Thursday, April 9, 2015

நல்லதோர் வீணை -கார்ப்பரேட் கையில்

                எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
               முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
                சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
                வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ - இதை
                வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? (பாரதி)

                    கருப்புச்சட்டை போட்டவரின் பேட்டி பரபரப்பை எட்டும் இந்த வேளையில் இதை முடிக்கனும்க்ற எண்ணம் இல்ல.. நீண்ட நாளாக வெளியிட முடியாமல் போய், சேரி இன்னிக்காவது முடிக்கலாம்னு ஒரு வேகத்தில் எழுதியது. இது எந்த மத-சமயத்திற்கு எதிரானது இல்ல.. இன்றைய இளைஞர் வட்டம், IT துறை எப்படி இருக்குன்னு என்னோட பார்வையில்.                
                     7-8 வயசு இருக்கும். திருமங்கலத்தில் ஒரு கிறிஸ்டியன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.. நன்றாக ஞாபகம் இருக்கு, வியாழன் மாலை 2-3 Prayer Time. Father's room முன்ன உக்கார்ந்து பக்திப் பாடல்கள் பாடனும் - ஆம், கிருஸ்துவ மதம் பற்றி. ஒரு கேசட் playerல பாட்டு ஓடும்.அப்போது ஒரு விவரமும்தெரியாது.. என்ன இருக்கோ அத பாடுவோம். அப்போது அது என்னைப் பொறுத்த வரை ஒரு பொதுக் கடவுள். பல சமயங்களில் பைபிள் படிக்கச்சொல்லுவார்கள்.. ஒவ்வொரு ஆண்டு விழாவின் போதும் கிறிஸ்து மதம் சம்பந்தப்பட்ட படத்தோடு ஏதாவது ஒரு Calender.அப்பறம் ஒரு ஹிந்து நாடார் Schoolல சேர்ந்தேன். அங்கு எந்த சமயம் பற்றிய வகுப்புகளும்இல்லை. இது ஒரு சின்ன உதாரணம் - ஹிந்து மதம் எதையும் திணிப்பதில்லை என்பதற்கு. மத்த மதத்தில் எல்லாரையும் இப்படி என்று சொல்லிவிட முடியாது. சரி - இதுக்கும் சொல்லப்போற விஷயத்திற்கும் சம்பந்தம் கொஞ்சம் உண்டு..
                                    இதுவும் IT கம்பெனி பத்தியது தான். ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதம் எல்லாருக்கும் வேலைகொஞ்சம் கம்மியா இருக்கும். சில year end activities இருக்கலாம். மத்த படி US Client  80% வேலை கம்மிதான், 'Thanks giving’ கடந்த பிறகு, அந்த நேரத்துல நாம சும்மா இருக்க முடியுமா.. ஏதாவது செஞ்ச மாதிரியேகாட்டனும். சும்மா ஒரு training எடுக்கணும் இல்ல போகனும்..நமக்கு சம்பந்தமே இல்லாட்டினாலும்,ஒரு வருசமா என்ன பண்ணினோம்னு ஒரு 'Case Study Report’ (அத client தான் சொல்லணும் :-)), ஏதாவது சாதித்திருந்தா அதுக்கு ஒரு Presentation PPT. உண்மையாகவே இத Client பார்த்தா அவன் clean bold தான்.. பல நேரங்களில் client பார்த்தா 'சொந்தக் காசுல...' இத்யாதின்னு தான் தோனும்.. சரி. அது அவரவர் வேலை.. இப்படி வெட்டியா இருக்கும் ஒவ்வொரு IT Companyலேயும் December 2-3 வாரத்துல HR/Admin team கிட்டயிருந்து ஒரு மெயில்வரும். ‘It is year end., lets celebrate last days of this year, we have many fun activities. Stay on this page’ன்னு ஒரு மெயில். அப்பறம் நம்ப பசங்க கொஞ்ச பேருக்கு என்ன வரும்ன்னு ஒரு வித காத்திருப்பு.. அடுத்த நாளே இன்னொரு மெயில் ‘Many Fun Celebrations. Watch this page’ - அப்படின்னு ஒரு மெயில். இப்படியே 2-3 நாள் புலி வருது கதை தான். நம்ப அத பத்தி எல்லாம் கவலைபடாம வேலைய பாக்க வேண்டியது தான். எனக்கு எப்பவுமே இந்த டிசம்பர் வந்தாலே year endக்குள்ள முடிக்க வேண்டிய வேலை நெறைய இருக்கும். So இத பத்தி எல்லாம் பாக்க நேரம் நெறைய இருக்காது. 2 நாள் கழிச்சு ‘Lets have Christmas Celebrations for this year end.. Decorate your cube/office for this. We will come and validate. Exciting Prices for individual/Team.’ அது ஏன் பொங்கல், தீபாவளிக்கு இப்படி மெயில் வரதில்லைன்னு எனக்கும் ரொம்ப நாளாக சந்தேகம் இருக்கு. விடை தான் தெரியல. சற்றே நம்மோட பண்டிகைகளையும், கலாச்சாரத்தையும் மறந்தும், மறைக்கவும் முயல்கிறோம், தெரிந்தே.Pizza & Burger மட்டும் உணவல்ல.

