Sunday, December 14, 2014

பன்னாட்டு நிறுவனத்தில் பாரதி திருவிழா


          வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் 
                கவிதையினை, வேந்தனே, நின்
          நயப்படுசந் நிதிதனிலே நான்பாட 
             நீகேட்டு நன்கு போற்றி,
         ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள், 
             பொற்பைகள், ஜதிபல் லக்கு
         வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் 
              பல்லூழி வாழ்க நீயே!

(எட்டயபுரம்-1919 ஆம் வருடம் மேமாதம் 2 தேதி - சுப்பிரமணிய பாரதி)
(பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்;சுயசரிதை;சீட்டுக்கவிகளும் ஓலைத்தூக்கும்)

                            பல வருடங்களாக எனக்கிருந்த கனவு ஒரு 2 நாள் மின்ன நிறைவேறியது - பூரணமாக.. ஆம்!. மிகக்கொடிய வறுமையிலும் தேசத்தைப் பற்றியே சிந்தித்தார் பாரதி. சீட்டுக் கவியில் ஜதி பல்லக்கு கேட்டார், எனக்கு அந்த ஜதி பல்லக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எந்த வீதியில் பாரதி கால்கள் பதிந்ததோ, எந்த வீதியில் தினமும் பெருமாள் புறப்பாடு கண்டருள்வாரோ அந்த வீதில் ஜதி பல்லக்கு. 4 நாட்கள் நடக்கும்  உற்சவம் பாரதிக்கு. ஏற்பாடுகள் பிரமாதமாகச் செய்திருந்தனர் 'வானவில் பண்பாட்டு' மையத்தினர்.. ஆனால் வந்திருந்த பிரபலங்களிடத்தில் அதில் கொஞ்சம் தொய்வு  இருந்தது.. ஆம், இங்கும் குரூப் போட்டோ, ஷெல்பி போட்டோ, அப்பறம் பாரதி கூட சேர்ந்து போட்டோ!:(.. சரி.. இந்த மாதிரி ஒரு சுதந்திர நிலையைத் தானே பாரதி தேடினான்.

பாரதி திருவிழா - திருவல்லிக்கேணி 11/12/14

                                     பிரபலங்கள் என்று அறியப்பட்டவர்களில், சினிமா சாராத நபர்கள் குறைவு.. கலந்துகொண்டவர்களில் கொஞ்ச வயசு பசங்க கொஞ்சம் தான்-என் போன்றவர்கள்.. காலை முதல் பெய்த மழை கொஞ்சம் இடைவெளி கொடுக்க,~9:30 மணிக்கு விழா துவங்கப்பட்டது. ஜதி பல்லக்கில் கம்பீரமாக பாரதி வீற்றிருந்தார்.. பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.வந்திருந்த சினிமா பிரபலம் ஒருவர், என்னருகில் இருந்தவரைப்பார்த்து 'ஏன்பா, உன்கிட்ட கேமரா இருக்கோ, நான் பாரதி பக்கத்துல நிக்கறேன் 2 போட்டோ எடுத்துரேன்' என்றபடி அவரை அழைத்துச் செல்ல அவரும் மொபைல் போன்ல் கஷ்டப்பட்டு பூ போடுவது போலவும் என்று 2-3 snap எடுத்தார்.. கண்டிப்பாக அடுத்த சில  மணி நேரங்களில் அவரின் facebook பக்கத்தில் அந்த படங்கள் அலங்கரித்திருக்கும். 'கேளடா மானிட, இங்கு கீழோர், மேலோர் இல்லை' என்ற பாரதி பாட்டு ஒரு நிமிடம் என் செவியில் ஒலித்தது..






பாரதியின் வம்சம் - ஸ்ரீ. இராஜ்குமார் பாரதி



                  விழாவிற்கு பாரதியின் வம்சத்தில் வந்த இராஜ்குமார் பாரதி வந்திருந்தார். சினிமா பிரபலங்கள் பக்கம் பேசியதைப் போன்று யாரும் அவரிடம் பேசவில்லை. அவரும் எந்த மேட்டுமையும் இன்றி பாரதியின் வம்சம் , நிறை குடம் என்பதை நிரூபித்தார். அவர் உட்காரக் கூடவில்லை.. செல்பி, பாரதியோடு போட்டோ எதுவும் எடுத்துக்கல.. 2-3 டிவி சேனல் மட்டும் அவரை பேட்டி கண்டன..


