Sunday, May 19, 2013

நடந்தாய் வாழி காவிரி

நடந்தாய் வாழி காவிரி


                              காவிரி கண்காணிப்புக் குழு 'கன்னித் தீவு' கதை போல் தொடர்கிறது. தமிழகம் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறது. ஏதோ தோன்றியது , காவிரித்தாய் பற்றிப் படிக்க வேண்டுமென்று. சிலப்பதிகாரப் பக்கங்களைப் புரட்டினேன். இளங்கோவின் வர்ணனை இது நதியா, இல்லை கடலா அல்லது கண்மாயா என்று தோன்றுமளவிற்கு காவிரி ப்ரவாகம் எடுத்து ஓடியிருக்கிறது. எங்கள் ஊர்களில் எல்லாம் கண்மாய்ப் பாசனம் தான். கரைகளில் முட்டி மோதும் அலையும், காலாங்கரை/வாய்க்காலில் ஓடும் நீரின் வேகத்தையும் கண்டிருக்கிறேன்.நான் அவ்வளவாக இந்த சுகங்களை அனுபவித்ததில்லை. வானம் பார்த்த எங்கள் ஊரில் தண்ணீர் வரும்போது பார்த்திருக்கிறேன். வைகை ஆற்றில் சில முறை பார்த்திருக்கிறேன். நான் இன்றுள்ள வறண்ட காவிரியைத் தான் பார்த்திருக்கிறேன். 

                            இளங்கோவின் வர்ணனையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. காவிரியின் வேகமும், அழகும் அந்த அளவிற்கு இருந்திருக்கிறது.
புதிய நீர் வந்தது கண்டு உழவரும், மக்களும் ஆரவாரம் செய்யும் ஓசையும், மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும் கேட்டதாகக் கூறுகிறார்.

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப 
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி. (புகார்க் காண்டம்-கானல் வரி)

                               'நடந்தாய் வழி காவேரி' என்பதால் தானோ , இன்று நடந்து வருகிறாள் போல கர்நாடகத்திலிருந்து:(

No comments:

Post a Comment