Thursday, May 16, 2013

இராமன் ஸந்த்யாவந்தனம் செய்தமை பற்றிக் கம்பன்

***இராமன் ஸந்த்யாவந்தனம் செய்தமை பற்றிக் கம்பன்***

இன்று அலுவலகத்திலிருந்து வரும் வழியில், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் ஸந்த்யவந்தனம் உபன்யாசம் (iphone app-la தான்) கேட்டுக்கொண்டு வந்தேன். அதன் முக்கியத்துவம் பற்றி மிகவும் அருமையாக, அவருக்கே உரிய பாணியில் சொன்னார். இராமரும், கிருஷ்ணரும் ஸந்த்யவந்தனம் செய்ததாக வால்மீகி இராமாயணம், மகாபாரதத்திலிருந்து குறிப்புகளோடு விளக்கினார். இல்லம் விரைந்ததும் கம்ப இராமாயணத்தைப் புரட்டினேன். கம்பனும் பல இடங்களில் இது பற்றிக் குறிப்பிடுகிறார்.



சந்தி வந்தனைத் தொழில் முடித்து தன் நெடும்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. (யுத்த காண்டம்).

இது காட்டில் சீதையைத் தொலைத்து வாடும் போது ஸந்த்யவந்தனம் செய்ததைக் கூறுகிறது. சூர்ப்பணகை இராமனைக் காணும் இடத்திலும் (**சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்**) ஸந்த்யாவந்தனம் பற்றிக் கூறுகிறார். சுமந்திரன் இராமனைக் கங்கைக் கரையில் விட்டுச் சென்ற போது ஸந்த்யாவந்தனம் செய்ததாக உபன்யாசங்களில் கேட்டதுண்டு. அது பற்றிக் கம்பராமாயணத்தில் நான் தேடிய போது கிடைக்கவில்லை.
இராமன் தான் எந்த நிலையில் இருந்தாலும் ஸந்த்யாவந்தனத்தை நிறுத்தியதில்லை என்பதையும், தனக்கு விதிக்கப்பட்ட க்ரியையை மீறக்கூடாது என்பதயுமே இது காட்டுகிறது. இராமனின் பாதையில் சிறிதாவது செல்ல நாளையிலிருந்து முயல்கிறேன்!

No comments:

Post a Comment