Monday, May 27, 2013

மதுரைக்காஞ்சி

பொழுது புலரும் விடியலில், மதுரை எவ்வாறு இருந்தது, இதோ 'மதுரைக்காஞ்சி'யில்..

"ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட"

இது போல் 780 பாடல்களில் மதுரையின் மாண்பை விவரிக்கிறது மதுரைக்காஞ்சி! தமிழகத்தில் எந்த நகரத்திற்கும் இப்படி தனியாக ஒரு சங்க நூல் இருந்ததாக தெரியவில்லை! மாமதுரை போற்றுவோம்!


*******************************************************************************************


இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய ‘உணவு வணிகர்’ குறித்த சங்க காலத்து பாடல்:

நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்பு அற்ற ஆடு அமை விசயம்
கவவோடு பிடித்த வகை அமை மோதகம்
தீஞ்சோற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க (மதுரைக் காஞ்சி, பா. வரிகள்: 624 - 627)

சங்க காலத்தில் இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.


************************************************************************************************************
பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்பு, போர்த்திறம், போரைத் தடுத்து அறிவு புகட்டுதல், வள்ளல் தன்மையை பாராட்டுதல், வாழ்கையின் அகம், புறம் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய எட்டுத்தொகை நூல்களை மறந்து விட்டோம். அவை என்னவென்றாவது ஒரு சின்ன 'Refresh' பண்ணலாம்...

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை".

'வாகை சூடவா' படம் தான் தெரியும். வேந்தர்கள் போரில் வென்றால் 'வாகை' மலர் சூடி வருவார்கள் (Ref: புறநானுறு) என்பது இந்த படம் பார்க்கும் போது யார் நினைவிற்கும் வராது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமே!
*********************************************************************************

No comments:

Post a Comment