Friday, May 17, 2013

இராமபிரான் திருஅவதாரம்

***இராமபிரான் திருஅவதாரத்தைப் பின் வரும் பாடலால் கம்பன் கூறுகிறான். நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்க, வானுலகில் வாழும்
தேவர்களும் மகிழ்ச்சியினால் எழுந்து துள்ளி ஆட, கடக ராசியில், புனர்பூச நக்ஷத்ரத்தில் அவதரித்தான் இராமன். இங்கு சித்திரை மாதமும், நவமியும் கூறப்படவில்லை. (பங்குனி என்ற ஒரு கருத்தும் உண்டு).***

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமுc. எழுந்து துள்ளவே. (திரு அவதாரப் படலம்-103).

**மற்றை மூவரும் அடுத்தடுத்த நக்ஷத்திரத்திலேயே அவதரித்ததாக கம்பன் கூறுகிறார்!***

பரதன் - "பூசமும் மீனமும் பொலிய"
இலக்குவன் - "அளைபுகும் அரவினோடும் (ஆயில்யம்)"
சத்ருக்கனன் -- "மடங்கலும் மகமுமே"

(புனர்பூசம்-பூசம்-ஆயில்யம்-மகம் என்பதே வரிசை)

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்து உறப்
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. (திரு அவதாரப் படலம்-106).

தளை அவிழ் தரு உடைச் சயிலகோபனும்
கிளையும் அந்தரம் மிசைக் கெழுமி ஆர்த்து எழ
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவள் பயந்தனள் இளைய வீரனை.(திரு அவதாரப் படலம்-107).

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.(திரு அவதாரப் படலம்-108)

*********************************************************************************


ததஸ்ச த் வாத ஸே மாஸே சைத்ரே நவாமிகே திதௌ
நஷத்த்ரே திதி தை வத்யே ஸ்வோச்ச ஸ்ம்ஸ்தே ஷூ பஞ்சஸூ
க்ரஹேஷீ கர்க்கடே லக் நே வாக்பதா விந்து நா ஸஹ‌
ப்ரோத் யமாந்ந் ஜக ந்நாத ம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வலஷன ஸம்யுதம்
---இது ராமனின் ஜாதக் குறிப்பை மிகத் துல்லியமாகச் சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்
இதுவே கம்பனை
"ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
மாயிரு புவிமகள் மகிழ்வின் ஓங்கிட
வேய்புனர் பூசமும் விண்ணுளோர் புகழ்
தூயகர்க் கடகமும் எழுந்துள்ளவே"
----என ராமனின் ஜாதகமாக தமிழில் எழுத வைத்தது
*********************************************************************************

No comments:

Post a Comment