கரை.  'பிள்ளையார் மேடு' எனப்படும் எங்கள் வீட்டின் கொல்லைபுறம் உள்ள ஆற்றங்கரை சற்று மேடானது. ஒரு பிள்ளையார் சிலை இருக்கும். வெள்ளம் வரும் போது ரோட்டிற்க்கே வைகை வருவாள். போகும் வழியில் இருபுறமும் தென்னை மரம் , இலவம் பஞ்சு மரம், ஆற்றங்கரையில் நாணல், ஊமத்தம் பூ , காட்டுச் செடிகள் எல்லாம். பளிங்கு போல் ஆற்று நீர். வெள்ளத்தின் போது சற்றே செம்மண் நிறத்தில். அங்கு தான் பல் தேய்ப்பது , காலைக் கடன் , குளியல், சந்தியாவந்தனம் எல்லாம். முடித்துவிட்டு வீடு வர 10 மணி ஆகும். (பாட்டிகாலை 6 மணிக்கே ஆற்றங்கரை போய்விட்டு வந்திடுவாள்)அப்போது தான் மேல சொன்ன டயலாக் ஒலிக்கும். அப்படியே வாழ்க்கை இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. :(.
               அக்ரஹாரத்தின் கடைசியில்/முதலில் ரெங்கராஜ பெருமாள் சந்நிதி. நின்ற திருக்கோலம்-இரண்டு நாச்சிமார்களுடன். அதனருகில் அழகியசிங்கர் பிருந்தாவனம். 40-வது பட்ட ஜீயராக இருந்தவர் ரங்கநாத சடகோப யதீந்திரதேசிகர். 1913 ஏப்ரலில் அகோபிலமடத்தில் பட்டம் ஏற்றுக் கொண்டார். அக்காலத்தில் அகோபிலம்  ஷேத்திரத்திற்கு யாரும் போவதில்லை. மந்திரசித்தி கற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்சஷர், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரைத் தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியபோது நோய்வாய்ப்பட்டார்.1923 ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.அங்கு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.இன்றும் மேற்ச்சொன்ன நம்பிக்கையோடு பலரும் வந்து அவருடைய பிருந்தாவனத்தில் வணங்கிச் செல்கின்றனர்.பலரும் மிளகு வைத்து வணங்கி அதை மருந்தாகச் சாப்பிடுகின்றனர்.
               என்னுடைய தாத்தா -கோவிந்தையங்கார், அவருடைய அண்ணா-சுந்தராஜயையங்கார் ,அவர்களின் முன்னோர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக இருந்து பல ஆண்டுகள் வாழ்நாள் இறுதி வரை கைங்கர்யம் செய்துள்ளனர் இந்தக் கோவிலில். நானும் விடுமுறைக்குக் செல்லும் போது முடிந்ததைச் செய்வேன்.
 சரி, விஷயத்திற்கு வரேன். செல்லம்மா என்ற அந்த பாட்டி பசு-எருமை தயிர்ன்னு தனி-தனியா கொண்டுவருவாள். அழகர்  கோவில், புல்லூத்து (துவரிமான் அருகில் இருக்கும் ஒரு சிறு அருவியோடு சேர்ந்த காடு) இங்கெல்லாமிருந்து மாவடு வரும் -உருட்டு வடு மற்றும் கிளி மூக்கு வடு என்றெல்லாம். அது தான் ஊறுகாய்- மாசி மாதம் தொடங்கி அந்த வருடம் முழுதும். காலை சமையல் நேரமானால் பழைய சாதம்-மா வடு தான். ஆஹா! அதற்க்கு ஈடு -இணை எந்த உலகத்து உணவுக்கும் வராது. சில சமயம் அதனோடு மாம்பழம்!





                அந்த வாழ்க்கைப் பற்றி சொல்ல தனியாக ஒரு blog வேணும். இன்று அந்த வைகையும் இல்லை-அந்த வாழ்க்கையும் இனி வராது. இயற்கையோடு இயைந்த வாழ்வு , காலையில்  குளிப்பது, நாமே துவைப்பது, குளித்த பின் நம்மைப் படைத்த இறைவனுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவது , பிறகு உண்பது, இயற்கையாய் விளையும் பொருட்களை உண்பது இது போன்ற பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. இன்று வரை அப்படியே இருக்கிறேன்.
அப்போதெல்லாம் பசித்துப் புசி- குளித்துக் குடி-கசக்கிக் கட்டு இது போன்ற சங்க காலப் பாடல்கள் தெரியாது-எல்லாம் நம் வாழ்வோடு கலந்திருந்ததால்!. இவை எல்லாம் இக்கால சிறுவர்களிடம் குறைவது கொஞ்சம் வருத்தமே. அது இருக்கட்டும்.அந்த நேரத்தில் வைகை பற்றி ஒரு கவிதைப் போட்டி. 'கடலைச் சேராத வைகை நதி' என்ற தலைப்பில் DD-தமிழ் channelக்கு மரபு கவிதை எல்லாம் எழுதியிருக்கிறேன்.(இன்றும் வைகை கடலைச் சேர்வதில்லை நேரடியாக. இராமநாதபுரம் பெரிய கண்மாய் தான் அது சேருமிடம்) வைகை என்ற ஒரு நதியே இன்னும் கொஞ்ச காலத்தில் இல்லாமல் போகும். மணல் மாபியா, ஆக்கிரப்புகள்! உண்மையிலேயே இராமநாதபுரம்-RSபுரம் பெரிய கண்மாய் கூட சேராது! பரிபாடல் வரிகளை மீண்டும் படித்தேன். இயற்கையை விட்டு நாமும் விலகி வந்துவிட்டோம். இயற்க்கை நம்மை விலக்கவில்லை!