                                 இந்த முறை Company முழுவதும் அது போல நடக்க வில்லை. அந்தந்த Team மட்டும் தனியாக இதைச் செயல்'படுத்தின'.. ஏன்னா client பொங்கல் கொண்டாடி, சொந்த பந்தங்களோடு சேர்ந்து தீபாவளி கொண்டாடி, பட்டாசு கொளுத்தி, தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அவர்களுக்கு நாம கைம்மாறு செய்யனுமே.. அதுனால நாமும் Christmas & NewYear இத எல்லாம் Celebrate பண்ணனும்.. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் வசனம் ITக்கு என்றைக்கும் பொருந்தும்..நாமளும் அடிமைகளானாலும் மிகவும் திறமைசாலிகள்.. நமக்கு ஸ்வயமா யோசிக்க முடியாது.. பகுத்து பார்க்கத் தெரியாது.. சேரி. இருக்கட்டும். இது அவரவர் விருப்பம்.. ஆனால் ஒரு டீம்ல/கம்பெனில இத நடைமுறைப்படுத்துவது ரொம்ப தவறு.. Chirstmas/New Yearன்னு சொல்லாமல் வெறும் Decorationன்னு சொல்லி ஊக்கம் தரலாம்.. சில இடங்களில் அப்படி நடப்பதாக கேள்வி..Client என்ன பண்ணினாலும் நாமும் பண்ணக் கூடாது..  இதுக்கு மேல என்னால சொல்ல முடியல.. விஷயத்துக்கு வரேன்.. HR/Adminகிட்ட இருந்து மெயில் வராதனால, 30 கொண்ட Team Levelல கொண்டாட முடிவெடுத்து ஒரு மெயில் அனுப்பபட்டது..  பல முறை என்னோடு பேசிப் பார்த்தார்கள் (வேற யாரு நம்ப விஜய் தான்).. நான் Topic/Decoration Theme தருவதாக இல்லை.என்னோட டீம்ல யாரும் அவ்வளவு interest கட்டல. ஒரு முறை discuss பண்ணிட்டு, சரி இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு விட்டுடேன். அது தான் ஒரு அதிக குளிரூட்டப்பட்ட ஒரு conference room போய் சும்மா ஒரு மணி நேரம் கலந்துரையாடல்-Discussion. அங்க நடக்கற Discussion எதுக்கும் முடிவு எட்டிய மாதிரி இதுவரை தெரியவில்லை. மற்றேல்லாரும் களத்தில், அது தான் அவனவர் cubical decorationல இறங்கினர். ஒரு conditionனோடு நானும் இறங்கினேன்.. எந்த மதமும் இல்லாமல் வேற ஏதாவது ஒரு theme.. கடைசி நேரத்துல வேட்புமனு தாக்கல் பண்ற மாதிரி '1947' என்று ஒரு theme கொடுத்தோம்.. கொடுத்தேன்னே சொல்லலாம்..நம்மிடமே ஆயிரம் ஆயிராமா கொட்டிக்கிடக்கும் போது, அடுத்தவர் பண்டிகையும், கலாச்சாரத்தையும் கொண்டாடுவது சரியல்ல.. அதை ஒதுக்குவதும் சரியல்ல., நம்முடைய கலாச்சாரத்தை முன்னிறுத்த வேண்டும்றது என் எண்ணம்! ஒன்னு மட்டும் நிச்சயம். என்னக்கு RSS-காரன்ற முத்திரை குத்தப்படும். (ஏற்கனவே நெற்றியில் திருநாமம் இட்டு போவதால் ஒருவித சந்தேகம் இருக்கு. இதனால அது ஊர்கிதம் ஆகும்)..கண்டிப்பாக பரிசு கிடைக்காது.. ஆனா இதனால் 2-3 பேர் நாட்டப் பத்தி யோசித்தாலே என் வெற்றி நிச்சயம். 

