Saturday, May 18, 2013

வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி

இராவணன் திருக்கயிலாய மலையைத் தூக்கியதாகப் படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை அது பற்றிய குறிப்புகளைப் படித்ததில்லை. இன்று சற்றே 'Google' செய்த போது பின்வரும் பாடல்கள் கிடைத்தன. கம்பரும் அந்த நிகழ்ச்சிப் பற்றிச் சொல்லிருக்கிறார் (வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த). திருஞானசம்பந்தரின் திருமுறையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே. (திருஞானசம்பந்தரின் திருமுறை)

இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?
*************************************************************
‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த
திருமேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும்
இடன்நாடி, இழைத்தவாறோ?
“கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனம் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து,
தடவியதோ ஒருவன் வாளி? (இராவணன் வதைப் படலம்)

No comments:

Post a Comment