Friday, June 28, 2013

வாங்கும் சக்தி

நேற்று ஒரு வித்யாசமாக உரையாடல் ஒரு நண்பரிடம். எங்கயோ ஆரம்பிச்ச பேச்சு, அங்க-இங்க எல்லாம் சுத்தி கடைசில வழக்கம் போல நம்ப நாட்டுல வந்து முடிஞ்சது. 'முன்ன எல்லாம் யாராவது கஷ்டம்ன்னு வந்தா நம்ப use பண்ணினதைத்தான் கொடுப்போம். இப்போ எல்லாம் நம்ப புதுசாவே வாங்கித் தரோம். அப்போ நாம வளர்ந்திருக்கோம்ன்னு தானே அர்த்தம்ன்னு' நம்ப நாட்டோட வளர்ச்சி பத்தி நண்பர் சொன்னார். அவர் என்ன சொல்லவரார்ன்னு ஒருவாறு யூகித்துக் கொண்டேன். வறியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது நம் பண்பு தான். ஆனால் இல்லை என்று சொல்பவர்களே இல்லாத நிலையே வேண்டும். தெருவுக்கு ஒரு 'ATM' இருக்கு. ஆனா இன்னும் இல்லாமை இருக்கத்தான் செய்யறது. (அதுக்காக ATMம தூக்க முடியுமா:)) நானும் முடிந்தவரை அவரிடம் விளக்கினேன். கடைசியில் என்ன சொல்லவந்தார் என்பது எனக்கே புரியாமல் போய்விட்டது. இதைத்தான் ஒருவேளை வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதுன்னு சொன்னார்களோ?:(

No comments:

Post a Comment