Thursday, May 16, 2013

ஹிட்லர்

"பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவது ஜனநாயகம் என்றால், அதை விட ஒரு புத்திசாலியின் சர்வாதிகாரம் மேல்!" என்று ஹிட்லர் சொன்னதாக இன்று எங்கோ படித்தேன். அது உண்மையானால், பலவற்றில் இந்தியாவிற்குப் பொருந்தும் கசப்பான உண்மை:(

***********************************************************************
ராமானுஜம்: உலகமே கண்டு வியந்த மனிதர்களில், இவரும் ஒருவர். இன்று அவரின் 125 வது ஜெயந்தி! ராமானுஜம் திருவல்லிக்கேணியில் (அனுமந்தராயன் கோவில் தெரு) சிலகாலம் தங்கிய வீட்டிருக்கு அருகில் நாங்கள் 6 ஆண்டுகள் இருந்தோம். அந்த வீட்டைப் பார்த்து நாங்கள் பல நாட்கள் வியப்பதுண்டு!. 1.5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை இடித்து 'apartment' கட்ட துவங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் பல குடும்பங்கள் இன்று இருக்கும். 'Genius' என்பதற்கு அகராதியின் பொருள் இவர் தான். இன்று இயங்கும் 'ATM' இவரின் theorem தான். வசதிகள் இல்லாத காலத்தில், வாய்ப்புகள் பல வார்த்து, கணிதமே வாழ்க்கையாய் வாழ்ந்தவர். இன்றோ நாம் '5*6' என்பதற்கு விடை காண 'கைபேசி' - 'calculator' தேடுகிறோம் !ராமானுஜம்
***************************************************************************
இன்று படித்ததில் ரசித்தது! நம் அரசியல்வாதிகளின் உத்திகள்-
ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:
"பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே"
"தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்"
"உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்"
"பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்"
******************************************************************************

No comments:

Post a Comment