Wednesday, May 20, 2020

கள்ளழகர் - தோழி விடு தூது

கள்ளழகர் - தோழி விடு தூது

வருஷத்திற்கு ஒரு முறை நடக்கும் திருவிழா. சுமார் நான்கு இலட்சம் மக்கள் அந்த 5 நாட்களில் கூடுவார்கள். அதே அழகர், அதே வாகனம். ஆனா,  நம்ப மதுர சனம் எந்த சில்லாவுல இருந்தாலும் ஓடி வருவோம்ல. மூணு மாசத்துக்கு முன்ன டிக்கெட் போட்டு, ஆபிசில முன்னாடியே லீவு சொல்லி காத்துக்கிடப்போம் அந்த ஒருநாளைக்கு. சமயத்துல லீவு கிடைக்காது, டிக்கெட் இருக்காது. வீட்டுலேர்ந்து வேலை பார்க்கும் வழியும் இருக்காது. ஆனாலும் கடைசி நிமிஷம் வரை போகணும்ன்னு ட்ரை பண்ணுவோம். யார் வந்தாலும் வரலேன்னாலும் அவரு மட்டும் ஜம்ம்ன்னு வந்திருவாரு.. சீயான் தோள்களில் பேரக் குழந்தை மொட்டையோடு, தோல் பையில் தண்ணீரோடு துருத்தி பீச்சுவார், கோமாளிகள், சவ்வு மிட்டாய்காரர், பீப்பி காத்தாடி, பொருட்காட்சி, பெரிய விசிறியோடு தாத்தா, நீர்மோர், சொம்புகளில் நாட்டு சர்க்கரையில் எரியும் கற்பூரம், பச்சைக் கொடி இன்னும் எத்தனை. அந்த ஒரு நிமிஷம்,  ஒத்த கிளியோட அவரு குதிரையில் வர, ’இந்த வருஷம் என்ன பட்டு?’, ‘அட பச்சை தான்’ என்று சொல்லும்போதே   ‘கோயிந்தா...’ அம்முட்டுதான்னப்பு எங்க பக்தி. மிச்சதெல்லாம் அவனே பாத்துப்பான். இந்தவாட்டி (2020) ஏதோ வியாதிக்கு பயந்து சனமே ஊர்ல தான் இருக்கோம், அந்த சாமி மட்டும் வரல. 

முப்பது வருடத்திற்கு முன் கொள்ளுப் பாட்டி என் கையைப் பிடித்துக்கொண்டு போய் கள்ளழகர் எதிர் சேவை சேவிக்க வைத்ததும், சில வருடம் முன் என் பாட்டி கையை நான் பிடித்துக்கொண்டு மதுரை வீதிகளில் அதே விழாவில் நடந்ததும் நினைவில் வந்து போனது.  தலைமுறைகள் கடந்த பாரம்பரியம் நிறைந்த திருவிழா. மதுரையின் வாழ்வோடும், மக்களோடும் கலந்து ஓடுகிறது இந்த திருவிழா. ஒரே நாளில் அழகர் கோவிலில் அனைத்து அலங்காரங்களும் நடந்து, நேரலையில் பார்க்க முடிந்தது. 'பார்க்க முடிந்தது' மட்டுமே ஒரு ஆறுதல். ஆனால் இது வாட்ஸாப்ல் வரும் வீடியோ போல் தான். அந்த அனுபவம் தனி மேலே சொன்னது போல. 

இதை மையமாய் வைத்து, இலக்கியங்களில் வருவது போல் (பெரும்பாலும் குறுந்தொகை) ஒரு விருத்தம் எழுதலாம் என்று எண்ணி, முதன்முதலாய் (இலக்கியமாய்) 11 பாடல்கள் எழுத முடிந்தது. பாடல்கள் ஐந்து சீர் கொண்ட கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். கொஞ்சம் தளைகள் தட்டலாம். அவற்றை சரிசெய்ய கொஞ்சம் நேரம் வேண்டும். முயற்சிக்கிறேன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரைக்கு அழகர் வராமல் கண்டு, தலைவி வருந்தி, தோழியை தலைவி தூதுவிடுகிறாள். 
பாடல்களுக்கு சிறு முன்னுரை பொருள் 

நால் தடந்தோள் காயா வண்ணம் காணா*
தால் தடுக்க கைவளை கழன்றோடச் சென்று*
பால் அன்ன மேனியும் பசலையுற்று நலிவெய்த*
மால் கண்டு சொல்லாய்வாகை வடம்சூடும் தோழி!* (1) 
         
பா-1 : தலைவி மதுரையில் இருக்கிறார். அழகரைக் காணாது, அவர் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார். அவளின் நாக்கு குழறுகிறது. அவளின் பால் போன்ற நிறமும் பசலை நோய் கண்டு நிறமே மாறியது. இவற்றை வெற்றி மாலை சூடும் தோழி மூலம் தூதுவிடுகிறார்.