                               மயிலாப்பூர் பள்ளி மாணவிகளின் நடனம் அப்பறம் பாரதி ஜதி பல்லக்கு துவக்க விழா உரை.. வா.வே.சு அவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார். 'அத்திரம் பூ, அஞ்சலிப் பூ என்பது யாது., பாரதிக்கு தேசிய விழா எடுக்க வேண்டும்; சீட்டுக் கவியில் பாரதி கேட்ட ஜதி பல்லக்கு என்பன பலவற்றைப் பற்றிப் பேசி அசத்தினார் (ரமணன் சார் கட்டித் தழுவினார்:)).. ஜதி பல்லக்கு சினிமா, பிஜேபி தலைவர்களோடு கிளம்பியது.. நான் பின்னால் நடந்து சென்றேன்.. ஒரு ஆச்சர்யம்- என் பக்கத்தில், என் கையில் உரசியது போல பாரதியின் வம்சம்..என்ன ஒரு எளிமை. ஆஹா.. இதைவிட எனக்கு என்ன வேண்டும்... தெற்கு மாட வீதி முழுதும் நான் அவர் கூடவே சென்றேன்.. பின்னால் நடந்தவர்கள் நாங்கள் 2-3 பேர் தான்.. முன்புறம் குழந்தைகளின் நடனம். 'பாரத சமுதாயம் வாழ்கவே' பாடலுக்கு ஆடினார்கள்.. எத்தனையோ நாட்கள் பெருமாள் உற்சவத்தில் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொண்டு அந்த வீதியில் நடந்திருக்கிறேன்.ஆனால் இன்று பாரதி வம்சத்தாரோடு நடந்தது புது கம்பீரம் கிடைத்தது (என்னை அறியாமலே). பாரதி சொன்ன மாதிரி, 'புது சக்தி பிறக்குது மூச்சினிலே'..அவரிடம் பேச நினைத்தேன்.. வார்த்தைகள் தடுத்தன. இருவரும் பாரதியின் பாடல்களை ரசித்துக் கொண்டு நடந்தோம். அது போதும்.


பாரதியின் வம்சம் - ஸ்ரீ. இராஜ்குமார் பாரதி - ஜதி பல்லக்கின் பின் , பாரதி பாடலை ரசித்த படி..



கீழுள்ள பாடலோடு பல்லக்கு அவர் வீட்டை அடைந்தது.. அங்கும் சில புதிய சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர்..  ஆரத்தி எடுக்கப்பட்டது.. ஒருவர் 'சார், இத எங்க, எப்படி கொட்டனும்' என்றார் அருகில் இருந்த வைணவ மாமாவிடம்..


   
'ஓம் சக்தி,ஓம் சக்தி,ஓம்' பாடல், நித்யஸ்ரீ குரலில்.  இந்தப் பாடலுக்கு இந்தக் குரல் தான்!

https://www.youtube.com/watch?v=hCT0atl717Y&list=PL2o1DP4l0OenG1yi0jnBVYKWykzdblgys&index=1


                              என்னைக் கவந்தவர்கள் - ஸ்ரீ.இராஜ்குமார் பாரதி, இசைக் கவி இரமணன் சார், வா.வே.சு. சார். மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு.. Thanks and big salute to 'வானவில் பண்பாட்டு மன்றம்'. உண்மையான பக்தர்கள், தேசாபிமானிகள் நிறைய வந்திருந்தனர்.. உணர்ச்சிகரமாக பாடல்களைப் பாடினர். சில பிரபலங்கள் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்!

