Monday, May 27, 2013

திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம்



சிவகாமியின் சபதம் என்றவுடன் நினைவுக்கு வருவது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் அகத்துறை தழுவி அமைந்த பதிகம் --

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!!

***************************************************************************************


வான் கலந்த மாணிக்க வாசக -நின்
வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தேன் சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே!!

No comments:

Post a Comment