சுந்தர பாண்டிய பட்டிணம் நல்முனி அடியாரில்நிரம்ப*
சுந்தர குழற்க்கட்டொடு கள்ளர் தலைக்கச்சு எதிர்நோக்க*
சுந்தர தோழி நின் சொல்லின் வலி கொண்டு*
சுந்தர தோளுடையான் அடி சேர்ந்து சொல்லாயோ?** (2)

நாடி வந்த களிற்றிக்கு சுழற்றிய தன்ன*  
தேடி வந்த வினைதீர செயிவளரி சுழற்றி*
பாடியாடி வந்து நிற்க்கும் பெருங்குழுவு பற்ற*
ஓடிச் சென்று கள்வன்செவி சொல்லாய் தோழி** (3)

பா-2,3;
மக்கள் அனைவரும் எதிர்சேவை காண காத்திருக்க, அழகர் மலையிலிருந்து வராமல் கண்டு, இப்போது வந்திருக்கும் வினையைக் களைய தன் கையில் பிடித்து வரும் ‘வளரியைச்’ சுழற்றுமாறு, அழகரை அழைத்துவர எஞ்ஞான்றும் வாகை மாலை தரிக்கும் தோழியை தலைவி தூது அனுப்புகிறார்.


சங்கப் பாமாலை சாற்றும்  வண்புதுவை கோதைதன்*
திங்கள் நாயகன் அடை கோலக்கிளி தன்னோடு*
அங்கயல் கண்ணி கிள்ளை தஞ்சமென பற்றநீ* 
பாங்காய் தல்லாகுளம் தங்குநாளென்று சொல்லாயோ தோழி!* (4)

பரியேறி பசுந்துகில் சாற்றும் பரமன் அன்று*
அரியாய்  தூண்பிளந் தருள் செய்த  கோலம்*
தெரிந்தே செப்பினேன் இன்றிவர் வரும் காலமென்று*
பரிந்தோடி உள்ளாரும் சொல்லாயோ தோழி!* (5)

பா - 4,5
4. கள்ளழகர் என்கிற தலைவன் வராமல் இருக்க தோழியை தூதுவிடுகிறார் தலைவி. இது நடப்பது எதிர் சேவையின் பிறகு. பெருமாள் தல்லாகுளம் கோவில் வரவேண்டிய நேரம். ஆண்டாள் மாலையும் கிளியும் வந்தது. அந்தக்கிளியோடு மீனாட்சி கிளியும் தோழமை கொண்டு காத்திருக்கிறது.
5. அழகர் குதிரை வாகனம் ஏறும் நேரமும் வந்தது, பச்சைப் பட்டோடு. அப்போதும் வராமல் இருக்கக்கண்டு, நரசிம்மர் போல் விரைந்து வர கேட்கிறார் தோழி வழியாக உள்ளாரும் சொல்லாய் என்று,.இம்முறையும் அதே தோழி தான்.


வைகல் வருமுன் இக்கரை சேரும் அக்கறைகொண்ட*
வைகுந்தன் இன்று வருவானோ?வென புல்லாணி போகா*
வைகையும் துயில்மறந்த நகர்தனில் நின்றதென*
வையம் அளந்த மாயனிடம் சொல்லாய் தோழி!* (6)

ஆயர் வெண்ணை கொண்ட திருவதரம் தும்பி
சாய்க்கவீழ்  மாந்தேன் சேர்  சிலம்பாறு தீர்த்தம்* 
மாயர் நாளும் சுவைத்து மாமதுரை வந்தாரென* 
தாயர் விளித்து நட்டபாடை பாடாய் தோழி!* (7)

பா - 6,7 - அழகர் வராதது கண்டு வருந்தியும், அழகர் வந்ததாய் மகிழ்ந்தும் தலைவி உரைப்பது

6. திருமாலிருஞ்சோலை அழகர் விவேகவதி என்ற  வைகைக்கு வரவில்லை என்று வைகையே கடலை நோக்கிச் செல்லாது உறங்காநகரான மதுரையில் தங்கியதாய் வைகையின் வருத்தம் பற்றி தலைவி தோழி மூலம் செய்தி அனுப்புகிறார். கடலைச் சேராத ஒரே நதி வைகை தான். இன்றும் அது இராமநாதபுரம் கண்மாய் தான் சேர்க்கிறது. ஆனாலும் அதை ஏறிட்டு தலைவி கூறுகிறார்.

7. அழகர்மலையில் யானை ஒன்று மாமரத்தைச் சாய்க்க,அதன் பூவிலிருந்து தேன் சிலம்பாற்றின் நீரில் கலக்க,அதை ஆயர் கையால் வெண்ணையுண்ட அழகர் தினமும் பருகுகிறார்.அதைவிடுத்து அவர் மதுரை வந்துவிட்டார் என்று தன் தாயாரிடம் தெரிவிக்கும் படி தோழியிடம் சொல்கிறார். தோழி இன்குரலில் நன்கு பாடக்கூடியவர்.அவரை, ‘நட்டபாடை’ என்ற தமிழ்பண்ணில் பாடச் சொல்கிறார் தலைவி.


செஞ்சொல் கூட்டி கோதை தூதுசெய் வேங்கடம்சேரா
மஞ்சும் * மலையென மயங்கி மாலிருஞ்சோலை மாரியாக்கியந் *
அஞ்சன முகில்கொண்டு எம்தழலு மாற்றுமழகன் வரவுகாண *
நஞ்சு முண்டாந்தானும் நிற்கும்நிலை சொல்லாயோ தோழி!* (8)

காரைக் கிணறு கழித்து கள்ளவேடம் தான்நோக்கி*
நாரை கதிமோட்சம் நல்க நான்மாடக்கூடல் நாடும்நின்*
தாரை பாதம்தாங்குவார் நின்வாய்ச் சொன்னவகை படிசேர்*
வாரையொடு ஆண்டார்கோட்டம் கூடினவகை சொல்லாய் தோழி!* (9)

பா -8,9 - மதுரையின் தற்போதைய நிலையும், அழகர் கோவிலிலுள்ள நிலையும் அதே தோழி வழியே தூதுவிடுகிறார் 

 8. ஆண்டாள் மேகத்தை திருமலைக்குத் தூதுவிட, அதுவோ இது தான் திருமலை என்று அழகர் அழகில் மயங்கி இந்தமலையில் மழை பொழிந்தது. அந்த மழை மேகத்தோடு வந்து தலைவியின் உள்ளத் தணலையும், மக்களுக்கு குளிர்ச்சியும் அளிக்க வருவதைக் காண ஆலவாய் அழகனும் காத்திருப்பதாய் தலைவி சொல்கிறார்.   

