Monday, May 13, 2013

ஸ்ரீரங்கம் ப்ரனவாகார விமானம்

****கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கம்! ஸ்ரீரங்கம் ப்ரனவாகார விமானம்****

வீடணனுக்கு இராமன் தங்கள் குலத்தார் தொழுத பிரணவாகார விமானமும், அரங்கனையும் கொடுத்தருளினார் என இராமாயணக் கதைகள் கூறுகின்றன. இதுவே இன்றைய ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒன்பது கலசங்களுடன் கூடிய விமானம். இது பற்றி கம்பராமாயணத்தை ஆராய்ந்த போது கீழுள்ள பாடல் மட்டுமே கிடைத்தது. 



என்று உரைத்து, அமரர் ஈந்த
எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும்,
வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக்
கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்
நாகணைத் துயிலில் தீர்ந்தான். (விடை கொடுத்த படலம்)

பாடல் விளக்கம்:
பாம்பணைத் துயிலை நீக்கி அவதரித்த இராமன், வீடணனுக்கு நன்மை பொருந்த;தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு, களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் கொடுத்தான் என்றே கம்பர் சொல்கிறார்.

No comments:

Post a Comment