                                    பலவித கேள்விகளோடு (!), உற்சாகமாக அலுவலகம் கிளம்பினேன்.. சேரி., இப்போவாவது தலைப்புக்கு வரேன்.. நம்ப IT கம்பெனில யாருக்காவது டீம்ல இருக்கறவனுக்கு பிறந்தநாள் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கும்.ஒரு collection போட்டு, கேக் வாங்கி, cafeteria/canteenல் கூட்டமாகக் கூடி, மெழுகுவர்த்தி அனைத்து, கேக் வெட்டியவுடன், அதை எடுத்து விருப்பபட்டவர்களின் முகத்தில் பூச வேண்டும்.. கேக் உண்பதைக் குறைத்து, அதை எப்படி எல்லாம் வீணடிப்பது என்றே பாக்கணும்.. இது western கலாச்சாரம் என்று சொன்னால் தவறு.. அங்கு கூட யாரும் முகத்தில் பூசி வீணடிப்பதில்லை.. இது மாதிரி ஒரு கன்றாவிலும் நான் பங்குகொண்டதில்ல.. 2010 என்னோட பிறந்தநாளைக்கே நான் போகாமல் அனைவரும் கொண்டாடினர்.. அப்பறம் பெரும்பாலும் என்னை யாரும் அழைப்பதில்லை.. ரொம்ப நல்லதுன்னு விட்டுடேன்.. IT கம்பெனி இப்படி இருக்க பாரதியாருக்கு எங்க போய் கொண்டாடுவது. நானும், வினோத்தும் 2-3 நாளாக '' விஜயிடம் கேட்டுப் பார்த்தோம்.. அவரோ, 'ஜி ட்ரை பண்றேன்.. ஆனா இதுக்கு எல்லாம் யாரும் அவ்வளவு கேர் எடுத்துக்க மாட்டாங்க' என்றே சொன்னார்.. (ஆனால் மற்ற 'Fun activities, கிறிஸ்துமஸ் activities' இத்யாதிகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டது) 7-8 வருசமா இத எல்லாம் பார்த்த எனக்கு, அதுவும் உண்மை, சாத்தியமற்றது என்றே தோன்றியது..  இன்று சுதந்திரமாக இருக்கும் நமக்கு, அதை அனுபவிக்கும் நமக்கு, அதன் விலை தெரியவில்லை. 'தண்ணீர் விட்டா வளர்த்தோம்;சர்வேசா! செந்நீரால் காத்தோம்' என்ற பாரதியின் பாடல் தான் ஓடியது. என் டீம்லையும் நிறைய பேர் நல்ல பற்றோடு தான் இருக்கிறார்கள்.. ஆனால் இருக்கும் இடம், சூழ்நிலை, நடப்பு வட்டம் தான் அதற்க்கு இடம் தரவில்லை..  இருந்தாலும் ட்ரை பண்ணலாம்னு ஒரு எண்ணம்..
                          வினோத் கொஞ்சம் சப்போர்ட் பண்ணினான்..'செந்தமிழ் நாடென்னும்...., எந்தையும் தாயும்..., யாமறிந்த மொழிகளிலே..' என்று பாடிய கவிக்கு கேக் வெட்ட மனம் உட்படவில்லை.. நான், இராம், வினோத் மற்றும் மீனாக்ஷி சுந்தர் காரப்பாக்கம் போய் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்தோம்.. பாரதியார் படத்தை என்னோட deskல் ஒட்டினேன். பாரதி கவிதைகள் புத்தகத்தை அருகில் வைத்தேன். வினோத் கொஞ்சம் அவசரப்பட எல்லாருக்கும் மெயில் அனுப்பினேன் -
'It is Great day for us - Bharathi's Birthday. Please serve sweets yourself at my office' என்று. அப்போதுதான் பலருக்கும் பாரதி பிறந்தநாள் பற்றித் தெரிந்தது. விஜய் வந்து எனக்குக் கை குலுக்கினார்..ETL டீம்மில் இருந்தவர் 'Who is பாரதி' என்று கேட்டது காதில் விழுந்தது..நான் கொஞ்சம் விலக்கினேன்.. 'ஓ பாரதியாரா?' என்று சட்டென்று பிடித்துக்கொண்டார்.  'நீங்க பாரதி இரசிகரா?'என்று மற்றுமொரு குரல் அதே ETL டீம்லிருந்து.. இல்ல 'பக்தன்'. எப்போதும் history பத்தி பேசும் சிவா, என் சீட்க்கு வந்து 'சூப்பர், கலக்கல்' என்றார். நானோ 'கலக்கியது பாரதி' என்றேன். Desk வந்து ஸ்வீட் எடுக்காதவர்களுக்கு ஹரி அவரவர் இடத்திற்கே போய்க் கொடுத்தார்.. அதை பார்க்க ரொம்ப சந்தோசமாய் இருந்தது.. 'சினிமா பிரபலங்கள் இல்ல, உணவு வீணாகவில்லை'. மிகவும் அமைதியாக முடிந்தது எங்கள் பாரதி விழா பன்னாட்டு அலுவலகத்தில்.. ஆனால் இதன் மூலம் கொஞ்சபேராவது பாரதி பற்றி அன்று ஒரு நாளாவது படித்தனர்.. அடுத்த தலைமுறைக்கு இதைக் கொஞ்சமாவது எடுத்துச் சென்ற உணர்வு இருந்தது.. இராம் ஒரு படி மேலே போய், பாரதி படத்தை ஒட்டியவுடன் நன்றாக கை எடுத்துக் கும்பிட்டான்.. அவனை அறியாமல்.. ஆம்..பாரதி தான் வணங்கத்தக்கவர்..ஒரு நாளோடு முடியவில்ல எங்களோட பாரதி விழா., மறுநாளும் தொடர்ந்தேன் அலுவலகத்தில், வேறொரு கோணத்தில்.





                       நேற்று நடந்த (14/12) பாரதி விழாவில் விசாக ஹரியின் கதாகாலக்ஷேபம்.. பாரதியின் கண்ணன் பாட்டு பற்றி. அருமை..ருக்மணி கல்யாணத்தில் பாரதி பாடல்கள்!:)




மேலுள்ள பாரதியின் பாடல் பற்றி குறிப்பு (tamilvu):
(ஸ்ரீ பாரதியார் புதுவையிலிருந்து வெளியேறிய பிறகு, எட்டயபுரத்தில் சிறிது லம் வசித்து வந்தார். ஜீவனத்திற்கு மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம்.இருந்தாலும் ஜமீந்தாரை நேரில் கண்டு, அவரது ஆதரவைப் பெறுவதற்கு விரும்பவில்லை. ஏனெனில், ஏற்கனவே இந்தசமஸ்தானச் சேவகத்தை உதறிவிட்டு வெளியேறியவர். மேலும், கவர்ன்மெண்டாரால் பாரதிக்கு ஏற்பட்டிருந்த தடைகளெல்லாம் இப்பொழுது நீங்கப்பட்டிருந்த போதிலும், பாரதியாருக்கு உதவி செய்தால் தனக்கு ஏதேனும் பாதகமேற்படுமோவென்று ஜமீந்தார் பயங்கொண்டிருந்தார். ஆதலின், பாரதியார் தனக்கு இச்சமயம் சரியான ஆதரவும் மரியாதையும கிடைக்காது என்று கருதி, வறுமையின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டிருந்தாரே யொழிய, ஜமீந்தாரின் உதவியை நாட வில்லை. ஆனால், இவர் படும் கஷ்டத்தைச் சகிக்காமல் இவரது நண்பர்களும் பந்துக்களும் இவரை மிகவும் நிர்ப்பந்திக்கவே, ந்தாருக்கு இவ்விரண்டு சீட்டுக் கவிகளையும் எழுதியனுப்பினார்.12 ரூபாய்க்குச் சேவகஞ் செய்துவந்த பழைய “சுப்பையா” வாகத் தன்னைக் கருதாமல் கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்கவேண்டு மென்பதை இந்தப் பாக்கள் நன்கு விளக்குகின்றன.
-- பாரதி பிரசுராலயத்தினர் குறிப்பு.)