9. முன்காலத்தில் காரைக்கிணறு என்ற இடம் கடந்தபின் தான் கள்ளர் வேடம் பூணுவார் அழகர். அதற்க்கு அழகரை அழைத்துவர திருப்பாதம் தங்குவார் பலரும், கீதையில் சொன்ன அத்யாய கணக்கில் (18) இருக்கும் படிகளுக்கு அருகிலிருக்கும் (திருமலை)ஆண்டார் மண்டபத்தில் பல்லக்கு வாரையோடு காத்திருப்பதாக தலைவி செய்தி சொல்கிறார் தோழி மூலம். மதுரையில் நாரைக்கு மோட்சம் கொடுப்பதும் உண்டு. அது போல் தனக்கும் கேட்கிறார்


அர்த்தம் அறிவர் பின்னானாள் வாய்நேர்ந்த* குறை
தீர்த்த பாங்கில், ஓன்றுநூறாயிரமாய் நிறைந்த அடிசிலொடு
தீர்த்தம் கொணர்ந்து நாட்டார் மஞ்சனமாட்டி கூத்தாட
பார்த்தன் பாகனாய் பரியேறிவர பாடாய் எழில்தோழி! (10)

தண்தரும் எதிர்சேவை தந்து முனிசாபம் நீக்க
வண்டியூர்தனில் அரவும் புள்ளும் ஏறி* ஓரிரவில்
விண்ணோர் வியக்க ஒன்பதோடு ஓருரு* காட்டுநாளில்
பண்பாடும் அடியாரொடு கலக்க, இல்லையினி பிறப்பே (11)

பா-10,11 - கடைசி இரண்டு பாடல்கள். தோழியை மீண்டும் பாடச் சொல்கிறார் தலைவி.

10-ஆண்டாள் வாய் நேர்ந்ததை பின்னாளில் இராமானுஜர் நிறைவேற்றியதால், கோதை சொன்னது போல் இன்றும் வைகைக் கரையில் பல மண்டகப்படிகளில் ஒன்று நூறாயிரமாய் அக்கார அடிசில் செய்கின்றனர். நாட்டார் எல்லாம் தண்ணீரை அழகன் மீதும் பீச்சுகின்றனர் உரிமையோடு. இதைச் சொல்லி பார்த்தசாரதியை அழைக்கிறார் எழில் தோழி மூலம். (அர்த்தம் அறிவர் - பாஷ்யக்காரர்)

11-மண்டூக முனி சாபம் நீங்க, கருட, ஆதிசேஷன் வாகனத்தில் வந்து, ஒரே இரவில் ஒன்பது அவதாரமும், தனியாய் மோஹன அவதாரமும் காட்டும் இந்தத் திருநாளைத் தொண்டர்களோடு சேர்ந்து காண்பவர்களுக்கு இல்லை மறு பிறப்பே என்று முடிக்கிறார் தலைவி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குருந்திடை கோபாலகன் (சிறுகதை)


குருந்திடை கோபாலகன் (சிறுகதை)


வலம் இதழில் வெளிவந்த இரண்டாவது சிறுகதை


--------------------------------------------------------------------------
கற்பனை கலந்த சரித்திரக் கதை. மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை அடிப்படையாய்க் கொண்டது. பழமையான கிராமம், கோவில். ஆனால் இப்போது அந்தப் பழமை குன்றி, தன் வரலாற்றையும் தொலைத்துக் கொண்டிருக்கும் இடம். அண்மையில் அங்கு சென்ற்போததான் இதன் பழமை தெரிந்தது. அந்த கோவிலின் உற்ஸவர் சிலைகள் காணாமல் போய் இன்னும் கிடைக்காமல் உள்ளது என்பது ஒரு கசப்பான செய்தி. ஏதோ ஒரு அரசனால் பல காலம் முன் கட்டப்பட்ட இதுபோன்ற பொக்கிஷங்களைக் காக்கவேண்டியது நம் கடமையோடு உரிமையும் கூட! எனக்கு வெறும் ஊரின் பெயர் மட்டுமே தெரியும். அதை பல சமகால வரலாற்று நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி இதை இப்படி ஒரு புனைவாக விரிவாக்கியிருக்கிறேன். கதை நடக்கும் காலம் பதினான்காம் நூற்றாண்டு. பொன்னின் பெருமாள் என்ற சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சியின் காலம். அவர்தான் தென்காசி கோவிலைப் பல சிற்பங்களோடு அழகுறக் கட்டியவர். தமிழ் வல்லார்.



