Monday, May 27, 2013

சடகோபர் அந்தாதி

**மேதினியில் வைகாசி விசாகத்தில் அவதரித்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே**

தோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும்
சான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை
ஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே! (கம்பர் -சடகோபர் அந்தாதி)

அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறுவகை யால்சொன்ன ஓட்டம்எல் லாம் ஒழு வித்தொருங்கே
பெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த
சிறுவகை யார்அவ ரைத்தொழு தோம்எம்மைத் தீண்டுகவே.(கம்பர் -சடகோபர் அந்தாதி)
********************************************************************************

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன்
என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை.

அறுசமயச் செடி அதனை அடியறுத்தான் வாழியே
அறமிகு நல்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசன் இணையடிகள் வாழியே
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி … இனி திருப்போடெழில்
ஞானமுத்திரை வாழி
வாழியரோ தக்கோர் பரவுந் தடஞ்சூழ் பெரும்பூதுர் முக்கோல்
பிடித்த முனி
********************************************************************************

No comments:

Post a Comment