Sunday, November 30, 2014

Thanksgiving - சமூகப் பணி

அடையாள சமூகப் பணி

                     "புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
                      வாய்மையான் காணப் படும்."

                                    'Knowledge is Power'

                                  சென்ற வியாழன் (27/11) ஒரு வித்யாசமான ஆனால் எதிர்பார்த்த அனுபவம்.. சமூக சேவை என்ற பேரில் ஒவ்வொரு IT Companyயும் வருசத்துக்கு ஒரு நாள் (!), 7-8 மணி நேரம் ஏதாவது பண்ண try பண்ணும்.. இன்னிக்கு நம்ப கம்பெனி., அதற்குத் தேர்ந்தெடுக்கும் நாள் US-Thanks Giving Day. அப்போ ஒருநாள் சமூகப் பணி.. நல்ல concept.. எங்களுக்கு 'செம்மஞ்சேரி' கிராமம் ஒதுக்கப்பட்டது.. சுற்றிலும் வளைத்து, வளைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்ட அடுக்ககங்களுக்கு (Multi store Appartments) நடுவே 4-5 வீதியோடு ஒரு ஊர்.. மக்கள் பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் கொஞ்சம் பின்தங்கித் தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட சுனாமி குடியிருப்பு போல இருந்தாலும், அரசு வீட்டு வசதி வாரிய வீடுகள் அசுர வளர்ச்சியோடு இருந்தது..  ஆனால் தரமான சாலைகள், இப்போது பெய்த மழைக்குக் கூட நன்றாக இருந்தது.. நகரத்தின் வாசனை கொஞ்சமும் இல்லாத இடம்.. 10-15 வருஷம் பின்னால் தான் இருந்தது.. ஆனாலும், 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்றபடி, டாஸ்மாக்க்கு இந்த இடமும் விதிவிலக்கில்லை போல.. நல்ல 'குடிமகன்களை' தெருவில், காலை வேலையிலிருந்தே பார்க்க முடிந்தது.. குகன் வம்சத்தார் போலத் தான் இருந்தார்கள் நிறைய இடங்களில்.. சரி, விஷயத்துக்கு வரேன்..

                                   நம்ப IT ஆட்கள் களப்பணிக்கு வந்தா எப்படி இருக்கும்ன்னு பாக்கறதும், சிரிப்பொலி, ஆத்தியா சேனல் பாக்கறதும் ஒன்னு.. நடுவுல கொஞ்சம் டென்ஷன் ஆகலாம்.. எதுவுமே செய்யாம எல்லாம் செஞ்ச மாதிரி கட்டறது, குரூப் போட்டோ, செல்பி போட்டோ, அந்த நிமிஷமே முகநூல் அப்டேட்.. ஆத்தாடி.. முடியலைடா சாமி..!!! ஆனாலும் நல்ல உள்ளம் கொண்ட கொஞ்ச பேரு, ரொம்ப interestக வேல செஞ்சத பாக்க முடிஞ்சது.. 'விடியக்காலை'  (ITய பொருத்தமட்டில்) 9 மணிக்கு, எங்க ஊரு பக்கம் மில் வேலைக்கு ஆள் கூப்பிட்டு போற மாதிரி ஒரு vanல பயணம்.. நான் எஸ்கேப்..1 மணி நேரம் தாமதமாகத்தான் போக முடிந்தது.. அதுக்குள்ளே எதிர் பார்த்த படி ஒன்னும் நடக்கல.. 10-10:30 ஒரு அரை மைல் தூரம் நடை, அது தான் 'walkathan'-வாக்கதான்..:).. இதுனால வந்த களைப்பு (!!) தீர எல்லாருக்கும் Snacks-Soft Drinks.. (அடப்பாவிங்களா, அவனவன் காடு-மேடு எல்லாம் சுத்தி வேல பார்த்தாலுமே 4 மணி நேரம் கழிச்சு தான் கூழ் குடிப்பான்.. ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல)..