டக்.. டக்.. டக்...’ என்று பறந்து வந்த குதிரையின் குழம்படி ஓசை சற்றே குறையத் தொடங்கியதுஅந்த வெண்ணிறப் புரவிகளிலிருந்து இரண்டு வீரர்கள் நீண்ட அரண்மனை கோட்டைக் கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றார்கள்அவர்களைக் காவலர்களும் எதுவும் கேட்கவில்லைஅங்கே எதிர்ப்பட்ட உபஅமைச்சர் நரசிம்மராயரிடம் ஏதோ கூறஅவர் இருவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனையின் பின்புறம் அமைச்சர் இருக்குமிடத்திற்குச் சென்றார்அவர்கள் சென்று கொண்டிருந்த காலம் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதிதுலுக்க ஆட்சியிலிருந்து மீண்டு பாண்டிய நாடு தன் பண்டைய அடையாளங்களான கலைஇலக்கியம் மற்றும் அமைதியான வாழ்க்கையைத் தொடங்கியிருந்ததுஇருந்தாலும் உள்நாட்டுப் பகைசிற்றரசர்கள்சேரர்கள் என எல்லாத் தரப்பிலும் கொஞ்சம் நெருக்கடி இருந்ததுமக்கள் தங்கள் பழமையை மறந்தே போயிருந்தார்கள் இந்த அறுபது வருட முகலாயர் ஆட்சியில்இந்தச் சம்பவம் நடக்குமிடம் இராஜபாளையம் என்ற கிராமம்பாண்டியப் படைகள் ஒரு பகுதி இருக்கும் பாளையம்அரசரும் அவ்வப்போது இங்கு தங்கிடுவதால் இராஜ பாளையமாயிற்று.

தலைமை அமைச்சர் செல்வநம்பி அவர்களைக் கண்டவுடன் திடுக்கிட்டு எழுந்தார்வந்திருந்தவர்கள் தலைமை ஒற்றர் வீரவல்லபரும்மற்றொருவரும்.

வீர வல்லபரே.. என்ன அவசரம்இந்த பாளையம் பக்கம் வரவேண்டிய கட்டாயம் ஏதுமுண்டோ? என்றார் செல்வநம்பி தலைமை ஒற்றர்அருகில் இருக்கும் பாலகனைக் கொஞ்சம் புதிதாய்ப் பார்த்தவராய்.

ஆம் அமைச்சர் பெருமானேசிறிது அவசர அவசியச் செய்தி.. இந்த பாலகன் பெயர் சுந்தரன்நம் படையில்தான் உள்ளான்.’

.. நம் மன்னர் இந்த அரண்மனை வந்து சில நாட்களாகிறது... மீண்டும் சுந்தரனைப் பார்த்தார்.

அமைச்சரே.. நீங்கள் தயங்காமல் பேசலாம்இவன் கொண்டுவந்த செய்தி பற்றித்தான் அரசரிடம் சொல்லவேண்டும்சில மாதங்கள் முன் காவிரிக்கு அப்பால் இருக்கும் சம்புவரரயர்கள் ஏதோ திட்டம் தீட்டுவதாய் ரகசியத் தகவல் கிடைத்தது.’

ஆம்அதுதான் தெரிந்ததாயிற்றேஅதன்பின் அரசர் உம்மை கண்காணிக்கச் சொன்னது எல்லாம் நடந்த விஷயம்தானே.’

ஆம் அமைச்சரேஅதன் பெயரில் சுந்தரன் வட காவிரியில் சிலகாலம் ஓடக்காரன் வேடத்தில் இருந்து கவனித்து வந்தான்இப்போது அங்கிருந்து மிக அவசரச் செய்தியை கொண்டு வந்துள்ளான் என்று அந்தச் செய்தியை வல்லபர் அமைச்சரிடம் சொன்னார்.

மிகவும் ஆபத்தான செய்திதான்நாம் மிக விரைந்து செயல்படவேண்டும்அரசர்களிடம் இதைக்கொண்டு சேர்க்கவேண்டும்சரிநாம் உள்ளே போய் அவரைப் பார்க்கலாம்ஆனால்.. என்று சற்றே அமைச்சர் யோசிக்க,

என்ன அமைச்சரே..? மன்னர் இங்கில்லையா..?’

இல்லைஇங்குதான் உள்ளார்ஆனால் பாடம் வாசிக்கிறார்அதனால்தான் குறுக்கிட யோசித்தேன்.’

பாடமா? என்றான் சுந்தரன்.

ஆமப்பாஇந்த துலுக்கப்படை வந்து போனவுடன் நம் மக்களின் கலாச்சாரம் மாறிப்போனதைவிட பெரும்பாலானவர்களுக்கு மறந்தே போனதுநம் அரசரும் பல நற்பணிகளைச் செய்து நம் இழந்த பெருமைகளை ஜனங்களிடம் எடுத்துச் செல்கிறார்தென்கலை வடகலை தெளியுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து என்ற அரசரின் மெய்க்கீர்த்தி போல் திராவிட மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்தவராயுள்ளார்ஆனாலும் திங்களின் சில நாட்கள் இந்தப் பாளையம் வந்து தமிழறிந்தவர்களிடம் பண்டைய இலக்கியங்கள்ஆழ்வார்கள்நாயன்மார்கள் பிரபந்தங்கள் என்று சில நேரம் வரியிடை பயில்கிறார்.’

.. அதனால்தான் இந்த பாளையத்திற்கு அடிக்கடி வருகிறாரா?’