Wednesday, August 14, 2013

இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்!


வணங்குகிறேன்:

"நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்
இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். "

                 எத்தனை கட்டைகள் எரிந்தது, இன்று நாம் இந்த சுதந்திர சோற்றைச் சுவைக்க! நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்த தியாகிகள் எல்லாம் வீதிக்கு வராமல் இருந்திருந்தால், இன்று நம் நிலை? நான் பார்த்த, கேள்விப்பட்ட 2 தியாகிகள். தன்னலமற்றவர்கள். விடுதலைப் போரட்ட தியாகிகள் மதுரை துவரிமான் இராமஸ்வாமி, திருமங்கலம் புலி ஐயர்.

               ஒருவர் துவரிமானில்(மதுரை) வாழ்ந்த இராமஸ்வாமி.அவர்கள் வீட்டிற்கு அருகில் தான் எங்கள் வீடு. விடுமுறைக்கு அங்கு செல்லும் போது நிறையப் பார்த்திருக்கிறேன். அக்ஹ்ரஹாரதில் பிறந்திருந்தாலும் நாடு என்று வந்தால் மற்றது எல்லாம் பின்னாடி தான் என்று வாழ்ந்து காட்டியவர். நாட்டின் மீது கொண்ட பற்றால் சுதந்திரத்திற்கு பின்பே திருமணம் செய்து கொண்டார். தன் கடைசி காலம் வரை மாதம் 1 நாள் உணவு உண்ண மாட்டார். காரணம் கேட்டேன் - நாட்டிற்காக 1 நாள் செலவை அர்ப்பணித்து அதை சேமிக்கிறேன் என்பார்.
              மற்றொருவர் - நான் படித்த திருமங்கலத்தில் (மதுரை) வாழ்ந்த புலி ஐயர். காமராஜரின் நெருங்கிய நண்பர். தனக்கென எந்த ஆசையும் இல்லாமல், முக்கிய வீதியில் (மீனாக்ஷி அம்மன் கோவில் அருகில்) இருந்த விசாலான தன் வீட்டைக் கூட இந்த நாட்டிற்கு எழுதி வைத்தார். காமராஜர் முதல்வராய் இருந்த போது இவருக்கு Rs.200 கண் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அதில் மீதியைக் கூட இவர் திரும்ப அனுப்பி வைத்துவிட்டார்.
               
             நான் அறிந்த இருவருமே செல்வசெழிப்போடு இருந்தவர்கள். நாட்டிற்காக எல்லாவற்றையும் துறந்தார்கள். இவர்களால் தான் இன்று நாம் வாழ்கிறோம்!

Tuesday, August 13, 2013

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!



                           வழக்கம் போல் 7-8 அடுக்கு பலத்த காவல்துறையின் உச்சகட்ட பாதுகாப்புடன், தீவிரவாதிகள் அச்சுறுத்தலோடு சுதந்திர தினத்தைக் கொண்டாடயிருக்கிறோம். பிரமதரும்,முதல்வர்களும் பாதுகாப்பான கூண்டிருக்குள் நின்று உரையாற்றப் போகிறார்கள். 'ஆரஞ்சு' மிட்டாய்களைப் பள்ளிகளில் எண்ணி எண்ணி கொடுப்பார்கள். கல்லூரிகளில் கேட்கவே வேண்டாம். விரல்விட்டு எண்ணும் அளவிற்கே வந்திருப்பர். ஓய்வறியா சூரியன் போல் காவல்துறையும், போக்குவரத்துத் துறையும் செயல்படும். Corporate Company இந்தியாவிற்கு நேரடியாக வேலை செய்யாததால் நான் பார்த்தவரை இது போன்ற தேவை இல்லாததை எல்லாம் கொண்டாடியது இல்லை (அவர்களுக்கு christmas, women's day, valentine's day இது தான். அப்பறம் யாருக்காவது பிறந்தநாள்-treat). தொலைக்காட்சி நிகழ்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