                         1947 - இத இப்படி செயல்படுத்துவதுன்னு தெரியாமல் ஒரு 30 நிமிட யோசனைக்குப் பின், 1947 வரை நடந்த முக்கியமான விஷயங்கள், நிகழ்வுகள், காந்தியின் போராட்டங்கள், நாம் மறந்த, அறியாத பல தேசத்தலைவர்கள் - இவற்றை எல்லாம் விளக்க முடிவெடுத்தேன். டீம்ல யாரும் இதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்ற தீர்க்கமான முடிவோடு கொஞ்சம் பேசிப்பார்த்தேன். கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒருவித தயக்கம், அப்பறம் ஏற்றுக்கொண்டனர். 

                       நம் சுதந்திர போராட்டத்தில் இருந்த முக்கிய போராட்டங்களில் கீழுள்ள 5-6 போராட்டங்களை மையமாக வைத்து இத பிளான் செய்தோம். Vinoth, Vinayagam கொஞ்சம் activeவாக இருந்து 3 வர்ணத்தில் ஒரு Arch போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். Venkat, Suresh, Meenkashi Sundar எல்லாம் நிறையவே உதவி செய்தனர் - முழுமையாகச் செயல்படுத்தினர்.
  • மீரட் புரட்சி, சிப்பாய் கலகம். மங்கள் பாண்டே(1857)
  • ஜாலியன் வாலா பாக் -1919
  • ஸ்வயராஜ் இயக்கம் (1920)
  • ஒத்துழையாமை இயக்கம் (1920-21)
  • உப்புச் சத்யாக்ரகம் (1931)
  • வெள்ளையனே வெளியேறு (1942)

நுழைவாயில்


ஜாலியன் வாலா பாக் -1919 - Recent photo









Dhandi March - Swaraj Movement
மீரட் புரட்சி, சிப்பாய் கலகம். மங்கள் பாண்டே(1857)







வேதாரண்யம் உப்பு சத்யாக்ரஹ்கம்





Quit India Movement


























பாரத மாதா


இத்யாதி Decoration



எங்க Team

தலைவர்
                                  நடுவில் நான் கொஞ்சம் Power Point slides ரெடி செய்தேன். அதில் இந்த போராட்டங்கள் பற்றிய அறிய படங்கள், கொஞ்சம் பாரதி பாடல்கள் எல்லாம் சேர்த்து 10-15 Printout எடுத்தேன். ஒரு office/seatக்கு 2-3 ஒட்டினோம்.இவை எல்லாம் நடுவர்கள் வர 2-3 மணிக்கு மின்ன ஆரம்பித்து முடிக்கப்பட்டது. மத்த எல்லா டீம்மையும் பார்த்தா அசுர வேகத்துல நெறைய செலவு செஞ்சு அழகுபடுத்தினர். ஆனா எல்லாத்துலயும் ஒரு வித Christmas பத்தின விஷயம் இருந்தது. நாடு- தேசம்ன்னு வச்சது எங்க டீம் மட்டும் தான்;இதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெருமையோடு சொல்லலாம்.                              
                                     
                                     எல்லாத்துலயும் விட ஹைலைட் - 2 பாரதமாதா படம், பூவோடு அலங்காரம். அத பார்த்த எல்லாரும் 'இது லக்ஷ்மி படம்' தானேன்னு முதல்ல கேட்க,கற்ப்பூரம் ஏற்றி கொஞ்சம் பூஜை மட்டும் செய்யல. 
                     