அதுமட்டுமல்ல.. நம் பகைவர்களும் ஒரு முக்கியக் காரணம்தெற்கில் இருக்கும் எதிரிகளைச் சமாளிக்கஇந்தப் பாளையத்தைக் கொஞ்சம் வலிமையானதாய் மாற்ற தானே நேரில் வந்து உரியவற்றையும் செய்கிறார்அதற்கும் இங்கு வந்து தங்குகிறார்குலசேகரன் பெரும்பாலும் மதுரைக் கோட்டையில் தங்கியிருப்பார்சரிநாம் சற்றே போய் வாயிலில் காத்திருப்போம்வாசிப்பு முடியும் நேரம்அவர் வந்தவுடன் சந்திக்கலாம்.. என்று அமைச்சரோடு மற்றை மூவரும் வந்தனர் அரசரின் பயிலகம் முன்

உள்ளே..

மறக்களை பறித்து நல்லறப் பயிர் விளைவித்து என்ற கீர்த்தி போல் அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சிஷ்யனாய் அமர்ந்து வாசிக்கஅவரின் இளவல் சடையவர்மன் குலசேகர பாண்டியனும் உடனிருக்கஅன்று அவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. அதிலும் அதே திருமல்லிநாட்டில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பாடல்களின் பொருளை ஒரு வித்வான் மூலம் செவிமடுத்துக்கொண்டிருந்தார்கள்அவர் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்திருந்தசின்ன வேத பிரான் பட்டர்பெரியாழ்வாரின் வழி வந்தவர்கள்முன்னொருகாலம் ஸ்ரீ வல்லபதேவ பாண்டியனுக்கு ஒரு ஐயம் வந்த போதுஅதற்குத் தக்க பொருள் கூறி சமாதானம் செய்ததால் பெரியாழ்வார் மீது பேரன்பு கொண்டனர் பாண்டியர்கள்அதே வம்சத்தில் வந்தவர்களிடம் இந்த மன்னனும் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

பட்டர் அன்று நாச்சியார் திருமொழியில் கண்ணன் ஆய்ச்சியர்களின் துகிலை ஒரு குருந்தை மரத்தில் மறைத்தது பற்றிய பின்வரும் பாசுரங்களைச் சொல்லி அதற்குத் தகுந்த விளக்கமும்ஸ்ரீமத் பாகவதத்தில் இது பற்றிச் சொன்னதுஅதை ஆண்டாள் அனுபவித்தது எல்லாம் கூறிக்கொண்டிருந்தார்.

பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்*அரக்கநில் லாகண்ணநீர்கள் அலமரு கின்றவா பாராய்*இரக்கமே லொன்று மிலாதாய் இலங்கை யழித்த பிரானே!*குரக்கர சாவ தறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்*’

அந்த இராமன்தான் கண்ணனாய் வந்தார்அவர்தான் மீனோடுஆமைகேழல் என்ற தசாவதாரங்களையும் எடுத்த திருமால்அவரே நம்மைப் படைத்துக் காத்து வருகிறார் என்றெல்லாம் ஆண்டாளின் பாசுரங்களிருந்தும்மற்றைய வடமொழி இதிகாசங்களிருந்தும் மேலும் பல அர்த்த விசேஷங்களை விவரித்தார் பட்டர்ஆழ்ந்து வாசித்து வந்த மன்னர் வெளியில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டுபட்டரிடம் அனுமதி பெற்று வெளியில் வந்தார்வெளியில் அமைச்சருடன்ஒற்றர் தலைவனும் இருக்கவே மன்னருக்கு விவரம் தீவிரமானது என்று விளங்கியதுபட்டரிடம் கூறிவிட்டுமற்றை அனைவரையும் அழைத்துக்கொண்டு தனி அறைக்குச் சென்றார்.

வல்லபரே.. ஏது அவசரம்..? இவர்தானே நாம் வட காவிரியில் அமர்த்தியவர்?’

ஆம் அரசே.. சுந்தரன்தான்நாம் ஏற்கனவே ஆலோசித்தபடி இவன்தான் காவிரியில் இருந்துகொண்டு கண்காணித்து வந்தான்சில நாட்களாய் சம்புவரையர்களின் நடமாட்டம் அதிகமாகியிருக்கிறதுஅவர்களை கொஞ்சம் உன்னித்து பின்தொடர்ந்து வந்துள்ளான்.’

சுந்தரா.. சம்புவரையர்கள் என்ன திட்டம் தீட்டியுள்ளனர்கம்பண்ண உடையார் இந்த சம்புவரையரைப் பணிய வைத்துத்தான் மதுரையிருந்த அந்நியப் படைகளை விரட்டினார்அவர்களுக்கு பாண்டிய மண்டலத்தின் மீது ஒரு விரோதம் எப்போதுமேயுண்டு.’

அரசே.. நேற்று இராஜ நாராயண சம்புவரையரை மதுரையிருந்து வந்த மாபலி வாணராயன் சந்தித்தார்இந்த சந்திப்பு வீரதளவாய்புரத்தில் நடந்தது...’

கோபம் உச்சத்தில் இருந்த மன்னர் பெரிய கர்ஜனை செய்தார்யார்நம் பாண்டிமண்டலத்து புதுக்கோட்டை கோனாட்டில் இருக்கும் குலசேகர மாபலி வாணராயன் வம்சத்தினராஅவர்கள்தான் அந்நிய படையெடுப்பின்போது தங்களை தனியரசாய் அறிவித்துக்கொண்டனர்இப்போது நமக்கு எதிராகவே இறங்கிவிட்டனரா?’