                                     சரி - ஊற சுத்தப்படுத்தலாம்னா, அங்க தான் பெரிய பல்பு.. (இது போலவே 4 வருஷம் மின்ன மெரினா கடல்கரைக்குச் சுத்தம் செய்யப்போன போது, corporation பணியாளர்கள் விடியற்காலையிலேயே சுத்தம் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்). இது சென்னை இல்லாததால், எங்குமே குப்பை அவ்வளவாக இல்லை.. வழக்கம் போல பெயிண்ட்டு டப்பா எடுத்துக்கிட்டு ஸ்கூல் பக்கம் போகலாம்ன்னு ஒரு கூட்டம் போக, நானும், நண்பர்கள் சரவணன், இராமும் சேர்ந்து கொண்டோம்..பசங்களப் பார்த்த மாதிரியும் இருக்கும்ன்னு ஒரு எண்ணம்..Teammate விஜய் பொறுப்பில் எங்க team ஒரு 10 பேர்கள் பள்ளி நோக்கிக் கிளம்பினோம்.. மற்றெல்லாரும் சேர்த்து ஒரு 30 பேர்.. (Photos: Venkat & Ram)



                                                அது ஒரு அரசுப் பள்ளி- தற்போது 11 வகுப்பு வரை செயல்படும் இடம்.. மொத்தமாக 5-6 வகுப்புகள் தான் அங்கு இருந்தது.. மாணவர்களுக்கு ஒரே குஷி.. அங்க ஏதோ திருவிழா போல எல்லாரும் ஓடிவந்தார்கள்..  என்ன செய்யப் போறோம்னு தெரியாமலேயே ஒரு 1 மணி நேரம் போனது.. அப்புறம் நம்ப கிரிக்கெட் மேட்ச் மாதிரி எல்லாரும் வட்டமா நின்னு ஒரு 10 நிமிஷம் Planning.. ஏன்னா ITல Planning தான் முக்கியம், அப்பரம் Implementation, Delivery, Support இத்யாதிகள்... காலக்ரமத்தில் (1-1:30 மணி நேரம் கழித்து)  பெயிண்ட் அடிக்க ஒரு கூட்டம் புறப்பட்டது..அவர்களுக்கு உதவி செய்யா 10-15 பள்ளி மாணவர்கள்..

                                              நடுவே நான் ஹெட் மாஸ்டர பார்க்க, அவர் ரூம்ல இருந்த ஒரு சிறு அலமாரி தான் 'லைப்ரரி'ன்னு காண்பித்தார்.. நாங்க என்ன பண்றதுன்னு தெரியாம நிக்க, அவரே +1 Classல ஏதாவது பேசச் சொன்னார்.. சரவணனும், நானும் ஒரு 30 நிமிஷம் பேசினோம்.. 'தொட்டனைத் தூறும்' என்ற குறளோடு ஆரம்பித்தேன்.. மாணவர்களும் கூடச்சேர்ந்து  குறளைச் சொன்னார்கள்.. அவர்கள் நல்ல வழியில் தான் செல்கிறார்கள்.. ராம் தன் பங்கிற்கு 1-2 வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னான்.. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்பது அந்த வகுப்பு ஆசிரியருக்குச் சாலப் பொருந்தும்.. மாணவர்கள் கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாத வகையில் தான் இருந்தனர், இராம் அடிக்கடி பயந்தபடி நெளிந்ததைப் பார்க்க முடிந்தது.. மாணவிகள் வழக்கம் போல ஆர்வமாகக் கேட்டதோடு இல்லாமல், தங்களின் சந்தேகங்களையும் கேட்டனர்.. கொஞ்சம் மன நிறைவாக இருந்தது எங்களின் முதல் மீட்டிங்.. எங்களோடு வந்த என்னோட teammates 4-5 பேர் பக்கத்து வகுப்புகளில் 'Good & Bad Habits' (Google துணையோடு தயாரித்ததை வைத்துக் கொண்டு) என்ற பொருளில் 2-5 வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

                                             அலுவல வேலை காரணமாக இராம் என்னை கொஞ்சம் அவசப்படுத்த ஆபீஸ் புறப்பட உத்தேசித்தேன்.. (மேனேஜர் அவனை குச்சியை வைத்து விரட்டாத குறை தான்;ஆனால் அதுவும் நடந்தது செல்லமாக :) ).. Lunch தான் கொஞ்சம் என் மனதைப் பிழிந்தது.. IT-Corporate-MNC இத்யாதி போர்வைகளுடன் சமூகப் பணி செய்யப் போன எங்களுக்கு உயர் தர உணவகத்திலிருந்து VEG உணவு, Mineral water bottle.. அந்த மாணவர்கள் எல்லாம் வரிசையில் நின்று அரசு சத்துணவு வாங்கி சாப்பிட்டனர்.. என் அலுவலக நண்பர்கள் குழாயில் கை அலம்பியவர்கள் வெகு சிலரே, மற்றெல்லாரும் Mineral Water Bottel தான்.. இது போன்ற சில கனத்த மனதோடு அலுவலகம் திரும்பினேன் இராமோடு, என் Onsite roommate சரவணனிடம் ஒரு bye சொல்லிவிட்டு!...நாங்கள் மதியம் ஒரு 2 மணிக்குக் கிளம்பும் வரை பெயிண்ட் ஈரம் பாதிச் சுவருக்கு மேலத் தாண்டவில்லை.. அதற்குள் கிரிக்கெட், கோ-கோ என்று ஆரம்பித்துவிட்டனர்.. எதுலயுமே சேராத எங்கள் டீம் மட்டும் என்ன செயாலம்ன்னு யோசித்துக் கொண்டிருந்தது..

