Monday, May 27, 2013

தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே



வியப்போடு இதைப் படித்தேன்., இராமன் தன் திருமணத்திற்குத் தயாராகும் போது, திருமஞ்சனம் கண்டு, நெற்றியில் திலகம்/திருமண் இட்டு வந்தான் என்பதைக் கம்பன், 'திருநாமம்' என்ற சொல்லாலேயே அழைக்கிறார்., இன்று 'திரு-நாமம்' என்பது நகைப்புக்குரிய சொல்லாகவே வழங்கப்படுகிறது.. பாவம், அவர்களுக்கு எங்கு கம்பனையும், தமிழையும் பற்றித் தெரியப்போகிறது..

என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. (கடிமணப் படலம்)

No comments:

Post a Comment