                             நடுவர்கள், எங்க Managerகள் தான், 5 மணிக்கு வந்தனர்.. 3வது team எங்களோடது.. யாரும் இத விளக்க தயாராக இல்ல. இப்போதும் நானே களத்தில் இறங்கினேன்.நான் இது மாதிரி பேசியதில்ல, என் முன்னால் வைகோ தான் தெரிந்தார் இதற்க்கு எல்லாம். கிட்டத்தட்ட 10-15 நிமிஷம் இந்த போராட்டங்களை எல்லாம் விளக்கினேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி சதாசிவம், திரு.வி.க, காமராஜ், கக்கன், இராஜாஜி, சுப்பிரமணிய சிவா, பாரதி, காந்தி, கோகலே இவர்கள் எல்லாம் அந்த இடங்களில் இருந்தனர் - Photo வடிவில். பல இளைஞர்களுக்கும் முக்கியமான பலரின் முகங்கள் தெரியவில்லை. அவர்களின் சாதனைகளாவது தெரிந்தால் போதும். But அதுவும் தெரியல. சேரி. இன்றைய நிலைக்கு நாமும் ஒரு காரணம். எந்த விழாவாக இருந்தாலும் நம் தேசம், கடந்து வந்த பாதை பத்தி கொஞ்சம் சொல்லணும். அத நாம பண்றதில்ல. எனக்கு மூச்சு முட்டியது அந்த போராட்டங்கள் பத்தி சொல்லி முடிப்பதற்குள். 3 முக்கிய இரயில் சம்பவம் பத்தி சொன்னேன் - காந்தியின் South Africa அனுபவம், காந்தியின் மதுரை அனுபவம், வீர வாஞ்சிநாதனின் வீரச் செயல். 'STDன்னா வரலாறு தானா'ன்னு கொஞ்ச பேரு கேட்ட மாதிரி இருந்தது அந்த விளக்கத்திற்குப் பிறகு.. நடுவர்கள் 'பிரமாதம்'ன்னு சொல்லிக் கிளம்பினர். (அதன் முழு அர்த்தம் sanskritல் தெரிந்து நான் மட்டும் வியந்தேன். இதுவும்  நம் மொழிய வச்சு அரசியல் செய்ததால் வந்த விளைவு).

                     எல்லாரிடமும் நல்ல வரவேற்பு.. ஆனா நாங்க பெருசா செலவு செஞ்சு Decorate பண்ணல, ஏன்னா அங்க இருந்த பல தலைவர்களும் எளிமையை விரும்பினர். நாங்களும் கொஞ்சம் அத செயல்படுத்தினோம். அப்பறம் எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு கடைசி இடம் தான். காரணம் தெரியல - நாங்க நிறைய செலவு செய்யல, decoration Attractiveவாக இல்ல, எந்த சமயம் பத்தியும் பேசல, முக்கியமா Topic விட்டு விலகியே போனோம், அதாங்க நாங்க (நான்) christmas கொண்டாடவில்ல.. இது மாதிரி இருக்கலாம்ன்னு என்னோட கருத்து.. சரி இருக்கட்டும். இது மாதிரி ஒரு விழாவிற்கு (Decoration) ஏற்பாடு செய்து, decoration board வைத்து, தொடங்கிவைத்த Vijai, Anu Prasad இரண்டு பேரும் கடைசி வரை கொஞ்சம் Tensionனோடு தான் இருந்தனர்.. கடைசியில் இதில் வெற்றியும் பெற்றனர்.. ஆம். அவர்களால் தான் எங்க டீமினாலும் இது போன்ற ஒரு நல்ல விஷயத்த எல்லார் முன்னாடியும் கொண்டு போக முடிந்தது.. Big Salute to those 2! 

                        எங்களால் முடிந்தது ஒரு 4-5 பேருக்கு அன்னிக்கு தேச உணர்வு கொண்டுவந்தது. எனக்கு ஏறத்தாழ RSS முத்திரை ஏறிவிட்டது. முதல் வாரம் பாரதி பிறந்தநாள், அடுத்த வாரம் பாரத மாதாவோடு விழா.. நான் இதற்கு எல்லாம் கவலைப் படவில்லை..அனைவரும் மற்றதை எடுத்துவிட்டனர். நான் மட்டும் இன்னும் பாரதி படத்த இன்னும் ஒட்டிவைத்துள்ளேன்.இவைதான்  எனக்கு என்றும் நிரந்தர Decoration, அடையாளம்., எனக்கு மட்டுமல்ல, நமக்கும், நம் நாட்டிற்கும்!

               தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
                   கண்ணீரால் காத்தோம்!
              பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
                  பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?
             விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
                  மின்மினி கொள்வாரோ ? 
              மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
                    மாண்பினை இழப்பாரோ ?


விடை தெரியாத இந்தக் கேள்விகள் என்னுள் இன்றும் ஓடுகிறது!


நல்லதோர் வீணை செய்தேன், அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?