சில விஷயம் கவனிக்க வேண்டி இருந்தது..

* சரியான பணியை சரியான இடத்துல செய்யனும்.. குப்பையே இல்லாத இடத்தில் எங்க குப்பை அள்றது..:)
* சரியான திட்டமிடனும்.. நாங்களும் போறோம் ஒரு நாள்ன்னு போகத்தேவை இல்லை.. இதுல எல்லாம் நெறைய interest இருக்கறவங்களை மட்டும் கூப்பிட்டு போனால் போதும்..
* எல்லா வேலையும் ஒரே நாள்ல செய்ய முடியாது.. அரை மணிநேரம் செஞ்சாலும் உருப்படியா செஞ்சா போதும்..
* மேலும், போற இடத்துக்கு ஏற்ற மாதிரி மாற மனசு இருக்கணும்..நம்ப செலவையும், ஆடம்பரத்தையும் ஒரு நாளாவது குறைச்சுண்டு சமூக சேவையில் அக்கறை செலுத்தலாம்.
* ரொம்ப முக்கியமா - Group, Selfie Photo எடுத்து உடனே FBல upload செஞ்சா அப்பறம் போற வேலைய எங்க பாக்கறது..

                           நான் போன இடத்துல மேல சொன்ன எல்லாம் இருந்தது.. இதுவும் ப்ராஜெக்ட் execute பண்ற மாதிரி தான் .. கிட்டத்தட்ட அந்த ஒரு நாளோடு இதற்கும் மூடு விழா கொண்டாடப்பட்டு விடும்..இவை எல்லாம் என்னோட கண்ணோட்டம் (prespective). இதில் வந்த பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும். இவ்வளவு வேலைப் பளுவிலும் ஒரு நாள் சமூகப் பணி பற்றி யோசிப்பதே சிலருக்குக் கடினம். இந்த முயற்சி வரவேற்கத்தக்கது

                                அந்த வகுப்பு மாணவர்களின் கோரிக்கை -  ஒரு வாலி பால், பெஞ்ச், கொஞ்சம் Spoken English Class.. நாங்களும் உரியவர்களிடம் இதச் சொல்லி வந்தோம்..எங்களால் முடிந்ததை செய்வதாக மனதளவில் உறுதி தந்தோம். பார்க்கலாம், பயணம் தொடருமா என்று!..மேலும் சில டீம் மது பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம் என்றெல்லாம் சென்றார்கள். அங்கு என்ன நடந்ததுன்னு தெரியல. மொத்தத்தில் இது ஒவ்வொரு வருடமும் நல்ல initiative.. பட் அந்த நாளோடு அது முடிந்துவிடுவது போலத் தான் இருக்கிறது.. இதற்க்கு எந்த IT கம்பன்யும் விதிவிலக்கல்ல!

                         மேற்ச்சொன்ன குறளும், பொன்மொழியும் வகுப்பறையில் எழுதப்பட்டிருந்தது.. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல!


Thursday, May 1, 2014

திரளி புணருத்தாரண கைங்கர்யம் - Thirali Kovil punaruththArana kainkaryam -II



'தொண்டீர் எல்லீரும் வாரீர்' என அழைக்கும் 'உடையவர் 1000' வாசல்!











Thursday, March 20, 2014

திரளி புணருத்தாரண கைங்கர்யம் - Thirali Kovil punaruththArana kainkaryam

திரளி ஸ்ரீ பூமி நீளா ஸமேத திருவேங்கடமுடையான்-ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ஸந்நிதி புணருத்தாரண கைங்கர்யம்!

श्रीमते श्री अलर्मेल्मङ्गा नायिका समेत श्री श्रीनिवास परब्रह्मणे नमः ॥ 


அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உரைமார்பா *

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே *

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே *

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே *(திருவாய்மொழி -6-10-10 )