வீர வல்லபர் தொடர்ந்தார்அரசே.. அவர்கள் திட்டப்படி இன்னும் சிலதினங்களில் நம் மீது பலமுனை தாக்குதல் நடத்த உள்ளனர்முதலில் உள்நாட்டில் ஏதாவது கலவரம் ஏற்படுத்திவிட்டுபின் சேரர்கள் மூலம் பாளையம்கோட்டை பகுதியில் தாக்க திட்டமிட்டுள்ளார்கள்மக்கள் அனைவரும் தென்காசி கோவில் திருப்பணி செய்துவருவதால் இந்தப்பக்கம் தாக்கினால் பலன் கிடைக்குமென்று திட்டமிட்டுள்ளனர்.’

சிறிய மௌனம்அரசர் ஏதோ யோசனையில் அமர்ந்தார்.

ம்.. என்ற பெருமூச்சிற்குப் பிறகு மன்னர் தொடர்ந்தார்.

சரி.. நம் பகைவர்களுக்கு நம் பாண்டியகுல வீரம் என்னவென்று காட்டவேண்டிய தருணம் மீண்டும் வந்துவிட்டதுதிருக்கோவில் கைங்கர்யம் செய்வதால் அரசை கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டான் போலும் சேரன்சேரனையும் சேர்த்துக் கவனித்து விடவேண்டியதுதான்.’

அமைச்சரேஉடனே நாம் மதுரை போகவேண்டும்மந்திரலோசனைக் கூட்டம் அங்கு நடக்கட்டும்.’

பாளையங்களில் உள்ள படைகள் தயார் நிலையில்தான் உள்ளது அரசேஅவர்கள் எந்த நேரத்திலும் களத்திற்கு வர ஆயத்தமாய் இருக்கிறார்கள்தவிர அரையர்போரரயர் போன்றோருக்கு விழிப்புடன் இருக்க செய்தி அனுப்பிவிட்டேன்மந்திரலோசனை கூட்டம் முடிந்து செயல்படுத்த வேண்டியதுதான்.’

நல்லது செல்வநம்பியாரே..’

தம்பி குலசேகராநீயும் அமைச்சரும் பாளையங்களில் சென்று பார்வையிட்டு சூர்ய அஸ்தமனத்திற்குள் மதுரை வரவும்அங்கிருந்து நீ வடக்கு எல்லையைப் பார்த்துக்கொள்ளலாம்நான் இங்குவந்து திருக்குற்றால எல்லையைக் கண்காணிக்கறேன்உள்நாட்டுக் கலகத்தை சமாளிக்கநான் ஏற்கனவே தேர்ந்தெடுத்த அரையர்கள்காலிங்கராயர்கள் உள்ளனர்அவர்களுக்குத் திருமுகம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு சுந்தரா உன்னுடையதுஇப்போது நாம் கிளம்புவோம்.. என்று மொத்தத் திட்டத்தையும் சொன்ன மன்னன்மதுரை போக ஆயத்தமாயினான்மன்னரே திட்டமிடுவதாயினும் ஆலோசனைக்கூட்டத்தில் தேர்ந்தவர்களின் அறிவுரை கேட்டே செயல்படுத்துவது மரபு.

அவசரமாய்ப் பயணிக்க வேண்டியிருந்ததால்மன்னர் சிறு பாதுகாப்புப் படையோடு தன்னுடைய குதிரையில் கிளம்பினார் மற்றவர்கள் அரசனின் கட்டளைப்படி நடக்கத் தொடங்கினர்சிறிது நேரத்தில் அந்த இராஜபாளையம் பரபரப்போடு இயங்கத் தொடங்கியது.

மன்னர் கொஞ்ச நேரத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூரைக் கடக்கநெடிந்து உயர்ந்த கோபுரத்தை வணங்கி மேலும் செல்லலானார்சற்று தூரத்தில்மலர்களின் வாசமும்இயற்கையின் வனப்பும் நிறைந்த சோலைகள் விரிந்த சோலைபட்டி அவரை ஈர்த்தது.. அதன் வழியே மாற்றுப்பாதையில் பயணித்தால் மதுரையை விரைவில் அடையலாம் என்று அவ்வழியே தன் பயணத்தை மாற்றினார்வீரர்கள் திடுக்கிட்டுப் பின்சென்றனர்அங்கு கமண்டல நதி ஓடி அவ்வழியைப் பசுமையாக்கி கொண்டிருந்தது அதைக்கடந்து சென்றதும்குரா என்கிற குருந்தை மரங்கள் அடர்ந்து கானகம் போல் காட்சியளித்ததுதிடீரென்று யாழ் பிடித்த சிறு பாணன் ஒருவன் பாடல் கேட்டது தான் இருக்கும் அவசர வேலையிலும்அந்தப்பாடல் அரசரைக் கட்டிப்போட்டதுபாணர் பின்வரும் பாடலைப் பாடினான்.

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்குண்ட்
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,*.பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு* 
என் வாசக் குழலி இழந்தது மாண்பே*

அந்தக் குறைந்த நேரத்தில்இந்தப்பாடல் நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்றும்குருந்தை மரத்தைக் கண்டதால் இப்பாடல் பாடியதாகவும்ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அப்பாணன் மூலம் அறிந்துகொண்டார் மன்னர்பாணருக்கு பாரிசில் தந்துவிட்டு மதுரை நோக்கி மேலும் பயணமானார்வெகுவிரைவாக மதுரையை அடைந்தார்அங்கு இருக்கும் தளபதிகளுடன் ஆலோசித்து அடுத்த திட்டங்களை வகுக்கலானார்.