                          ஒரு தியாகி பற்றிக் கூட பேசப்போவதில்லை. நான் சொல்ல வந்தது சுதந்திர போராட்ட தியாகிகள். (தியாகி என்றால் இப்போது ஜாதிக்காகவோ, ஒரு நடிகருக்ககவோ இல்ல இது போன்ற சமூக முன்னேற்றத்திற்க்காகவோ உயிரைவிட்டவர்கள் என்று இன்றைய நிலைமை).  ஏதோ புரியாத படங்கள், அது பற்றிய நிகழ்ச்சிகள், உதவாத பட்டிமன்றம் இத்யாதிகள். அது சரி! இது போல் சந்தோசமாய் இருக்கத்தான அன்று போராடி சுதந்திரம் பெற்றோம். 'compulsory attendance' என்று சொன்னால் தான் மாணவன் கூட நாளை பள்ளிக்கு வருவான். பக்தி என்பது  தானாக வரவேண்டுமென்றாலும் சமுதாயமும் அதற்க்கு ஒரு காரணி தான்! அது தேச பக்தியோ, ஆன்மீக பக்தியோ!
என்றும் தியாகிகள் எல்லையில் நின்று போராடுபவர்களே! அவர்களையும் வணங்குகிறேன்!

ஆடுவோமே பள்ளு பாடுவோமே,ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே
பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே
இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே
கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்.

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம்
இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்
இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

Monday, July 15, 2013

TCEயில் தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் - பாரதி

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அண்மையில் படித்தது-உண்மைத் தன்மை தெரியாது.
"ஆங்கிலம் வணிகத்தின் மொழி
இலத்தீன் சட்டத்தின் மொழி.
கிரேக்கம் இசையின் மொழி
ஜெர்மன் தத்துவத்தின் மொழி
பிரஞ்சு தூதின் மொழி
இத்தாலி காதலின் மொழி"
                    என்னைப் பொறுத்தவரை தமிழுக்கு அப்படி வரையறை செய்ய முடியாது.வரையறுக்க முடியாத பண்புகளைப் போதிக்கும் மொழி.மொழியையும், அதை நன்கு கற்பவர்களையும் இழந்து வருகிறோம்.  மொழி சம்பந்தப்பட்ட அனுபவம்- கல்லூரிப் பருவத்தில்

                    நான் தியாகராஜர் பொறியியற்க் கல்லூரியில் ஒரு 6 வருஷம் படிச்சேன்.எனக்குத் தெரிந்தவரை எந்த பொறியியற்க் கல்லூரியிலும் தமிழ்க்கு தனி முக்கியத்துவம் இருக்காது. பிற மொழி மாணவர்கள் நிறைய படிக்கறதால அது சாத்தியாமும் இல்ல.வருசத்துக்கு தமிழை மையப்படுத்தி 3-4 பாடத் திட்டம் சாராப் பிறதுறைச் செயற்பாடுகள் மாதிரி வைக்கலாம். நாம கல்லூரிப் பாடமே அப்படித் தான் படிப்போம். சரி இருக்கட்டும். 2001 - நான் BSc Applied Sciences படிக்கும் போது A.P.J. அப்துல் கலாம் என் கல்லூரிக்கு உரையாற்ற வந்தார். அப்போது அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகர்.



                   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  ஏதோ கருத்தரங்கு முடித்துவிட்டு  வந்ததாக ஞாபகம். கல்லூரி திருவிழாக் கோலம் தான். ஆங்காங்கு தோரணம்-பதாகை எல்லாம். 1 வாரத்துக்கு முன்னாடியே பசங்க எல்லாருக்கும் ஒரு வாய்மொழி ஆணை.அவர் கிட்ட என்ன என்ன கேள்வி கேட்கணும்ன்னு ஒரு பட்டியல் தயார் செய்யும்படி. யாரும் கேட்கலாம். அதில் ஒரு கட்டுப்பாடும் இல்ல. எனக்கு அந்தயளவுக்கு கேட்கற மாதிரி எந்த கேள்வியும் இல்ல. நானும், நண்பர் அன்பழகனும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினோம். ஏறத்தாழ   அனைவரும் வாங்கியிருப்பார்கள். 2 நாள் கழித்துத் தான் அது என் கை சேர்ந்தது. அத்தனை குவிந்திருந்தன. நிகழ்ச்சிக்கு வரேன்.
                      வரவேற்புரை முடிந்ததும் அவர் பேசவந்தார். 'நண்பர்களே உங்கள் எல்லாருக்கும் என் வணக்கம்' என்று தமிழில் கூறியதும் அரங்கத்தில் சலசலப்பு-நிற்காத கைதட்டல்கள்; இவர் தமிழில் பேசுகிறாரே என்று! அனைவரின் நிலை கண்டு வியந்தேன்.தமிழகத்தில் பிறந்து, தமிழில் கற்று, தமிழில் இரு வார்த்தைகள் பேசியதால் தான் இந்த வியப்பு;ஒருபுறம் கவலையுற்றேன்! நான் எப்படிப்பட்ட சமுதாயத்தில் இருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.  கிட்டதட்ட 60-70% தமிழ் அறிந்த மாணவர்கள் தான்.இதே போன்றது நண்பரின் கல்லூரியிலும் நடந்ததாகக் கூறக் கேட்டேன்.