ஸ்ரீய: பதியாய், அவாப்த ஸமஸ்த லக்ஷ்மிகரமாய், உயர்வற உயர்நலம் உடையவனாய், சௌந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹயுக்தனாய், ஸ்ரீ லக்ஷ்மி பூமி நீளா நாயகனாய், வைகுண்ட நிலையனாய் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயாணன், ஸம்ஸாரிகளாகிற நம்போன்ற ஜீவாத்மாக்களின் உஜ்ஜீவிக்கைக்காக, ' எய்துமவர்க்கு இந்நிலத்தில் அச்சாவதாரம் எளிது' என்கிறாப்போலே, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களின் அமுதத்திருவாய் மலர்ந்த ஈரத்தமிழின் அருளிச்செயல் மங்களாஸாசனத்தாலே சந்தோஷித்து
ஸ்ரீ வைஷ்ணவத் திருப்பதிகள்தோறும் எழுந்தருளியதோடு மட்டுமன்றி,'வணங்கும் துறைகள் பலபலவாகி' என்றபடி பகவத் பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ஸ்தலங்களில் ஒன்றானதும், 'எம்பெருமானையே தஞ்சமாகவும்', 'உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய்  கொண்ட குணாநுபவ கைங்கர்யங்களே பொழுதுபோக்காக'வும் கொண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளாக எழுந்தருளியிருந்ததும், 'ஞானம் அனுட்டானம் நன்றாகவே உடையானான' ஆச்சார்ய மஹோததர்களால் மங்களாஸாசனம் செய்யப்பட்டதும், ஆழ்வார்கள் உகந்த நான்கு திவ்ய தேசங்களுக்கு மத்தியில் அமையப்பெற்றதுமான திரளி ஸ்ரீவைஷ்ணவ க்ராமத்தில், எழுந்தருளி ஸர்வ மங்களங்களையும் அனுக்ரஹிக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி-விமான மண்டபங்கள், இராஜகோபுரம், 'சுந்தரத்தோளுடையான்'  ஸ்ரீ இராமர் ஸந்நிதி, கருடாழ்வார் ஸந்நிதி, 'ப்ரபன்ன ஜன கூடஸ்தரான' ஸ்வாமி நம்மாழ்வார், 'தரிசன ஸ்தாபகரான' எம்பெருமானார், 'மன்னுபுகழ் சேர்' மணவாள மாமுனிகள் ஸந்நிதிகளுக்குப் புணருத்தாரண கைங்கர்யங்கள் எம்பெருமான் திருவுள்ளம் பற்றியபடி மிகவும் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அடியேன் இரு தினங்களுக்கு முன்பு தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.

*********************************************************************************
2008






*******************************************************************************
2014





பெருமாள் ஸந்நிதி  (பாலாலையமான பிறகு)


ஏக தள விமானம்






உடையவர்-1000 (2017-சித்திரை-திருவாதிரை) வருஷத்திற்க்காக புதிதாக நிர்மாணிக்கப்படும் 'உடையவர் வாசல்'


Tuesday, January 14, 2014

பெண்பிள்ளை வார்த்தைகள்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
     பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
     மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
     காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
     பேதைமை யற்றிடும் காணீர்!

                     மேல சொன்ன பாரதி வரிகள் இன்னிக்கு நிலைமைய தெளிவா கட்டறது. பெண்ணுக்கு ஞானம் பிறக்கும் போதே இருந்து அதை இந்த சமூகம் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறதுன்னு தெளிவா, 'பெண்ணுக்கும்' என்று எல்லாவற்றோடு சேர்த்துச் சொல்லாம, ஒரு உயர்ந்த நிலையில் பெண்ணை வைத்து தான் சொல்லறான்.. கண்டிப்பா இன்றைய சமூகம் பெண்ணை பேணி வளர்க்கவில்லை என்றாலும் பெண்ணியம் என்று மட்டுமே கூறி ஆண்களை விரோதிகளைப் போல் காணாமல் இருந்தாலே மகிழ்ச்சி.

                     என்னளவில் சினமா, நாடகம் தான் இதற்க்கு பொறுப்பு.. மக்களிடம் பெண்ணைப் பற்றி நல்ல விஷயமாகவே கொண்டு போகலை.. ஆனாலும் பெண்கள் மகளிர் (!) தினம் (women's day) என்று ஒன்று வைத்து ஆண்கள் எல்லாரும் பெண்களைத் தாழ்த்துவது போல சில பெண்ணியவாதிகள் முழங்குகிறார்கள்.அவர்கள் யாருக்கும் எந்தவித வரலாறும் தெரிவதில்லை, தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. 2 வாரங்களுக்கு முன்னாடியே HR-ரிடமிருந்து மெயில்  மேல் மெயில். ஆண்கள் இல்லாத சிறு, சிறு கூட்டங்கள், வழக்கம் போல ஒரு பாட்டு-டான்ஸ் கச்சேரிகள், ட்ரீட்-டீம் லஞ்ச்,மற்றபடி பொழுதைக் கழிக்க என்னென்ன உண்டோ இத்யாதிகள்; காலை முதல் வாழ்த்து மெயில்கள். இதுலயே எனக்குத் தெரிந்து ஒரு 2-3 நாட்கள் ஓடிவிடும். நம் கலாச்சாரத்திற்கு முரண்பட்ட விழாக்களைக் கொண்டாடத்துவங்கிவிட்டோம். அதில் இந்தபெண்கள் மகளிர் (!) தினம் (women's day) ஒன்னு. ஒரு நாளில் இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் மட்டுமே எதுவும் முன்னேறப் போவதில்லை. நம்முடைய வரலாறைப் படித்து சிலவற்றை மாற்றினாலே போதும்.