இதற்கிடையேகுலசேகரன்அமைச்சரோடு மதுரை நோக்கி வரத் தொடங்கினான்மன்னர் மாற்றுவழியில் சென்றது அறியாதுவழக்கமான வழியில் சென்றான்அந்த வழியில்தான்பழைய பாண்டியர்களின் சுதையினால் கட்டிய கோட்டை ஒன்று உள்ளது. (தற்போது சுதைக் கோட்டைசிவரக்கோட்டை என்றானது.) பாண்டியர்களின் பெரும் பரந்த படைகள் தண்டு இறக்கிய செழும்படை (செங்கபடைகிராமம் எல்லாம் கடக்கும்போதுகுலசேகரன் வித்தியாசமான ஒன்றை உணர்ந்தான்அருகிலிருக்கும் கோட்டையில் வாள் வீசும் சப்தம் கேட்டதுஎதிர்த்திசையில் சிலர் ஓடிவருவது தெரிந்ததுகுலசேகரன் வாளை எடுத்துச் சுழற்றலானான்வாள் மோதிய சப்தமதான் கேட்டதுகண நேரத்தில் பலர் மடிந்திருந்தனர் குலசேகரன் வாளால்அதற்குள் அமைச்சர்சுதைக் கோட்டைக்கருகில் சிலரை வீழ்த்தியிருந்தார்கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்ததுஇருவரும்அரசர் இவ்வழிதானே சென்றிருப்பார்.. என்ன நடந்ததோ? என்ற அச்சத்தோடு மதுரை விரைந்தனர்.

அரசர் மதுரை வந்திருப்பது அறிந்து நிம்மதி கொண்டனர்நேராய் அரசரைக் கண்டு நடந்ததைக் கூறினர்அரசர் யூகித்தது சரியாய்ப் போனதுஉள்நாட்டுக் கலகம் என்று வீர வல்லபர் சொன்னது பற்றி அரசர் சொன்னார்நான் அந்த வழியில் வரவில்லைசில சோலைகள் கடந்து மாற்றுப்பாதையில் வந்தேன்நான் அவ்வழி வந்திருந்தால் என்னையும் தாக்க முயன்றிருப்பர். அதற்குள் மந்திராலோசனைக்கு நேரமானதால் அனைவரும் அங்கு கூடினர்.

அரசர் ஏற்கெனவே போட்ட திட்டம் பற்றிச் சொன்னார்முக்கிய மந்திரிகள் தங்கள் நோக்கைச் சொல்லினர்முடிவில்குலசேகரன் மதுரையிருந்து கோட்டையைக் காக்கவேண்டும்சிறுபடை ஒன்று வாணராயன் வம்சத்தினரை கோனாட்டில் சிறைப்படுத்தும்பராக்கிரம பாண்டியர் இராஜபாளையம் சென்று திருக்குற்றால போருக்குத் தயாராயிருப்பார்தென்காசி கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கும்தான்யாதிகாரி மக்களுக்கும்படைகளுக்கும் தேவையான தானியங்களைக் கண்காணிப்பார்சோழபாண்டியருக்கு ஓலை அனுப்பி தேவைப்பட்டால் அவர்களின் ஆதரவைப் பெறுவார் செல்வநம்பிஇப்படி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டனதிருமுகம் வரைவோர் மூலம் சில தேவையான ஆணைகள் அரையர்களுக்கும்காலிங்கராயர்களுக்கும் அனுப்பப்பட்டன.

இம்முறை பாளையம் செல்லும் போதும் பராக்கிரம பாண்டியர் அதே குருந்தை வனப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்அழகான இயற்கை சோலைகளில் லயித்ததால்அவர் பயணப்பட்டதே தெரியாமல் இருந்ததுஇராஜபாளையமும் அடைந்தார்எதிர்பார்த்தது போலவே இரண்டு நாட்களில் மேலை மலை அடிவாரம் வழியே சேரர் படை வரத்தொடங்கியதுஅதற்குள் பராக்கிரம பாண்டியர் திருக்குற்றாலத்தைப் போர்க்களத்திற்குத் தயார் செய்தார்அருகிலிருந்த கிராம மக்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறினர்போரில் சாதாரண குடிகளுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாதென்று அரசர் மிகக் கவனமாய் இருந்தார்நாடுகூற்றம்வளநாடுமண்டலம் என்று பாண்டிய நாடே மிகச் சிறந்த நிர்வாக அமைப்பைப் பெற்றிந்ததுபாண்டியப் படைகளுக்குத் தேவையானதை எளிதில் கொண்டுவர அருகிலிருந்த கிராமக் கூடாரங்களில் தேவையான ஏற்படுகளை அந்தந்தக் கூற்றத்தின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பாண்டியர்கள் பெரும் படையோடு அவர்களை எதிர்கொண்டார்கள்கடும் போர் மூண்டதுஒரு கிழமை (வாரம்கூட சேரன் படையால் தாக்குப் பிடிக்கமுடியவில்லைஅவர்கள் எதிர்பார்த்த உள்நாட்டுக் கலகம் குலசேகரனால் முழுதும் சிதைப்பட்டதுசேரன் படைகள் தோற்று பின்வாங்கினஇனிமேல் சேரன் போருக்கே வரவேமாட்டான் என்ற அளவுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதுவாணராயன் வம்சத்தினரும் ஒடுக்கப்பட்டனர்பாண்டிய மன்னனின் வீரமும் விவேக ஆற்றலும் படைகளுக்குத் திறன் கூட்டினஇப்பெரு வெற்றியைக் கொண்டாட அனைவரும் விரும்பினர்ஒரு விஜயாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதுஅது மன்னன் மழவராயன் சிங்காசனம் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் நடக்கவிருந்தது.

பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலம் போர் முடிந்துசில நாட்கள் இராஜபாளையத்தில் இருந்தார்பின்னர் தென்காசி கோவில் திருப்பணிகளை நேரிடையாகப் பல முறை பார்த்தார்விஜயாபிஷேகத்திற்கு நாள் நெருங்கும்போது மதுரை நோக்கிப் பயணமானார்வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அந்த பாணன் சொன்ன பதிகத்திற்கு விளக்கம் கேட்டறிந்தார்மீண்டும் மதுரைக்கு அதே வழியில் பயணமானார்அதே குருந்தை மரங்கள்அதன் பூக்கள் தரும் மணம்.. அருகில் ஓடும் கமண்டல நதி.. ஆண்டாளின் பாசுரங்கள்பட்டரின் விளக்கம்..முன் இராமாவதாரத்தில் இலங்கையை அழியச் செய்து உபகரித்தவன்.. பாணனின் இனிய குரலில் பாசுரம்.. இவையெல்லாம் மாறிமாறி வந்தன அவர் நினைவில்ஒருகணம்கமண்டல நதியே அவருக்கு கண்ணன் ஆய்ச்சியர்களின் ஆடைகளை மறைத்த பொய்கையாகத் தோன்றியது.

தேரோட்டி.. சற்றே நிறுத்தும்.. மன்னர் கீழே இறங்கினார்.

அலகிலா விளையாட்டுடையவன் இறைவன்இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? என்று ஆண்டாள் கேட்ட கேள்விக்குஎங்கோ செல்லவேண்டியவனை இந்த வழியில் திருப்பிஇந்த கமண்டல நதி ஓரத்தில்தான் இருக்கிறதை நிரூபிக்க இத்தனை விளையாட்டா!

அமைச்சரே.. பாண்டியநாட்டில் முல்லைஞாழல் காடுகளைத் திருத்தி கோவில் கட்டியதாய் இலக்கியங்களில் சொன்னது போல்அதே பாண்டிய பூமியில்இந்த குருந்தை என்ற குரா மரங்களைத் திருந்தி அதன் நடுவே கண்ணனுக்கு கோவில் எழுப்புவோம்அவர் கண்ணன் மட்டுமல்லதிருமால் அவதாரம்அந்த பாணன் யாழிசை போல் இனிய குழல் ஊதும் கண்ணனாய்திருமாலின் சின்னங்களாக திருவாழிதிருச்சக்கரத்தோடும் இருப்பார்நான்கு திருக்கரங்களோடு வேணு கோபாலனாய்அரசால் இந்த இடம் திருவிடையாட்டமாகவும்அந்தணர்களுக்கு வீதிகளும் அமைத்து உருவாக்கப்படட்டும்குரா மரங்களால் உருவானதால் இது குராயூர் என்றும்பொன்னின் பெருமாள் சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கப்படட்டும்...’

அமைச்சர் உட்பட அனைவரும் ஆனந்தத் திகைப்பில் நின்றனர் மன்னரின் திடீர் பேச்சைக் கேட்டுஓலைப்படுத்துவோர் அனைத்தையும் ஆவணப்படுத்தினர்மன்னர் விஜயாபிஷேகம் இனிது முடிந்ததுஅங்கங்கு நடக்கும் சில பிரச்சினைகளை பராக்கிரமனும்குலசேகரனும் தீர்த்து வைத்தனர்சில திங்கள்களில் குராயூர் கோவில் திருப்பணி முடிந்ததுபொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியனும்சடையவர்மன் குலசேகரப் பாண்டியனும் மங்களாசாசனம் செய்தனர்ஆயர்களின் கண்ணன்அந்த ஊரில் குருந்திடை தோன்றிய கோபாலனாய் நான்கு திருக்கரங்களோடு குழல் ஊதும் வண்ணம் ருக்மணி-சத்யபாமாவோடு வீற்றிந்தார்அதே பாணியில் உற்ஸவ மூர்த்திகளோடுஅந்நியப் படையெடுப்புகள்பண்டைய கலாசார மறைவுஉள்நாட்டுப் பகை என்று பலவற்றை எதிர்கொண்டிருந்த மக்கள்நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லரசர் கிடைத்த களிப்பில் ஆனந்தமாய் வாழ்ந்து வந்தனர்.

*

இன்றுஅந்நியப்படையெடுப்பிற்குப் பின் இவற்றைக்கூட நம்மால் காக்க முடியவில்லைகாலத்தின் வினோதமாய் அந்தப் பொக்கிஷங்களை நாம் காக்க மறந்துவிட்டோம்அந்த உற்ஸவ மூர்த்திகள் மன்னர்கள் கட்டிப் பராமரித்த கோவிலில் இல்லைஇருக்குமிடம் ஆராயப்படுகிறதுகோவில்களை நம்மிடம் விட்டுச் சென்றதற்கு மன்னர்கள் வருத்தப்படத்தான் செய்திருப்பர்.