                       சங்ககாலமோ, வேதகாலமோ பெண்ணை சம தளத்தில் தான் வைத்தனர். பாரதி சொன்ன சில மூடர்கள் தான் அதை திரித்தனர்.  பெரும் புலவர்கள், அரசவையில் ஆலோசனை சொல்பவர்கள் என்று உயர்ந்த நிலையில் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.. சங்கப் புலவர்களில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வ்ளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். சங்கஇலக்கியம், சமய இலக்கியம் என்று துறைகள்தோறும் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.. ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஒவ்வையார், நச்சினார்கினியார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார் என்று பலரும்.. அண்மையில் படித்த 'திருவரங்கன் உலா'வில் மேற்கோள் காட்டப்பட்ட 'மதுரா விஜயம்' என்ற வரலாற்று நூலும் கங்கா தேவி என்ற பெண்ணால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இப்படிப் பல சொல்லலாம்.

                         சில தினங்களுக்கு முன் படித்தது - வைணவம் சம்பந்தப்பட்டது. சாதாரண குடும்பத்தில் இருக்கும் பெண்களும் எவ்வாறு படித்து, தேர்ந்த அறிவோடு இருந்தார்கள் என்று. அந்த நாளும் வந்திதாடோ என்று சிலநேரம் நினைக்கத் தோன்றுகிறது!


                       1. நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்று திருப்புளிங்குடி. நம்மாழ்வார் 12 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்த கோவில். காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார்.இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தேவி (மலர்மகள்), பூமிப்பிராட்டி(நிலமகள்) , நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகப் பெரியவைகள். அத்தோடு நீண்ட கர்ப்பக்க்ரகம். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து (மற்ற இடங்களில் நாபியிலிருந்து தான் பிரமன் பிறந்ததாக இருக்கும்) செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு துவாரம்/சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.


                   இந்த திவ்ய தேசத்தைத் தரிசிக்க ஸ்ரீமத் இராமனுசர் ஒரு முறை யாத்திரை சென்றிருந்தார் அவரின் கோஷ்டியார்களுடன். நவ திருப்பதிகளில் உள்ள மற்ற திவ்ய தேசங்கள் தரிசித்துவிட்டு திருப்புளிங்குடிக்கு எவ்வளவு தூரம் என்று தெரியாமல் அனைவரும் திகைத்து இருந்தனர். நடந்து செல்லும் வழியில் கண்ட ஒரு சிறுமியிடம் இராமானுஜர் வழி கேட்டார். அதற்க்கு அந்தச் சிறுமி கீழே உள்ள திருவாய்மொழி பாடலைக் கூறி, நம்மாழ்வார் 'கூவுதல் வருதல்' என்று சொல்வதால் திருப்புளிங்குடி ஆழ்வார்திருநகரியிலிருந்து கூப்பிடும் தூரம் என்ற விளக்கமும் தந்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் சிறு பெண்கள் கூட இந்த ஊரில் இவ்வளவு முதிர்ந்த ஞானத்தோடு இருப்பது கண்டு வியந்தனர். (இந்த இரண்டு ஊருக்கும் உண்டான தூரம் ~3 மைல்).

கொடுவினைப் படைகள் வல்லையாய்
         அமரர்க்கு இடர்கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே
          கலிவயல் திருப்புளிங்குடியாய்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை
          நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
          கூவுதல் வருதல் செய்யாயே! (திருவாய்மொழி 9.2.10)

(கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே! தேவர்களுக்கு இடர் கெடும்படியாக அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே! எனக்குப் பரம போக்யமான அம்ருதமே! செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே! வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும் அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும் வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும் என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்)


                 2.  ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் செல்கிறார். அப்பொழுது எதிரே, ஒரு சாதாரண குடும்ப பெண்  ஊரை காலி செய்துவிட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள்.
                         ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள் -'தான் எளியவள்', என்று எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறாள் . அந்த விளக்கங்களே படிக்கச் சுவையானவை.அதை “திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்” என்று நமக்கு தொகுத்து கொடுத்துள்ளர்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி தான். ஆனால் அதில் உள்ள கதைகள், அதன் அர்த்தங்களை நாம் புரிந்து கொண்டால் , ஒவ்வொரு வரியும் , புராணத்தில் மற்றும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு கதாப்பாத்திரத்தை பற்றியதாக இருக்கும் . ஒவ்வொன்றின் பின்னால் ஒரு கதை இருந்திடும் என்பதை அறியலாம். இதோ அந்த பொக்கிஷம்


1.அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
2.அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
3.தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே
4.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5.பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6.பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7.தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே
8.தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9.மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10.முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
12.எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே
14.நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
15.ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
16.யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே
18.அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
20.அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
21.தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
22.தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே
23.ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
24.ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
25.அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
29.கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
31.குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே
34.இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
35.இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
37.அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே
38.அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே
39.அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
40.அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
41.மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே
42.மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே
45.வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
46.வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
47.அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே
48.அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
49.இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
50.இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே
51.இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
52.இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே
54.கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
55.இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
56.இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
57.இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே
58.நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே
63.அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
67.அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
68.கள்வன் இவன் என்றேனோ லோகுருவைப் போலே
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே
70.சுற்றி கிடந்தேனோ திருமாலையாண்டானை போலே
71.சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
73.உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே
74.என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே
75.யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே
76.நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே
79.வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே